Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்ச் சமூகம் நிரூபிக்க வேண்டிய தருணம் இது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்ச் சமூகம் நிரூபிக்க வேண்டிய தருணம் இது!
Saturday, August 13, 2022 - 6:00am

கடந்த ஒன்பதாம் திகதி கொழும்புக்கு சனவெள்ளத்தைத் திரட்டி வந்து புதிய அரசை உலுக்கி எடுப்பதற்கான முயற்சி வெற்றி பெறாது என்பதற்கான சமிக்ஞைகள் ஏற்கனவே தென்பட்டிருந்த நிலையில், அந்த 'அரகலய' பிசுபிசுத்துப் போனதோடு, வெற்றியின் இலக்கமாகக் கருதப்பட்ட அதே ஒன்பதாம் திகதி காலிமுகத்திடல் போராட்டத்தின் முடிவுரையாகவும் அமைந்தது.

போராட்டம் என்பது நீண்டு செல்லும் ஒன்றல்ல. ஓர் போராட்டத்தின் தேவைகளை சமூக, பொருளாதார சூழல்களே உருவாக்குகின்றன. அதற்கான தேவைகள் குறைந்ததும் போராட்ட வேகம் படிப்படியாகக் குறைந்து மறைந்து விடும். ஆனால் போராட்டத்துக்கான தேவைகளை மறுபடியும் உருவாக்காமல் இருப்பது ஆட்சியாளர்கள் அல்லது நிர்வாகிகளின் கடமை.

இன்றைய அரசியல் சூழலை நிலை மாறும் காலம் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும். மிக மோசமான ஒரு ஆட்சியும் அதன் எதிர்விளைவுகளும் மக்கள் போராட்டத்தை உருவாக்கின. இந்நிலையை மாற்றி மீண்டும் சுபீட்சத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்க முடியம் என்பதற்கான யோசனைகளும் உறுதிமொழிகளும் வழங்கப்பட்டதன் அடிப்படையிலேயே போராட்ட உணர்வு படிப்படியாக நீர்த்துப் போனது.

அடுத்த பயணத்துக்கு தயாராவதற்கு காலஅவகாசம் தரலாம் என்ற எண்ணமே இன்று பெரும்பாலான மக்கள் மத்தியில் நிலவுகிறது. இதைத்தான் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, போராட்டம் இப்போது வெளியில் இல்லை, மக்கள் மனதில் உள்ளது என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

இந்த நிலை மாறும் காலம் மிக முக்கியமானது. எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை இப்போது எடுக்கக் கூடிய தீர்மானங்கள் மற்றும் வகுக்கப்படக் கூடிய திட்டங்களே தீர்மானிக்கும். இக்காலப்பகுதியில் நடைபெறக் கூடிய பேச்சுவார்த்தைகள் மற்றும் முன்வைக்கப்படும் யோசனைகள் வழமையான தீவிர கட்சி அரசியல் நிலைப்பாடுகளில் இருந்து விலகி நெகிழ்வுத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டியது அவசியம். அப்போதான் கட்சிகள் கூட்டாக நாட்டின் பொதுநலன்களின் பேரில் முடிவுகளை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும். இதற்கு கட்சிகள் விட்டுக் கொடுப்புகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

 
 

இந்த வகையில் தமிழ்க் கட்சிகள் எவ்வளவு தூரம் நெகிழ்வுத் தன்மையுடன் நாட்டின் பொதுப் பிரச்சினைகளை அணுகவுள்ளன என்பதை மக்கள் அவதானிக்கவே செய்வார்கள். தமிழர்கள் எப்போதும் விசாலமான பார்வையற்ற, தமது பிரச்சினைகளை மட்டுமே பேசுகின்ற நாட்டின் பொதுவான பிரச்சினைகளில் அக்கறையற்றவர்கள் என்றொரு எண்ணம் பெரும்பான்மை சிங்கள மக்களிடம் உள்ளது. பிரதான சிங்களக் கட்சிகளும் அவ்வாறே கருதுகின்றன. இக்கருத்து, சர்வகட்சி நிர்வாக நடைமுறைத் தொடர்பாக தற்போது நடைபெற்றுவரும் பேச்சுவார்தைகளில் வெளிப்பட்டு விடக் கூடாது என்பது முக்கியம்.

கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய இ.தொ.கா. உறுப்பினர் ஜீவன் தொண்டமான், சர்வகட்சி அரசமைக்க தமது ஒத்துழைப்ப உண்டு என்றும் ஏனைய கட்சிகளும் தமது பங்களிப்பை இச்சமயத்தில் வழங்க முன்வர வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மலையக மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கட்சியின் உறுப்பினர் என்ற வகையில் அவரது உரை முன்மாதிரியானதாகவும் நாட்டின் இன்றைய நிலையில் இருந்து மீட்டெடுக்கும் முயற்சி அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் நடைபெற வேண்டியதன் அவசியத்தை குறிப்பதாகவும் அமைந்திருந்தமை பாராட்டுக்குரியது.

கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் சர்வகட்சி ஆட்சிக்கு ஆதரவு அளிக்கத் தயார் என்று கூறியவர்கள் இன்று ரணில் விக்கிரமசிங்கவும் விலகிச் செல்ல வேண்டும் என்று சொல்வது பொருத்தமற்றது என்றும் நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு சகல தரப்பினரும் நாட்டுக்காக சர்வகட்சி அரசில் ஒன்றிணைய வேண்டும், சிறந்த நோக்கங்களுக்காக சர்வகட்சி அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்ற ஜீவன் தொண்டமானின் உரையை சிறுபான்மை சமூகங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் சகல கட்சிகளும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தனிப்பட்ட நபராகப் பார்ப்பதும் அவர் சார்ந்த கட்சியின் கடந்தகால நடவடிக்கைகளை விமர்சனப் பார்வையுடன் நோக்குவதும் அவற்றை முன்வைத்து சர்வகட்சி நிர்வாகத்தில் பங்களிப்பு செய்ய விரும்பவில்லை என்று கூற முற்படுவதும் இச்சந்தர்ப்பத்தில் பொருத்தமானதல்ல என்று மிகச் சரியாக ஜீவன் தொண்டமான் கூறியிருக்கிறார்.

இ.தொ.கா. வெளிப்படையாகவே சர்வகட்சி ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் ஒரே காரணத்துக்காக தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பங்கெடுக்காது விடுமானால் அது சந்தர்ப்பத்தை நழுவ விடும் உத்தியாக மட்டுமே கருதப்பட முடியும். ஐ.தே.க.வுடன் முரண்பாடு போன்ற தனிப்பட்ட கோபதாபங்களை விட்டுவிட்டு நாடு என்ற அடிப்படையில் இணைந்து பணியாற்ற வேண்டிய நேரம் இது. தமிழ்ச் சமூகங்கள் எப்போதும் எதையாவது கேட்டுக் கொண்டிருக்கும் சமூகங்கள் அல்ல, கை கொடுக்க வேண்டிய தருணத்தில் கைத்தூக்கி விடும் சமூகமும் கூட என்பதை நிரூபிக்க வேண்டிய நேரம் இது.

தமிழ்ச் சமூகம் நிரூபிக்க வேண்டிய தருணம் இது! | தினகரன் (thinakaran.lk)

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nochchi said:

கை கொடுக்க வேண்டிய தருணத்தில் கைத்தூக்கி விடும் சமூகமும் கூட என்பதை நிரூபிக்க வேண்டிய நேரம் இது.

எங்களை விழுத்தி எழுந்திருக்க முடியாமல் மிதித்துக்கொண்டு தங்களை கைதூக்கி விடச்சொல்லி கூவுவது எந்தவகையில் நிஞாயம்? அப்படித்தான் முட்டி முனகி கைகொடுத்தாலும் எழுந்தவுடன் மீண்டும் விழுத்துவது எம்மையே. நாங்கள்  ஒன்றும் அவர்களிடம் பிச்சை கேட்டுக்கொண்டிருக்கவில்லை,  பறித்ததை தா என்றே கேட்க்கிறோம். நாடு என்கிற அடிப்படையா? சிங்கள பவுத்த நாட்டுக்கு எமது உதவி தேவையில்லை. அவர்கள் எங்களது உரிமையை தந்தால் நாடு பற்றி யோசிக்கலாம். இன்னும் எங்கள் பூமி பறிப்பதை நிறுத்தவில்லை,  கேட்டால் கலவரம் வெடிக்கும் என்று பயமுறுத்துகிறார்கள், எதற்கு எங்கள் உதவி? எங்கள் பாரம்பரிய  பூமியில்  எங்களுக்கு சுதந்திரம் இல்லை, நிம்மதியாக வாழ முடியவில்லை, எங்களுக்கு ஏது நாடு?

அது நாசமாய்ப் போகட்டும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, satan said:

எங்களை விழுத்தி எழுந்திருக்க முடியாமல் மிதித்துக்கொண்டு தங்களை கைதூக்கி விடச்சொல்லி கூவுவது எந்தவகையில் நிஞாயம்? அப்படித்தான் முட்டி முனகி கைகொடுத்தாலும் எழுந்தவுடன் மீண்டும் விழுத்துவது எம்மையே. நாங்கள்  ஒன்றும் அவர்களிடம் பிச்சை கேட்டுக்கொண்டிருக்கவில்லை,  பறித்ததை தா என்றே கேட்க்கிறோம்.

உண்மை, ஆனால் இனவாத மண்டையளுக்கு ஏறுமா? ஏன் எங்கட சம்-சும் கொம்பனிக்காவது ஏறுமா?

 அரசினது ஊதுகுழலே தினகரன். இதுபோன்ற கருத்துகளை அவர்களது தளத்தில் பின்னூட்டமாக எழுதினால் ஒருவேளை மாத்தியோசிப்பார்களோ தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.