Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தெற்கில் தோற்றும் மாற்றுத் தரப்பு தமிழர்களுக்கு பயன் ஏதும் தருமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-08-15

தெற்கில் தோற்றும் மாற்றுத் தரப்பு தமிழர்களுக்கு பயன் ஏதும் தருமா?

தென்னிலங்கையில் மீண்டும் ஒரு தடவை சந்திரிகா புராணம் பாடும் சூழல் எழுந்திருக்கின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலை அடுத்து, சுமார் 21 மாதங்களாக அரசியல் அஞ்ஞாதவாசம் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, நாடு திரும்பியிருக்கின்றார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகக் கிளர்ந்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டுப் பிரிந்து , ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவை உருவாக்கியிருக்கும் மங்கள சமரவீர ஸ்ரீபதி சூரியாராய்ச்சி அணிக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆசீர்வாதமும் ஆதரவும் இருக்கின்றன என்று கூறப்படுகின்றது. மஹிந்த அரசை வீழ்த்துவதற்கு மங்கள ஸ்ரீபதி அணி, ஐ. தே. கட்சித் தலைவர் ரணிலுடன் சேர்ந்து அமைத்திருக்கும் தேசிய காங்கிரஸுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆதரவும் பின்புல அரவணைப்பும் இருப்பதாகக் கருதும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள், சந்திரிகா ரணில் மங்கள என்ற முக்கூட்டு அணி, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெரும் அரசியல் தலையிடியாக அமையும் என்று ஆரூடம் கூறுகின்றன. இதுவே இன்று தென்னிலங்கையில் பரபரப்பாகப் பேசப்படும் அரசியல் விவகாரமாகவும் மாறியிருக்கின்றது.

தமிழர் தாயகத்தின் மீது தீவிரப் போர் ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் தற்போதைய அரசுத் தலைமையின் போர் முனைப்புப் போக்கால் தடுமாறிப் போயிருக்கும் தமிழர்களும், தென்னிலங்கையில் இந்த முக்கூட்டு அணியின் திடீர் எழுச்சி, தங்களுக்கு ஏதும் மீட்சியைத் தராதா என்று ஆதங்கத்துடன் நோக்குவதும் புரிகின்றது. ஒரு தட்டில் ஜனாதிபதி மஹிந்தரையும், மறு தட்டில் ரணில் சந்திரிகா மங்கள அணியையும் நிறுத்தி, அரசியல் அளவீடு ஒன்றை நடத்த வேண்டிய தேவை தமிழர்களுக்கு எழுந்துள்ளது. சரியோ, பிழையோ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தென்னிலங்கை தனது நிறைவேற்று அதிகாரத் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது தமிழர் தாயகம்தான். இந்தப் பின்புலத்திலேயே இந்த அளவீடும் அமைய வேண்டியிருக்கின்றது.

தென்னிலங்கையின் பௌத்த சிங்கள மேலாண்மைச் சக்திகளை அரவணைத்துக் கொண்டுதான் கடந்த ஜனாதிபதித் தேர்தலை மஹிந்த ராஜபக்ஷ எதிர்கொண்டார். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களில் இந்த பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகள் எழுத்தில் கொடுத்த நிபந்தனைகளை கையெழுத்திட்டு ஏற்று, அந்த உடன்பாட்டுடன்தான் அவர் தேர்தல் களத்தில் குதித்தார். அதுபோல, இன்றும் அதே மேலாண்மை சக்திகளோடு கைகோத்து, அரவணைத்து அவற்றின் விருப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் ஏற்ப தமது அரசை அவர் நடத்திச் செல்கின்றார். பேரினவாத சக்திகளை இணைத்துக் கொண்டுள்ள அவர், அந்த சக்திகளைத் திருப்திப்படுத்தும் வகையில் சிறுபான்மையினரான தமிழர்கள் மீது போர் முனைப்பையும், அரச அடக்கு முறையையும் கட்டவிழ்த்து விடுவதில் வியப்பு ஒன்றுமில்லை. அவர் ஜனாதிபதித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டால் இதைத்தான் செய்வார் என்று தமிழர்கள் எதிர்பார்க்க வேண்டியிருந்தது. இதற்கு மாறாக அவர் நடந்துகொள்வார் என்று கருதுவதற்கு அப்போது ஏதுமிருக்கவில்லை.

ஆக, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தம்மிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்டதை அட்சரம் பிசகாமல் அவர் இப்போது செயலுருக் கொடுத்து நிறைவேற்றி வருகின்றார். அவ்வளவே. ஆனால் உத்தேச ரணில் சந்திரிகா மங்கள கூட்டு அப்படிப்பட்டதல்ல. அத்தலைவர்களின் கடந்த காலத்தை நோக்குங்கள்.

தமிழர்களோடு பேசி அவர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண்பேன் என்று கூறி, நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவிப் பீடத்துக்கு ஏறி, பதினொரு ஆண்டுகள் நாட்டைத் தனது இரும்புப் பிடிக்குள் வைத்திருந்த ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, "சமாதானத்துக்கான யுத்தம்" என்ற பெயரில் விநோதமான கொள்கை ஒன்றை வகுத்து, தமிழர்கள் மீது மிக மோசமான மிகக் கொடூரமான மிகப் பெரிய அழிவுகளையும் மனிதாபிமான நெருக்கடிகளையும் ஏற்படுத்திய குரூரமான யுத்தம் ஒன்றைத் தமிழர் தாயகம் மீது கட்டவிழ்த்து விட்டு, இனப்படுகொலை அழிவுக்கு வழி செய்தார். தேர்தல் சமயத்தில் சமாதானத் தேவதையாகத் தோற்றி பின்னர், ஆட்சிக்காலத்தில் போர் வெறியராகத் தம்மை மாற்றிக் கொண்ட ஜனாதிபதி சந்திரிகாவைத் தமிழர்கள் கண்டார்கள்.

அதேபோலத்தான் ரணில் விக்கிரமசிங்கவும். ஜனாதிபதி சந்திரிகாவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில், நிதி, சட்டம் ஒழுங்கு, நில உரிமை, கல்வி போன்ற விடயங்களில் கணிசமான அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் பிரதேச சுயாட்சித்திட்டம் முன்வைக்கப்பட்டபோது நாடாளுமன்றுக்குள்ளேயே அதனைக் கிழித்தெறிந்து தீயிட வைத்தவர் ரணில். பின்னர் சமாதானத் தூதன் வேடத்தோடு களமிறங்கி 2001 டிசெம்பரில் பிரதமரான பின்னர், தாம் ஆட்சியிலிருந்த இரண்டு வருட காலத்தில் அவர் என்ன செய்தார்? ஈழத் தமிழர்களின் அன்றாட மனிதாபிமானப் பிரச்சினைகளையோ, அடிப்படை அரசியல் உரிமை விவகாரங்களையோ, நேர்மையோடும், நியாயம் செய்யும் உறுதியோடும் அவர் அணுகவில்லை. அந்த விவகாரங்களைத் தந்திரோபாயமாகப் பயன்படுத்தி, தமிழரின் போரியல் வலுவைச் சிதைக்க, சர்வதேச வலைப்பின்னல் என்ற சதித் திட்டத்தை அவர் நெறிப்படுத்தினார். உருப்படியான நீதி, நியாயமான செயல்முறை சாத்தியமான தீர்வுத்திட்டம் ஒன்றைத் தமிழர்களுக்கு வழங்குவதை விடுத்து, சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் அவர் விரித்து வைத்த சர்வதேச சதி வலைப்பின்னல் என்ற பொறி குறித்துத் தமிழர்களுக்கு நன்கு தெரியும்.

அதே வகையறாவைச் சேர்ந்தவர்தான் மங்களவும். இன்றைய ஜனாதிபதி ராஜபக்ஷவை பௌத்த சிங்களப் பேரினவாதிகளின் கன்னையில் அணி சேர்க்க மூல காரணர்களாக ஒற்றைக்காலில் நின்றவர்களுள் இவரும் ஒருவர். இப்போது வெளியே வந்து நின்று கொண்டு தான் அமைத்த கூடாரத்தையே வைகிறார் அவர்.

இந்த முக்கூட்டு அணி அதிகாரத்துக்கு வந்தால், இப்போது இருப்பதிலும் விட மேன்மையான நிலைமை தமிழர்களுக்குக் கிட்டும் என்று நம்புவதில் அர்த்தமில்லை. அது அபத்தமான நம்பிக்கையாகவே இருக்கும்.

தென்னிலங்கையில் மாறி மாறி ஆட்சிப்பீடம் ஏறும் எந்தத் தரப்பும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தாம் என்பதே தமிழர்களின் ஆறு தசாப்தகால அரசியல் பட்டறிவாகும்.

நன்றி - உதயன்

தெற்கில் தோற்றும் மாற்றுத் தரப்பு தமிழர்களுக்கு பயன் ஏதும் தருமா?

முதலில் இந்த மாற்றுத் தரப்பு சிங்களவருக்கு பயன் ஏதுன் கொடுக்குமா என்பதே கேள்விக்குறி..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.