Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை நீக்கம் - உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் தெரிவித்துள்ளது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

By RAJEEBAN

15 AUG, 2022 | 12:48 PM
image

2014 முதல் தடையும் தடைநீக்கமும் தொடர்கின்றது நாங்கள் தமிழ் பேசும் மக்களின் நியாயப்படுத்தக்கூடிய அபிலாசைகளை அடைவது குறித்தும் 2015 பொறுப்புக்கூறும் தீர்மானம் குறித்தும்   தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளோம் என உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் ஐலண்ட் நாளிதழிற்கு தெரிவித்துள்ளார்

2014 இல் என்னையும் உலக தமிழர் பேரவையையும் தடை செய்தார்கள்,2015இல் தடையை நீக்கினார்கள் 2021 இல் மீண்டும் தடை விதித்தார்கள் 2022 இல் தடையை நீக்கியுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் தமிழ் பேசும் மக்களின் நியாயப்படுத்தக்கூடிய அபிலாசைகளை அடைவது குறித்தும் 2015 பொறுப்புக்கூறும் தீர்மானம் குறித்தும்  தாங்கள் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளதாக தெரிவித்தார் என ஐலண்ட் தெரிவித்துள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஒவ்வொரு தடவையும் ராஜபக்சாக்கள் அது மகிந்தவாகயிருந்தாலும் சரி கோத்தபாயவாகயிருந்தாலும் சரி தங்கள் சீற்றத்துடனான எதிர்வினைக்காக எங்களை தடை செய்வார்கள் என சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார் என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன் பின்னர் எந்த அரசாங்கமோ இலங்கையின் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த முற்போக்கானவர்கள் உட்பட சர்வதேச அமைப்போ பரந்துபட்ட ஊடகங்களோ இந்த தடையை அங்கீகரிக்கவில்லை என்பதை பின்னர் உணருவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் மனித உரிமை பேரவையின் அமர்விற்கு முன்னர் ஆட்சியில் உள்ளவர்கள் எங்கள் மீதான தடையை நீக்குவார்கள்  2014 முதல் இது இடம்பெறுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சமூகமும் இலங்கையில் உள்ள ஊடகங்கள் அடங்கிய பங்குதாரர்களும் இந்த தடையின் அர்த்தத்தை புரிந்துகொண்டு அதனை அலட்சியம் செய்தமைக்காக உலக தமிழர் பேரவை நன்றியுடையதாக உள்ளது என சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

2014 முதல் 2021 வரையிலான இந்த தடை காரணமாக இலங்கை இழந்த அந்நிய செலவாணி குறித்து நாங்கள் மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளோம் வருடாந்தம் 300 மில்லியன் டொலர்களிற்கு மேல் இலங்கை இழந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளர் கமால்குணரட்ண முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்பீரிஸ் மற்றும் மோசமான பயங்கரவாத நிபுணர் ரோகன் குணரட்ண ஆகியோர் இந்த இழப்பிற்கான காரணத்தை ஏற்கவேண்டும்,தன்னிச்சையான முடிவுகளிற்காக அவர்கள் பொறுப்புக்கூறச்செய்யப்படவேண்டும்,இந்த தடைகளால் என்ன பயன் என்பதை அவர்கள் தெரிவிக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைப்புகளையும் தனிநபர்களையும் தடை செய்யும் நடவடிக்கை முழுவதும் தன்னிச்சையானது அர்த்தமற்றது இலங்கைக்குள் மாத்திரமல்ல சர்வதேச அளவில் உடன்பட மறுத்தலை கருத்துசுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நோக்கமாக கொண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை நீக்கம் - உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் தெரிவித்துள்ளது என்ன? | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமை பேரவை அமர்வு முடிய மீண்டும் தடை  தொடரும்? இல்லை, அவர்களுக்கு இப்போ கைதூக்கிவிட தமிழரின் கரம் வேண்டும்! தமிழரை அழித்து நாட்டை நாசப்படுத்த போட்டி  போட்டுகொண்டு ஓடியோடி உதவினார்கள், இப்போ தூக்கிவிட  ஒருவரும் முன்வர மறுக்கிறார்கள். விழுத்தப்பட்ட தழிழன் கரம் வேண்டுமாம். ஓடியாங்கோ தூங்குங்கோ மூச்சு நிக்கப்போகுது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.