Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கான உடனடியானதும் நீண்ட காலத்துக்குமான இலக்குகளுக்கு தீர்வு காணுதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கான உடனடியானதும் நீண்ட காலத்துக்குமான இலக்குகளுக்கு தீர்வு காணுதல்

 

 

மோசமான அரசாங்கத்தின் விளைவுகளை அனுபவித்தவர்களுக்கு அதிகளவுக்குத் தேவைப்படும் உதவியை மறுத்து மீண்டும் தண்டிக்கப்படக் கூடாது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், தற்போதுள்ள துன்பங்களை அதிகரிக்காமல் நிலையான வேகத்தில் பொருளாதார வளர்ச்சியை அனுமதிக்கும் முன்னோக்கி செல்வதற்கான பாதையை வழங்க சர்வதேச சமூகம் உதவ முடியும்.

சஷிங்க பூர்

லங்கை தற்போது பல தசாப்தங்களின் பின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. எரிபொருள், உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அந்நியச் செலாவணிக் கையிருப்பு இல்லாததால், பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மே மாதத்தில், இலங்கை தனது வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தவில்லை. சர்வதேச நாணய நிதியத்துடன் அதனை மீளக் கட்டமைக்க நடவடிக்கை எடுத்தது. ஆனால் நெருக்கடியைத் தீர்க்க முடியவில்லை. அதன் கடன்களுக்கான வட்டியை செலுத்துவதைக்கூட எதிர்கொள்ள முடியவில்லை என்று ஏ. பி செய்திகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட அரசாங்கம், பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க மறுத்ததால் நிலைமை மோசமடைந்தது. இது இறுதியில் எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடுவதற்கு வழிவகுத்ததுடன் , ஜனாதிபதியை இராஜிநாமா செய்யுமாறு நிர்ப்பந்தித்ததுடன் குடும்பத்தின் நண்பரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

cityscape-view-of-colombo-city-sri-lanka

தற்போது, ஏனைய நாடுகளுடனும் சர்வதேச நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தைகள் மூலம் பொருளாதார ரீதியில் மீட்சியடைவதற்கு இலங்கை முயற்சிக்கிறது. ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, இலங்கை அரசாங்கம் எரிபொருள் விநியோகத்தை அதிகரிக்கும் மற்றும் இறக்குமதியை உயர்த்தும் நம்பிக்கையில் வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களை தங்கள் உற்பத்திகளை விற்குமாறு கேட்டுக் கொள்கிறது.

இலங்கையின் உள்கட்டமைப்பில் கணிசமான அளவில் முதலீடு செய்துள்ள சீனாவுக்கான கடன்கள், இலங்கையின் மொத்த கடனில் 10 முதல் 20 சதவீதம் வரை உள்ளது. சீனாவுடனான பேச்சுவார்த்தைகளில் கடன்களை மீளக் கட்டமைப்பதை ஒரு முக்கிய பகுதியாக ஆக்குகிறது என்று சிஎன்பிசி தெரிவித்துள்ளது.

அமெரிக்க நிதியமைச்சர் ஜேனட் யெலன், ஒரு செய்தியாளர் சந்திப்பில், “கடனை மறுசீரமைப்பதற்காக இலங்கையுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருக்கும் என்பது எனது நம்பிக்கை – அது சீனா மற்றும் இலங்கை ஆகிய இரண்டினதும் நலனுக்கானதாக இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடன் கடன் நிவாரணம் அல்லது கடன்களை மறுசீரமைப்பதில் உதவுவதற்கான முயற்சிகளில் இலங்கை பல்வேறு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றுள்ளது. ஆனால் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று டி டபிள் யூ தெரிவித்துள்ளது.

srilanka-may-9th-300x200.jpg

பொருளாதார நெருக்கடிக்கு மக்கள் அளித்த பதில் எதிர்ப்பாகும். அரசாங்கத்தின் மீதான அவர்களின் அதிருப்தியை அது வெளிப்படுத்தியது. குறிப்பாக இந்தப் போராட்டங்கள் அமைதியான முறையில் அதிருப்தியைக் காண்பித்து , மாற்றத்தைக் கோருவதற்கு ஒரு சிறந்த உதாரணம். எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதி இல்லத்திற்குள் நுழைந்தபோது, அது கைவிடப்பட்டது, அதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் ஒழுங்கான முறையில் போராட்டம் நடத்தப்பட்டது என்று தி நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அவர்கள் ஜனாதிபதியை தப்பிச் செல்லச் செய்து இறுதியில் இராஜினாமா செய்வதில் வெற்றியடைந்தாலும், அரசாங்கத்தின் கட்டமைப்பு பிரச்சினைகளைத் தொடர இடமளித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, நெருக்கடிக்கு அரசாங்கத்தின் பதில் இல்லை. சுற்றுலாத்துறையின் வீழ்ச்சி , குறைந்த ஏற்றுமதி மற்றும் பெரிய வரிக் குறைப்புகளுடன் இது முதலில் தொடங்கியபோது, பிபிசியின்படி, பிரச்சினையை ஒப்புக்கொள்ள அரசாங்கம் மறுத்துவிட்டது. இந்த மறுப்பு முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதையும் , அதன் விளைவுகளின் தீவிரத்தை மட்டுப்படுத்துவதையும் மற்றும் விரைவான மீட்புக்கு அனுமதிப்பதையும் தடுத்தது. 2019 ஆம் ஆண்டின் அறிக்கையானது, ஐ.நா.வின் கூற்றுப்படி, கடனைத் திருப்பிச் செலுத்துவதே நாட்டின் மிகப்பெரிய செலவீனமாகும் என்று கண்டறிந்தது. அதன் பிறகு அரசாங்கம் கடன்களை மறுசீரமைக்க அல்லது திருப்பிச் செலுத்துவதற்கான ஆதரவுக்கு உள்நாட்டுக் கொள்கையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுத்திருக்கலாம். புதிய ஜனாதிபதி மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டதை விட பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவர் முன்னைய ஜனாதிபதியின் கூட்டாளியாக இருந்தார். இதனால், அவர் இன்னும் எதிர்ப்பாளர்களால் விரும்பப்படுவதில்லை.நியூயோர்க் டைம்சின் பிரகாரம் எதிர்ப்பாளர்களின் சில கோரிக்கைகளை நிறைவேற்ற சில முயற்சிகள் இருந்தபோதிலும், உள்நாட்டு அமைதியின்மை தொடரும்.

இலங்கையின் பொருளாதார மீட்சியில் கவனம் செலுத்துவது, சர்வதேச சமூகம் மற்றும் உள்நாட்டு அரசாங்கம் ஆகிய இரண்டும் மக்களின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்வதிலிருந்து தடுக்கிறது. “போதுமான பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை” இலங்கைக்கு எந்த நிதியையும் வழங்க உலக வங்கி மறுத்ததாக டி.டபிள்யூ தெரிவித்துள்ளது. இந்தக் கட்டமைப்பு முற்றிலும் அவசியமானதாக இருந்தாலும், பிரேசிலில் 1990 களின் முற்பகுதியில் தொடங்கி 10 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து சவால்களை எதிர்கொள்ளும் ஒரு செயற்பாட்டு மைக்ரோ பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை அமைப்பதற்கான உலக வங்கியின் சொந்த அறிக்கையின் மூலம் அதன் உருவாக்கம் நீண்ட காலம் எடுக்கும். ஏ .பி செய்தியில் பொருளாதார நிபுணர் அனித் முகர்ஜி எடுத்துக்காட்டியபடி, அதிகளவுக்கு உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவி வழங்குவதற்கும், அவர்கள் உதவி தவறாக நிர்வகிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் இடையே உள்ள உலகளாவிய பதற்றத்தை இந்தத் தேவை பிரதிபலிக்கிறது. உதவி வழங்க விரும்புவோர், உதவி தேவைப் படுபவர்களுக்குச் சென்று சேரும் என்பதை உறுதி செய்வதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும். ஆனால் உதவி வழங்குவதற்கு முன் செயற்படும் பொருளாதாரம் தேவைப்படும் தற்போதைய முறைமை இந்த விடயத்தில் தெளிவாக செயற்பட செய்யவில்லை.

Economic-crisis-300x171.png

தற்சமயம் உதவிகள் எவ்வாறு வழங்கப்படுகின்றன, முக்கியமாக அரசாங்கங்கள் மூலமாகவும் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக நியமிக்கப்பட்ட விதத்திலும் அது வழங்கப்படும் என்பது முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றாகும். இவ்வளவு உதவிகள் அரசாங்கத்தின் மூலம் வழங்கப்படுவதால், அது அரசாங்கத்தின் திறனையும் சரியான முறையில் விநியோகிக்கத் தயாராக இருப்பதையும் நம்பியுள்ளது. எவ்வாறாயினும், அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் ஊழல் காரணமாக இலங்கை உட்பட பல நாடுகள் மோசமான பொருளாதார சூழ்நிலையில் உள்ளன. ஊழலை தீர்க்கும் வரை உதவி வழங்கப்படாது, ஆனால் பொதுமக்களுக்கான ஆதரவு வழங்காமல் ஊழலுக்குத் தீர்வு காண்பது கடினம்.

இந்த விவகாரத்துக்குத் தீர்வு காண நாங்கள் முயற்சித்துள்ள ஒரு வழி, சிறிய அளவிலான விவசாயத்துக்கு யூ எஸ் எயிட்டின் நிதியுதவி போன்ற குறிப்பிட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் உதவிகளை மேற்கொள்வதாகும். இது தேவையில்லாத ஆட்களுக்கு உதவி செல்வதைத் தடுக்க உதவும் என்றாலும், பாதிக்கப்பட்டவர்களின் கண்ணோட்டத்தைப் பெறுவதற்குப் பதிலாக, உதவி வழங்கும் நாடுகள் யாருக்கு அதிகம் தேவை என்பதைத் தீர்மானிக்கின்றன. இலங்கையில் சீனா செய்வதாக வாஷிங்டன் போஸ்ட்டில் இஷான் தரூர் குற்றம் சாட்டியது போல், பணக்கார நாடுகளுக்கு உதவி தேவைப்படுபவர்களை தங்களுக்குப் பயனளிக்கும் வழிகளில் அபிவிருத்தி செய்ய கட்டாயப்படுத்தவும் இது இடமளிக்கும்.

அரசாங்கங்களுக்கிடையேயான நேரடிப் பரிவர்த்தனைகள், தங்கள் சொந்தப் பொருளாதாரக் கொள்கையுடன் போராடும் நாடுகளுக்கு உதவி வழங்குவதற்கான சிறந்த வழி அல்ல. ஏனெனில் ஒவ்வொரு அரசாங்கமும் தங்கள் சொந்த நலன்களைக் கொண்டுள்ளது. அது போராடும் மக்களிடமிருந்து வேறுபட்டிருக்கலாம். மாறாக, நாங்கள் வழங்கும் உதவிகளில் அரசு சாரா நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும். மேலும் மக்களின் உடனடித் தேவைகளை வழங்குவதற்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் இடையே சமநிலை இருக்க வேண்டும். உணவு, மருந்து, எரிபொருள் போன்ற தேவைகள் இலங்கையில் மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யும் அதே வேளையில், இலங்கை தனது சொந்த நுகர்வு மற்றும் வெளிநாட்டு நாணய கையிருப்புகளை மீளக் கட்டியெழுப்புவதற்காக ஏற்றுமதிக்கான பொருட்களைத் தொடர்ந்து உற்பத்தி செய்வதற்கு ஊக்குவிப்புகள் வழங்கப்பட வேண்டும்.

அரச சார்பற்ற நிறுவனங்கள், குறிப்பாக இலங்கையை தளமாகக் கொண்ட உதவிகள் எங்கு அதிகம் தேவைப்படுகின்றன என்பது பற்றிய அறிவைக் கொண்டவை. இணைந்து பணியாற்ற சிறந்தவை. அவர்கள் அரசாங்கத்தில் இருக்கும் எந்த ஊழலையும் புறக்கணித்து உள்ளூர் நிபுணத்துவத்தை வழங்குகிறார்கள்.

இலங்கையை நீண்ட காலமாக மீட்பதற்கு உதவும் அரசியல் மறுசீரமைப்புகளும் உள்ளன. அதிகாரத்தை தங்கள் சொந்த நலனுக்காகவும், நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு பாதகமாகவும் பயன்படுத்துபவர்களிடமிருந்து அதிகாரத்தை பரவலாக்குதல் கல்வியில் அதிகரித்த முதலீடு, அரசாங்கமோ அல்லது அரசு சாரா நிறுவனங்களோ, அரசாங்கத்துக்குள் நுழைவதற்கான கருவிகளை மிகவும் மாறுபட்ட குழுவுக்கு வழங்க முடியும். இது சிந்தனை மற்றும் கொள்கையின் பன்முகத்தன்மைக்கு வழிவகுக்கும். கூடுதலாக, வரிக் குறைப்புகளை மாற்றியமைப்பது மற்றும் செல்வந்தர்கள் மீது வரிகளைக் குவிப்பது இலங்கைக்குத் தேவையான வருவாயை தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் மற்றும் ஏற்றத்தாழ்வுகளை மோசமாக்கும் எந்தவொரு தீவிரமான சொத்துக் குவிப்பை மேற்கொள்வதை தடுக்கும்.

இறுதியில், இந்த ஆதரவு நீண்டகால பொருளாதார மீட்சியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு, மக்கள் இல்லாமல் வாழ முடியாத அவசரத் தேவைகளைத் தீர்ப்பதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். மக்கள் தொகைக்கு வளங்களின் அதிக ஸ்திரத்தன்மை நிறுவப்பட்டவுடன், மீட்சிக்கு உதவும் மற்றும் எதிர்கால நெருக்கடிகளைத் தடுக்கும் நீண்ட கால சீர்திருத்தங்களை நாம் பரிசீலிக்கலாம். இருப்பினும், இந்தத் திட்டங்கள் உதவி வழங்குவதற்கு முன் தேவைப்படக் கூடாது, ஏனெனில் மோசமான அரசாங்கத்தின் விளைவுகளை அனுபவித்தவர்களுக்கு அதிகளவுக்கு தேவைப்படும் உதவியை மறுத்து மீண்டும் தண்டிக்கப்படக் கூடாது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், தற்போதுள்ள துன்பங்களை அதிகரிக்காமல் நிலையான வேகத்தில் பொருளாதார வளர்ச்சியை அனுமதிக்கும் முன்னோக்கிச் செல்வதற்கான பாதையை வழங்க சர்வதேச சமூகம் உதவ முடியும்.

the organization for world peace

https://thinakkural.lk/article/201385

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.