Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடுமாறு இந்தியாவே ஊக்கப்படுத்தியது - மிலிந்த மொரகொட

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடுமாறு இந்தியாவே ஊக்கப்படுத்தியது - மிலிந்த மொரகொட

By RAJEEBAN

02 SEP, 2022 | 11:46 AM
image

சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கை நம்பிக்கை தருகின்றது என தெரிவித்துள்ள இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்தமொராகொட இந்தியாவிற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்துடனான ஆரம்ப கட்ட உடன்படிக்கையின் கீழ்; இலங்கை தொடரும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக 2.9 பில்லியன் டொலரை பெறவுள்ள பொருளாதார மீட்சி தொடர்பிலான முதல் நடவடிக்கை என தெரிவித்துள்ள மிலிந்தமொராகொட எனினும் இலங்கை முதலீடுகளையும் வெளிநாட்டு வருவாய்களையும் கவர்வதற்கான நம்பிக்கையை நாட்டிற்கும் முதலீட்டாளர்களிற்கும் இது வழங்கும் எனவும்குறிப்பிட்டுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஐடியா எக்சேஞ்சில் உரையாற்றுகையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கை காரணமாக மேலும் பல நாடுகள் உதவி வழங்கும் என இலங்கை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

அதேவேளை கட்டமைப்பு இல்லாமலே உதவமுன்வந்த நாடு இந்தியா எனவும் தெரிவித்துள்ளார்.

முக்கியமான விடயம் என்னவென்றால் பணியாளர் மட்ட உடன்படிக்கை எங்களிற்கு நம்பிக்கையை தருகின்றது,கிடைக்கவுள்ள நிதி மிகப்பெரியது இல்லை ஆனால் நம்பிக்கையை அளிக்கின்றது முதலாதுவது முதலீட்டாளர்கள் வருவதற்கும் இரண்டாவது வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் பணம் அதிகரிப்பதற்குமான -( தற்போது அரைவாசியாக குறைந்துள்ள) நம்பிக்கையை இது வழங்குகின்றது   என இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கைக்கு கடன்வழங்கும் ஜப்பான் போன்ற நாடுகள் வருவதற்கான நம்பிக்கையையும் இது வழங்குகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடுமாறு எங்களை ஊக்குவித்த  இந்தியாவிற்கு நன்றி என தெரிவித்துள்ள மிலிந்த மொராகொட எந்த திட்டமும் இன்றி உதவ முன்வந்த நாடு சகா இந்தியா மாத்திரமே எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் தனது வரலாற்றில் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை முன்னொருபோதும் இல்லாத குழப்பநிலைக்குள் சிக்கியது.மருந்து எரிபொருள் போன்றவற்றிற்கான கடும் தட்டுப்பாடு பாரிய ஆர்ப்பாட்டங்களிற்கு வழிவகுத்தது.இதுஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாட்டிலிருந்து தப்பியோடுவதற்கும் பின்னர் பதவியை இராஜினாமா செய்வதற்கும் வழிவகுத்தது.ஜனாதிபதி பதவியை தற்போது ரணில்விக்கிரமசிங்க பொறுப்பேற்றுள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்துடான உடன்படிக்கையை தொடர்ந்து வலுசக்தி  எண்ணை சுற்றுலாத்துறை ஆகிய துறைகளை இந்தியாவின் உதவியுடன் கட்டமைப்பு மாற்றங்களை மேற்கொள்ள கூடிய துறையாக அடையாளம் காணும் மிலிந்த மொராகொட இது பொருளாதார ஸ்திரதன்மையை மீண்டும் ஏற்படுத்த உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமான கட்டமைப்பு மாற்றங்களை மேற்கொள்ளும்போது இலகுவாக முன்னெடுக்ககூடிய துறை என்னவென்ற கேள்விக்கு நான் மின்சார துறையை தெரிவு செய்வேன் நான் இந்தியாவுடனான உறவுகளை பயன்படுத்துவேன் இந்தியாவுடனான மின்கட்டமைப்புடான இணைப்பை பயன்படுத்துவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மின்சார உற்பத்தியில் தனியார் முதலீட்டை பயன்படுத்துவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் அர்த்தம் என்னவென்றால் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி புதிய மின்நிலையங்கள் அல்லது ஏற்கனவே உள்ள மின்நிலையங்களை தனியார் மயப்படுத்தல் மூலம் கொள்வனவு செய்தல் எனவும் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/134889

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.