Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனப்பிரச்சினைத் தீர்வு யோசனை யானை பார்த்த குருடனது கதையே!-அரியநேத்திரன் எம்.பி. கூறுகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினைத் தீர்வு யோசனை

யானை பார்த்த குருடனது கதையே!

அரியநேத்திரன் எம்.பி. கூறுகிறார்

""சர்வகட்சி மாநாடு முன்னெடுத்துச் சென்ற இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் இந்த வாரம் வெளியிடப்படும், அடுத்தவாரம் வெளியிடப்படும் என்பதெல்லாம் சர்வதேச சமூகத்தையும் தமிழர்களையும் ஏமாற்றும் ஒரு நாடகமாகும். யானை பார்த்த குருடன் கதையாகவே இருக்குமே தவிர இதனால் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு எந்த விமோசனமும் கிடைக்கப்போவதில்லை.''

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.

சர்வகட்சி மாநாடு தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:

அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையில் ஆரவாரத்துடன் கூடிய சர்வகட்சி மாநாடு ஒரு காட்சி மாநாடாகவே பலமாதக்கணக்கில் கூடிக் கலைந்தது. சர்வதேசத்திற்கு காட்சிப் பொருளாக இருந்ததேனயன்றி உருப்படியான எந்தத் தீர்வையும் இதுவரை முன்வைக்கவில்லை. இந்நிலையில் பிரதான அரசியல் பெரும்பான்மைக் கட்சியாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கம் வகிக்கும் ஆளும் கட்சியாகவும் இருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியினால் கடந்த 2007 ஏப்ரல் 3ஆம் திகதி உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்டமானது பாலர் பாடசாலை மாணவர்களுக்கான அரிச்சுவடி போன்ற தீர்வாகவே இருந்தது.

இந்தத் தீர்வுத் திட்டத்தைத் தயாரித்தவர்கள் வடக்கு கிழக்கு தாயக மக்களை எந்தளவில் கொச்சைப்படுத்த முடியுமோ அந்தளவில் கொச்சைப்படுத்தும் ஒர் அரசியல் தீர்வை முன்வைத்தனர். இதனை அனைத்து தமிழ்க் கட்சிகளுமே குப்பைக் கூடைக் குள் கிழித்து வீசிவிட்டன.

வடக்கு கிழக்கு பூர்வீக தமிழர் தாயகத்தைத் துண்டாடியவர்கள் எந்தத் தீர்வையும் தங்கத் தட்டில் வைத்து த் தருவார்கள் என நாம் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.

இந்த நாட்டில் உள்ள பேரினவாத அரசியல் கட்சிகள் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையுடன் கூடிய எந்தவொரு அரசியல் தீர்வுத் திட்டத்தையும் முன்வைக்கமாட்டார்கள் என்பது கடந்த அறுபது வருடகால அனுபவமாகும்.

ஆனால், கட்சிகள் அனைத்தும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து தமது அரசியலை நடத்துவதுதான் வேடிக்கையான விடயம். 2004 ஜனவரி முதலாம் திகதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஜே.வி.பி. கட்சிக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தமானாலும் சரி, 2006 ஒக்டோபர் 23ஆம் திகதி ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கும், ஐ.தே.கட்சிக்கும் இடையில் செய்த ஒப்பந்தமானாலும் சரி, அண்மையில் கடந்த 2007 ஜூலை 19ஆம் திகதி ஐ.தே.கட்சிக்கும் ஸ்ரீல.சு.க. மக்கள் பிரிவுக் கட்சி ஒப்பந்தமானாலும் சரி தமிழ் மக்களின் தீர்வு யோசனை பற்றிக் கூறுவதும் பின்னர் அதில் இருந்து விலகுவதும் பேரினவாதக் கட்சிகளுக்கு கைவந்தகலை.

தற்போது மீண்டும் ஒரு புரளியாக இந்தவாரம் அல்லது அடுத்தவாரம் தீர்வுத் திட்டத்திற்கான இறுதிவரைவு தயாரித்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் எனப் பரபரப்பான செய்திகள் அரச தரப்பினால் விடப்படுகிறது. இந்தக் காதில் பூ வைக்கும் வெறும் வார்த்தைகள் கடந்த அறுபது வருடகாலமாகத் தமிழ் அரசியல் தலைவர்களும், தமிழ் மக்களும் கேட்டு காது புளித்துப்போய்விட்டது. ஆனால், சர்வதேசசமூகம் இன்னும் எத்தனை தடவை ஏமாறப் போகின்றது என்பதே இன்றுள்ள கேள்வி.

"உண்மை சொல்பவன் பயங்கரவாதி' என்ற நிலைதான் ஸ்ரீ லங்கா அரசியலில் தார்மீக மந்திரமாய் உள்ளது. அது எந்த நாட்டவனாலும், எந்த இனத்தவனானாலும் எந்த சமயத்தவன் என்ற வித்தியாசமின்றி இலங்கையின் மனித உரிமை மீறல்களைப் பற்றிக் கருத்துக் கூறும் எல்லோருமே பயங்காரவாதி என்ற முத்திரை தமிழர்களுக்குமட்டுமன்றி சர்வதேச இராஜதந்திரிகளுக்கும் சூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் சர்வதேச சமூகம் இனியும் மௌனம் காக்காது உண்மையை உணர்ந்து அடக்கப்பட்ட தமிழ் மக்களின் விடிவை தரக்கூடிய தீர்வுக்காக முன்னிற்று உழைக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுக்கின்றேன். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுடர் ஒளி

கண்ணிருந்தும் குருடர்களானவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.