Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருத்துச்சுதந்திரத்தின் மீதான அரசாங்கத்தின் மட்டுப்பாடுகள் அதிகார இருப்பை தக்கவைக்க முன்படுவதை காண்பிக்கிறது - கரு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துச்சுதந்திரத்தின் மீதான அரசாங்கத்தின் மட்டுப்பாடுகள் அதிகார இருப்பை தக்கவைக்க முன்படுவதை காண்பிக்கிறது - கரு

By T. SARANYA

09 SEP, 2022 | 11:05 PM
image

(நா.தனுஜா)

சுதந்திர, ஜனநாயக நாடொன்றில் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்குமான உரிமை என்பது இன்றியமையாததாகும்.

அவ்வாறிருக்கையில் அரசாங்கமொன்று அந்த உரிமையை மட்டுப்படுத்துமேயானால், அதன்மூலம் மக்களின் அபிலாஷைகளைவிடுத்து வெறுமனே அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதை மாத்திரம் இலக்காகக்கொண்டு செயற்படுகின்ற ஆட்சியாளர்களின் தன்மையே வெளிப்படுகின்றது என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இந்நாட்டு மக்கள் அனைவரினதும் ஒட்டுமொத்த அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைதியான முறையில் செயற்பட்ட இளம் போராட்டக்காரர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குமுறைகளை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவருமாறும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் போராட்டத்தில் முன்னணி செயற்பாட்டாளராகத் திகழ்ந்த பிரபல நடிகை தமிதா அபேரத்ன கடந்த புதன்கிழமை கைதுசெய்யப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் திலின கமகே நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில் நடிகை தமிதா அபேரத்னவின் கைது குறித்து சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே கரு ஜயசூரிய மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார். 

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

பிரபல நடிகையும் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதை முன்னிறுத்தி செயற்பட்ட இளம் செயற்பாட்டாளருமான தமிதா அபேரத்ன பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டமையானது அரசாங்கத்தின் ஜனநாயகவிரோத அபிலாஷைகளை வெளிப்படையாகக் காண்பித்திருக்கும் மற்றொரு சந்தர்ப்பமாக அமைந்திருக்கின்றது.

இலங்கைக்குள் அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்துவதென்பது அரச அடக்குமுறைக்கு உள்ளாவதற்கான ஒரு காரணமாக அமைந்திருப்பதாக ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் சுட்டிக்காட்டிவருகின்றது.

அண்மையில் தனியொரு குடும்பத்தின் ஆட்சிக்கு எதிராக நாட்டுமக்கள் முன்னெப்போதுமில்லாத வகையில் வீதிக்கு இறங்கி வெளிப்படுத்திய எதிர்ப்பின் மூலம் இவ்வாறான மக்கள்விரோத ஆட்சியை இனியொருபோதும் சகித்துக்கொள்ளமுடியாது என்ற செய்தியே தெளிவாகக் கூறப்பட்டது. 

மக்களின் அந்த எதிர்ப்புக் குறித்தே நடிகை தமிதா அபேரத்ன கடந்த காலங்களில் எடுத்துரைத்துவந்தார். எனவே அரசாங்கம் இவ்வாறான தன்னிச்சையான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு முன்னர் அதுகுறித்து ஓரிரு முறை சிந்தித்துப்பார்க்கவேண்டியது அவசியமாகும்.

அதேவேளை இந்நாட்டு மக்கள் அனைவரினதும் ஒட்டுமொத்த அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைதியான முறையில் செயற்பட்ட இளம் போராட்டக்காரர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குமுறைகளை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவருமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். 

அவர்களின் பின்னால் பாரியதொரு சக்தியாகத் திகழ்கின்ற பொதுமக்களின் குரலுக்கு உரியவாறு செவிசாய்க்குமாறும் கோருகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/135373

  • கருத்துக்கள உறவுகள்

நடிகை தமிதா சிறையில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஹிருணிகா தகவல்!

நடிகை தமிதா அபேரத்ன சிறைச்சாலையில் சித்திரவதைகளை எதிர்கொண்டுள்ளதாக ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

தமிதா அபேரத்னவின் நலம் விசாரிப்பதற்காக சிறைச்சாலை வைத்தியசாலை வளாகத்திற்குச் சென்ற போதே அவர் தன்னிடம் இவ்வாறு கூறியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

“தமிதா அபேரத்ன இப்போது மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பெண்களுடன் இருக்கிறார். அதைச் சொல்லுங்கள் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார். இதனால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று சிறை அதிகாரிகள் கூறுகின்றனர்.”

“அவளைப் பழிவாங்கவே இப்படிச் செய்திருக்கிறார்கள்.. தற்போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4 மணிக்கு கழிவறைக்கு போக வேண்டியிருந்தது. கதவில் தொங்கியப்படி பல மணி நேரம் அவர் கத்தியுள்ளார். பின்னர்தான் கழிப்பறைக்குச் செல்வதற்கு அவளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

“200 பெண்களுக்கு ஒரே ஒரு கழிப்பறைதான் உள்ளது. தமிதா உணவருந்தி கூட இல்லை. ரஞ்சன் கூறிய அனைத்தும் உண்மை என அவள் கூற சொன்னாள். தற்போது அந்த அனுபவத்தை அவள் சந்தித்து வருகிறாள்.

நேற்று கெட்டுப்போன பருப்புடன் பாண் சாப்பிட்டுள்ளாள், இப்போது அவளுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்று ஹிருணிகா கூறியுள்ளார்.

 

http://www.samakalam.com/நடிகை-தமிதா-சிறையில்-படு/

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

நடிகை தமிதா சிறையில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஹிருணிகா தகவல்!

நடிகை தமிதா அபேரத்ன சிறைச்சாலையில் சித்திரவதைகளை எதிர்கொண்டுள்ளதாக ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

தமிதா அபேரத்னவின் நலம் விசாரிப்பதற்காக சிறைச்சாலை வைத்தியசாலை வளாகத்திற்குச் சென்ற போதே அவர் தன்னிடம் இவ்வாறு கூறியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

“தமிதா அபேரத்ன இப்போது மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பெண்களுடன் இருக்கிறார். அதைச் சொல்லுங்கள் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார். இதனால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று சிறை அதிகாரிகள் கூறுகின்றனர்.”

“அவளைப் பழிவாங்கவே இப்படிச் செய்திருக்கிறார்கள்.. தற்போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4 மணிக்கு கழிவறைக்கு போக வேண்டியிருந்தது. கதவில் தொங்கியப்படி பல மணி நேரம் அவர் கத்தியுள்ளார். பின்னர்தான் கழிப்பறைக்குச் செல்வதற்கு அவளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

“200 பெண்களுக்கு ஒரே ஒரு கழிப்பறைதான் உள்ளது. தமிதா உணவருந்தி கூட இல்லை. ரஞ்சன் கூறிய அனைத்தும் உண்மை என அவள் கூற சொன்னாள். தற்போது அந்த அனுபவத்தை அவள் சந்தித்து வருகிறாள்.

நேற்று கெட்டுப்போன பருப்புடன் பாண் சாப்பிட்டுள்ளாள், இப்போது அவளுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்று ஹிருணிகா கூறியுள்ளார்.

 

http://www.samakalam.com/நடிகை-தமிதா-சிறையில்-படு/

 

எத்தனை தமிழ் இளைஞர்கள்.... அரசியல் பழிவாங்கலுக்காக, 
பல வருடங்களாக சிறையில் இருக்கிறார்கள். 
அவர்களுக்காக ... எந்த சிங்கள அரசியல்வாதியும் குரல் கொடுப்பதில்லை. 

தங்களுக்கு என்றவுடன்... பருப்பு சரியில்லை, பாண் சரியில்லை, கக்கூஸ் சரியில்லை... 
காய்ச்சல் வருகுது, பீச்சல் வருகுது...  என்று, கூவிக் கொண்டு திரிகிறார்கள்.   

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

 

எத்தனை தமிழ் இளைஞர்கள்.... அரசியல் பழிவாங்கலுக்காக, 
பல வருடங்களாக சிறையில் இருக்கிறார்கள். 
அவர்களுக்காக ... எந்த சிங்கள அரசியல்வாதியும் குரல் கொடுப்பதில்லை. 

தங்களுக்கு என்றவுடன்... பருப்பு சரியில்லை, பாண் சரியில்லை, கக்கூஸ் சரியில்லை... 
காய்ச்சல் வருகுது, பீச்சல் வருகுது...  என்று, கூவிக் கொண்டு திரிகிறார்கள்.   

கொஞ்சம் கருணை காட்டுங்கள்.

spacer.png

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

கொஞ்சம் கருணை காட்டுங்கள்.

spacer.png

spacer.png

Demonstration condemning land grabbing in Gummidipoondi |  கும்மிடிப்பூண்டியில் நிலம் ஆக்கிரமிப்பு கண்டித்து ஆர்ப்பாட்டம்அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயிலுநர் பட்டதாரிகள் ஒருநாள் வேலைநிறுத்தம்!

நீங்கள்...  நடிகை தமிதாவின் விசிறி என்ற படியால்... கருணை காட்டுகின்றோம். 😂
விடுதலை செய்... விடுதலை செய்... நடிகை தமிதாவை உடனே... விடுதலை செய். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

@கிருபன் 😂

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றார் நடிகை தமிதா அபேரத்ன

சிறைச்சாலைக்குச் சென்று... தமிதாவை சந்தித்தார், சஜித். – விடுதலை குறித்தும் வலியுறுத்து!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல நடிகை தமிதா அபேரத்னவின் சுகத்தை காண்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (திங்கட்கிழமை) காலை மெகசின் சிறைச்சாலைக்குச் சென்றார்.

சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், பொது மக்களின் போராட்டத்தை முன்னெடுத்த தமிதா அபேரத்ன போன்றவர்களை தற்போதைய அரசாங்கம் வேட்டையாடுவதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இன்று இளைஞர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். போராட்டத் தலைவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். சிவில் சமூகம் வேட்டையாடப்படுகிறது. இது ஜனநாயக நாட்டில் நடக்கக்கூடாத ஒன்று.

ஜனாதிபதி தலைமையிலான அரசை வலியுறுத்துகிறோம். குறிப்பாக தமிதா அபேரத்னவிற்கு விரைவாக விடுதலையை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

தயவு செய்து இந்த வேட்டையை நிறுத்துங்கள். இந்த நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதற்கு பதிலாக அவர்களை பாதுகாக்குமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம்.

குறிப்பாக இந்த நேரத்தில் தமிதா அபேரத்னவுடன் இணைந்து நிற்கின்றோம். அவரது விடுதலைக்காக நாங்கள் நிற்கின்றோம். அந்த விடுதலையை அடைவதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1298640

  • கருத்துக்கள உறவுகள்

@கிருபன்

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றார் நடிகை தமிதா அபேரத்ன

நடிகை தமிதா அபேரத்ன, பிணையில் விடுதலை.

கோட்டா கோ கம போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற நடிகை தமிதா அபேரத்னவை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

தமிதா அபேரத்ன சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரேரணை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட நீதவான் திலின கமகே, தலா 500000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து ஆர்ப்பாட்டத்தின் போது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டார்.

அதனையடுத்து, அவரை செப்டம்பர் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1298695

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.