Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தென்னிலங்கை அரசியல் முறுக்கேறுகின்றதா? சிக்கல்படுகின்றதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிலங்கை அரசியல் முறுக்கேறுகின்றதா? சிக்கல்படுகின்றதா?

[19 - August - 2007]

-பீஷ்மர்-

கடந்த வாரம் இலங்கை அரசு சர்வதேச நிலையில் மேலும் சில `அடி'களைத் தாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இலங்கையின் மனிதாபிமானப் பணி நிலைமைகளை அறிந்து கொள்வதற்காக வந்த ஹோம்ஸின் அறிக்கை அரசாங்கத்துக்கு பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்ற வருடம் மூதூரையடுத்து கொல்லப்பட்ட பிரஞ்சு நிறுவனத்தின் 17 ஊழியர்கள் கொலை செய்யப்பட்டது பற்றி சட்ட நடவடிக்கைகள் எவையும் இதுவரை எடுக்கப்படவில்லையென்ற ஹோம்ஸின் குறிப்பு இலங்கையின் பெயரை பெரிதும் பாதித்துள்ளது.

ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயை தவிர மற்றைய அமைச்சர்கள் இந்த வாக்குவாதத்தில் அதிகம் ஈடுபட்டதாக தெரியவில்லை.

இவையெல்லாவற்றுக்கும் மேலாக சர்வகட்சி மகாநாடு கூடுவது பற்றியும் அதன் வழியாக பொருத்தமான தீர்வு வரும் என்பது பற்றியும் எவ்வித நம்பிக்கைக்கும் இடமில்லாத வகையில் கட்சிகள் திணறுகின்றன.

இக் கூட்டத்தில் இவ்விடயம் பற்றி முஸ்லிம் கட்சிகள் எதுவும் பேசாதிருப்பது ஆச்சரியத்தைத் தர நியாயமில்லையென்றாலும் அவர்களுடைய அரசியல் மெத்தனத்தைப் புரிந்துகொள்வது வரவர சிரமமாகின்றது. ரவூப் ஹக்கீமின் குரலும் ஓங்கியொலிப்பதாக தெரியவில்லை.

மேற்கூறிய இடர்பாடுகள் யாவற்றுக்கும் மேலாக, ஜே.வி.பி. யின் நிலைப்பாடு மிகவும் சிக்கலாகியுள்ளது. விலைவாசிகள் ஏறிக்கொண்டு செல்வது, ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்துக் கொண்டு செல்வது காரணமாக அரசாங்கம் பற்றிய மக்கள் நிலை கசப்படையக் கசப்படைய ஜே.வி.பி. யின் நிலை சிக்கலாகின்றது.

கரு ஜயசூரிய தலைமையில் யூ.என்.பி. யின் ஒரு பகுதி அரசாங்கத்துடன் இணைந்ததன் பின்னர் இந்த அரசாங்கத்தை ஆதரிப்பதென்பது ஜே.வி.பி. க்கு மக்களிடையே செல்வாக்கைக் குறைக்கும் நடவடிக்கையாகவே அமைகின்றது. ஆனால், அதேவேளையில் புதியதொரு பாராளுமன்றத் தேர்தல் வரும்பொழுது இப்பொழுது அவர்களிடமுள்ள ஆசனங்களை தக்கவைத்துக் கொள்ள முடியுமா என்ற பயம் மிக மிக ஆக்கிரமித்துள்ளது என்றும் கூறப்படுகின்றது. எனவே, பாராளுமன்ற நிலையில் ஜே.வி.பி. யின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கப்போகின்றது என்பது ஜே.வி.பி. யினருக்கு பெருத்த தலையிடியை ஏற்படுத்தியுள்ளதொரு விடயமாகும்.

இந்தச் சூழலில் யுத்த வெற்றிகளைப் பற்றிப் பேசும் நிலைமை போய், யுத்த செலவுகளின் காரணமாகவே விலைவாசிகள் உயர்கின்றன என்ற கருத்து சாதாரண சிங்கள மக்களிடையே பரவுவதைத் தடுக்க முடியாதுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், இலங்கையின் தேசியப் பிரச்சினை அதாவது, தமிழ்- சிங்கள உறவு நிர்ணயம் கடந்த சில நாட்களாக மிகுந்த பின்னடைவையே பெற்றுள்ளது. ஆனால், அதேயிடத்தில் ஆட்கடத்தல், காணாமல்போதல் என்பன படிப்படியாக மேலோங்கிக் கொண்டு வருகின்றன.

தென்னிலங்கை மட்டத்தில் கடத்தப்பட்டோர் பெரும்பாலும் தமிழர்களே என்பது நிலைமையை மேலும் சிக்கல்படுத்துகின்றது. இத்தகையதொரு சூழலில் வெள்ளவத்தை விடுதியொன்றில் கிளேமோர் குண்டு கண்டெடுக்கப்பட்டதாக வந்த செய்தியை சிங்களத்துவ சக்திகள் சரியாக பயன்படுத்த முடியவில்லை. இந்த விடயத்தில் மனோ கணேசன் காட்டியுள்ள உடனடிப் பதிற்குறிகள் அரசாங்கத்தைத் தன்னிடத்து தலைநகரிலிருந்து தமிழர்களை விரட்டியடிக்கும் நோக்கில்லையென்று கூற வேண்டிய தற்காப்பு நிலைக்குத் தள்ளியுள்ளது.

இவற்றினூடே குழந்தைகளின் பாடசாலைகளுக்கான அனுமதி பற்றிய விடயம் குறிப்பாக, கொழும்பிலும் புறநகர்ப்பகுதிகளிலும் பெருத்த மனச் சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது. பாடசாலை அனுமதிக்கு பெற்றோரின் பொருளாதாரத் தகைமையும் ஒரு தேவை என்று கூறுவது அரசாங்கத்தை மேலும் இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளது.

இவை யாவும் கருத்து நிலைப்பட்ட சிக்கற்பாடுகள். இந்த சிக்கற்பாடுகளுக்கு உருவம் கொடுப்பது போன்று அமைகின்றது சந்திரிகா அம்மையாரின் மீள்வரவு. அவருடைய ஆதரவு யூ.என்.பி.- சு.க. மக்கள் பிரிவு கூட்டணிக்கே செல்லும் என்பது நிச்சயமாகிவிட்டது. இக்கட்டத்தில் இன்னுமொரு கசப்பான உண்மையை சொல்லியேயாக வேண்டும்.

மகிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் அவரது பிரதான அரசியல் எதிரி சந்திரிகா குமாரதுங்கவே. சந்திரிகா பிரதமராயிருந்த காலத்திலும் ஜனாதிபதியாகவிருந்த காலத்திலும் அவரது அரசாங்கக் கட்சிக்குள்ளிருந்து கொண்டு அவருக்கு பெரும் தலையிடி கொடுத்தவர் மகிந்த அவர்களே. மகிந்தவின் வளர்ச்சியை அவரால் தடுக்க முடியவில்லை.

சந்திரிகாவின் மீள்வரவு ஜனாதிபதி பெயரளவில் கூட சு.க. வின் தலைமையைப் பேணுவதற்கான பெருத்த சவாலாகவுள்ளது. நாம் ஏற்கனவே இப்பத்தியில் கூறியுள்ளபடி, பண்டாரநாயக்க குடும்பத்துக்கு எதிராக போகக்கூடியதொரு சுதந்திரக் கட்சியை சிங்கள மக்களால் கற்பனை செய்தும் பார்க்க முடியாது.

இப்பிரச்சினைகள் யாவற்றையும் பட்டியலிட்டுப் பார்க்கின்றபொழுது, இவை மிகப்பாரதூரமானவை என்பதிலே சந்தேகமிருக்க முடியாது. எனினும், ராஜபக்‌ஷ சகோதரர்களுக்கு இன்றுள்ள மிகப்பெரிய பாதுகாப்பு நிலை, எது எங்கு நடந்தாலும் யார் எதைச் செய்தாலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி 2011 வரை பதவியிலிருப்பார் என்பது நிச்சயம். அதனை எவரும் மாற்ற முடியாது.

அதாவது, இன்னும் மூன்றரை வருடங்களுக்கு ராஜபக்‌ஷ சகோதரர்கள் எவ்வித கிலேசமுமின்றி அதிகாரங்களைச் செலுத்தலாம்.

மேற்கூறிய அரசியல் சவால்களினிடையே ஜனாதிபதி முறைமையை மாற்ற வேண்டுமென்ற பேச்சே கிடையாது. இதிலிருந்து ஒன்று புலனாகின்றது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை எவரும் எதிர்க்கவில்லையென்பதாகும்.

அரசாங்கத்தை மிகுந்த ஆக்ரோஷத்துடன் எதிர்க்கும் ரணில் கூட, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை கேள்விக்குள்ளாக்க முடியவில்லை. இதுவொரு மிக முக்கியமான விடயமாகும். அதாவது, இப்பொழுது நடைமுறையிலுள்ள ஆட்சியாளர்களுக்கு எதிரான எதிர்ப்புகள் உண்டே தவிர, ஆட்சி முறைமைக்கு எதிரானவர்களல்ல. இந்த ஆட்சி முறைமையினை எல்லோரும் மௌனமாக ஏற்றுக் கொள்கின்றார்கள்.

இப்படியான சூழ்நிலையில் தமிழர் உரிமைப் போராட்டத்துக்கான சிரத்தை பூர்வமான பதிற்குறிகள் கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாது.

சர்வகட்சி ஒன்றிணைவு சாத்தியமில்லை என்றாகிவிட்டது. ஏனெனில், யு.என்.பி. இனிமேல் சர்வகட்சிக் கூட்டத்துக்கு செல்வதில்லையென தீர்மானித்துள்ளமையாகும்.

இத்தகைய பின்புலத்தில் தமிழர் உரிமைப் போராட்டத்தின் தேவைப்பாடும் நியாயப்பாடும் பற்றி வற்புறுத்த வேண்டுவது அவசியமாகும். இது விடயமாக சம்பந்தன் கூற்றுகள் முக்கியமானவையாகின்றன.

தென்னிலங்கையில் வளர்ந்து வரும் அரசியல் சூழல் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை முன்வைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகளை குறைக்கின்றதென்ற விசனத்தை பதிவு செய்ய வேண்டும். சர்வதேச நிலையில் இலங்கை அரசாங்கத்தின் நியாயபலத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.

வெட்டுக் காயங்களுடன் இருப்பவருக்கு பனடோலை மாத்திரம் மருந்தாகக் கொடுக்குமொரு சிகிச்சை முறையே அரசாங்க நிலையில் காணப்படுகின்றதெனலாம்.

நன்றி - தினக்குரல்

இலங்கையின் பொருளாதாரம் என்பதுதான் சிங்கள ஏகாதி பத்தியத்தின் முதுகெலும்பு.... அது தகரும் போது எல்லாம் சுபமாக அமையும்....!

Edited by தயா

இலங்கையின் பொருளாதாரம் என்பதுதான் சிங்கள ஏகாதி பத்தியத்தின் முதுகெலும்பு.... அது தகரும் போது எல்லாம் சுபமாக அமையும்....!

என்ன செய்வது? :lol::lol:

சிங்கள அரசியலில் புலிகளை வைத்துத்தான் எதிர்கால திட்டங்களே வகுக்கப்படுகின்றன. ஆனால் புலிகள் இவர்கள் வாசிக்கும் இராகங்களுக்கு ஆடுகிறார்களில்லை. சிங்களத்தின் கவலையே அதுதான். புலிகள் திருப்பி அடித்தாலாவது "அடிக்கிறான், அடிக்கிறான்" எண்டு கத்திக்குளறி யாரிடமவது காசுவாங்கலாம். அவங்கதான் நழுவி நழுவி போறாங்களே. :D:unsure:

சிங்களம் தனது பொருளாதாரத்திற்காக அலட்டிக்கொள்ளப் போவதில்லை. ஆட்சியதிகாரம் மட்டுமே அதனது நோக்கம். மக்கள் நாடு பொருளாதாரம் என்ற பதங்களெல்லாம் தமது மக்களையும் மற்றையவர்களையும் தம் நிலைபற்றிய மாயை ஒன்றிற்குள் வைத்திருக்கும் ஏற்பாடே தவிர வேறொன்றுமில்லை. சிங்கள மக்களிடையேயான யுத்தம் பற்றிய பயம் மட்டுமே அடிப்படையில் மாற்றங்களையேற்படுத்தும். நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் தமிழர்கள் மட்டும் வாடும்போது சிங்களவர் பிரதேசம் சந்தோசித்திருந்ததை நாம் காணவில்லையா? அதுவே ஆட்சியாளரினதும் சிங்கள பேரினவாத ஏகாதிபத்திய வாதிகளினம் தேவை. பொருளாதாரம் பற்றியவிடயம் அங்கு தேவைகருதியது மட்டுமே. சிறிமா, ஜெயவர்த்தனா காலத்தில் மாத்திரம் பொருளாதாரப் பிரச்சனை பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்டு ஆட்சியில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதுவும் அன்றைய பொருளாதாரநிலை தமிழருக்கு அதிக நன்மைகளைக் கொடுத்துக் கொண்டிருந்ததினால். தற்போது தமிழரின் பொருளாதாரமே அங்கு கேள்விக்கு உரியதாயிருக்க சிங்கள மக்களும் சிங்கள ஏகாதிபத்தியமும் அது பற்றி ஏன் சிந்திக்க வேண்டும். யுத்த பயம் ஒன்று மட்டுந்தான் தெற்கில் மாற்றங்களைக் கொண்டுவரக் கூடிய ஒரே மருந்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.