Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதா ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதா ? 

18 SEP, 2022 | 07:32 AM
image

 

விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக ஞாயிறு வெளியான இரு நாளிதழ்களில் பிரசுரமான செய்தி முற்றிலும் பொய்யானது எனவும் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை பூச்சிக்கொல்லி பதிவேட்டு அலுவலகத்தினால் அவ்வாறான ஆய்வு முடிவுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனவும் பூச்சிக்கொல்லி பதிவு அலுவலகத்தின் பதில் பதிவாளர் லசந்த ரத்னவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

 

2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வொன்றை மையப்படுத்தி, குறித்த செய்தித்தாள்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

எனினும், இந்தச் செய்திகளின் உள்ளடக்கங்களில் குறைபாடுகள் உள்ளதாகவும் ரத்னவீர கூறுகிறார்.

இவ்வாறான பொய்யான செய்திகள் மூலம் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்படக் என்பதால், இவ்வாறான விடயங்களை எழுதும்போது உரிய தரப்பினரிடம், சரியான தகவல்களைப் பெற்று, உறுதி செய்துகொள்வது மிகவும் பொருத்தமானது எனவும் பூச்சிக்கொல்லி பதிவு அலுவலகத்தின் பதில் பதிவாளர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ரத்னவீர,

இது 2017ஆம் ஆண்டு கண்டி பிரதேசத்தில் 68 மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளை அடிப்படையாக வைத்து இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது. 

ஆனால், இந்த ஆய்வுத் தகவல்களும் தவறாகப் பதிவாகியிருக்கிறது என்று ரத்னவீர சுட்டிக்காட்டுகிறார். 

வெற்று உலோகத் துகள்கள் பொதுவாக சிறிய அளவில் இருப்பதால், அவை பத்துலட்சத்தில் ஒரு பங்காகவே அளவிடப்படுகின்றன. ஆனால், அந்த வெற்று உலோகங்கள் நூற்றுக்கு ஒரு பங்கு வீதத்தில் இருப்பதாக இந்தப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து பூச்சிக்கொல்லி பதிவாளர் நாயகம் கூறுகையில்,

உலகில் எங்கும் சதவீதத்தில் வெற்று உலோகத்துகள் இருப்பதாக கண்டறியப்படவில்லை. அது நடைமுறையில் இல்லை. முறையான ஆய்வுகள் இன்றி இந்த ஆய்வு அறிக்கை பதிவாகியுள்ளது. 

தவறான கருத்துகளை பிரதிபலிக்கும் வகையில் தகவல்களை வெளியிடுவது பொதுமக்களுக்கு இடையூறாக மாறிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் நடத்தப்பட்ட சோதனைகளின் மூலம் இவ்வாறான எந்தவொரு முடிவுகளும் பதியப்படவில்லை என்றும் அவ்வாறு இருக்கும்பட்சத்தில் இப்படியான செய்திகளை வெளியிடுவது அடிப்படையற்றது என்றும் தெரிவித்தார்.

தவறான ஆதாரங்களுடன், வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்திகள் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் இந்த செயற்பாடு தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறையிட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சிசிர கொடிகார தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/135865

  • கருத்துக்கள உறவுகள்

அரிசியை அதிக விலைக்கு விற்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!

விஷம் கலந்த அரிசியை இறக்குமதி ?? – குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் அதிகாரிகள்!

விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை பூச்சிக்கொல்லி பதிவாளர் அலுவலகம் நிராகரித்துள்ளது.

விஷம் கலந்த அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இரண்டு பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் பொய்யானது என்றும் அந்த அலுவலகம் கூறியுள்ளது.

அவ்வாறு வெளியான செய்தியில் எவ்வித ஆதாரமும் இல்லை என பூச்சிக்கொல்லிகள் தொடர்பான பதில் பதிவாளர் லசந்த ரத்னவீர குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1299631

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஒரு விளையாட்டுக்குத்தான் உக்கிரைன் சனாதிபதியும் வளையுறார்...ரசியன் விட்டிட்டு  ஓடினைடங்களில் ...உணவுக்குதம் எல்லாவற்றிலும் இருந்த அரிசி ,கோதுமையில் அவன் எப்படியும் விசம் கலந்திருப்பான்...அதிலை இவருக்கு பெரிய சந்தேகம்...பங்களாதேசுக்கோ,பாகிஸ்தானுக்கோ அனுப்ப ஏலாது...அவங்களே இலங்கைக்கு கடன் குடுப்பவர்கள்...இப்ப நல்லதொரு பரிசோதனை எலி...இலங்கைதான்...அங்கை அனுப்பினால் ரசியனே  ...ஒன்றும் சொல்லமாட்டான் ... ஏதும் நடந்து ஆட்கள் செத்தாலும்  அவனுக்கு(ரசியனுக்கு) 2 வெற்றி....ஒன்று விசத்தின் வீரியம் அறிவது ..இரண்டு..நேரில் போய் பார்க்கலாம் ..இலங்கை ரசிய ஆதரவாளர்... செலன்சி படுகிற கஸ்டத்துகு ...உந்த அரிசி ,கோதுமையை தன்ரை சனத்துக்கு கொடுத்து அவையிடம் அடிவாங்கிறதை விட ...இலங்கை நல்ல பரிசோதனைக்கூடம்....

இலங்கை உந்த பரிசோதனச் சபைக்கு ஓசிவந்தால் சரி....நாமா சாகப்போகிறம்..சனம்தானே....இப்படியான வளைப்பு ஒன்றுக்குத்தான் செலன்சி போட்ட ஆயுதம் ..அந்த 9 மாணவர் கண்டுபிடிப்பு.....இப்ப என்ரை கண்டுபிடிப்பு எப்படி யிருக்கு🙃

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.