Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டனின் லெஸ்டரில் நகரில் இந்து முஸ்லிம் இளைஞர்களிடையே பதற்றம் - நடந்தது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனின் லெஸ்டரில் நகரில் இந்து முஸ்லிம் இளைஞர்களிடையே பதற்றம் - நடந்தது என்ன?

18 நிமிடங்களுக்கு முன்னர்
காணொளிக் குறிப்பு,

பிரிட்டனில் இந்து - முஸ்லிம் இளைஞர்களிடையே அமைதியின்மை

பிரிட்டன் நகரமான லெஸ்டரில், இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தினரிடையே நடைபெற்ற மோதலால் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது நாளாக போலீஸ் கண்காணிப்பும் தொடர்ந்து வருகிறது.

ஆகஸ்ட் 28ஆம் தேதி நடந்த சிறிய மோதலின் தொடர்ச்சியாக இந்த சம்பவம் நடந்துள்ளது. கடைசியாக, கடந்த சனிக்கிழமையன்று (செப்.17) இந்து மற்றும் முஸ்லிம் மதங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இடையே லெஸ்டர் நகரில் நடந்த இந்த மோதல், ஒரு 'திட்டமிடப்படாத போராட்டத்துக்கு' பிறகு தீவிரமடைந்தது என்கிறது காவல்துறை.

சுமார் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அந்த போராட்டத்தில் பங்கு கொண்டிருக்கலாம் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். கிழக்கு லெஸ்டரில் வசிக்கும் மக்களில் 37% பேர் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள். அதிலும் பெரும்பாலானோர் இந்தியர்கள்.

இந்த போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 15 பேரும் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இரவுக்குப் பின் நகரில் எந்தவிதமான வன்முறைகளோ குழப்பமோ நடைபெறவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், இரு பிரிவின் பிரதிநிதிகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதலில் 16 காவலர்கள் காயம்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்திய நேரப்படி செப்டம்பர் 20ஆம் தேதி மதியம் 12மணி வரை 47 பேர் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.

சம்பவத்தின் பின்னணி என்ன?

இந்த பதற்றமான சூழ்நிலை குறித்து லெஸ்டர் பகுதியிலுள்ள முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த சுலேமான் நாக்டி பிபிசியிடம் பேசியபோது, "வீதியில் நடந்த நிகழ்வுகள் எங்களுக்கு மிகவும் கவலையளிக்கின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு இங்கு பிரச்னைகள் இருந்தன. போட்டிக்கு பிறகு வீதியில் அடிக்கடி  கூட்டம் கூடிய நிகழ்வுகள் நடந்தன. ஆனால், அவை இவ்வளவு மோசமானதாக மாறவில்லை.  எங்களுக்கு அமைதி தேவை. இது இத்தோடு நிறுத்தப்பட வேண்டும். மிகவும் அதிருப்தி அடைந்த சில இளைஞர்களே இந்த குழப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்றனர்" என்று அவர் கூறினார்.

 

குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்

 

படக்குறிப்பு,

குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்

கடந்த சனிக்கிழமையன்று லெஸ்டர் நகரில் ஏற்பட்ட சட்டம், ஒழுங்கு பிரச்னை தன்னை மிகவும்  கவலையில் ஆழ்த்தியுள்ளதாக அந்த பகுதியிலுள்ள இந்து மற்றும் ஜெயின் கோவில்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சஞ்சீவ் படேல் கூறுகிறார்.

"நாங்கள் பல தசாப்தங்களாக இந்த நகரத்தில் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறோம். ஆனால் கடந்த சில வாரங்களாக மக்கள் அதிருப்தியுடன் இருப்பதற்கான காரணம் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது என்பது தெளிவாகிறது. வன்முறையைக் கையாள்வது இதுபோன்ற சூழ்நிலையை சமாளிப்பதற்கான வழி அல்ல. நேற்றும் கடந்த இரண்டு வாரங்களாகவும் நிலவி வரும் சூழ்நிலை குறித்து நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம்; இதற்காக வருத்தப்படுகிறோம்.  சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்புவது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்," என்றும் கூறுகிறார்.

பாட்டில் வீச்சு

இந்த நிலையில், இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள கிழக்கு லெஸ்டர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிளாடியா வெப், "அனைவரையும் வீட்டிற்கு செல்லுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பாதுகாப்பு குறித்து  குடும்பத்தினர் கவலைப்படுவார்கள், பதற்றத்தை தணிக்க முயற்சி செய்ய அழைப்பு விடுத்துள்ள காவல்துறையினரின் ஆலோசனையை தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள்," என்று கேட்டுக்கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆன்லைனில் வெளியான காணொளிகளில் பாட்டில்கள் வீசப்படுவதை பார்க்கமுடிகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் 28ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த கிரிக்கெட் போட்டிக்கு பிறகு, இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களை சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் வாழும் பிரிட்டனின் கிழக்கு லெஸ்டர் பகுதியில், மோதல் நடைபெற்றது. அதன் நீட்சியாகவே இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.

 

இரவில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர்

சனிக்கிழமை ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாகவும், "திட்டமிடப்படாத போராட்டத்திற்கு" பிறகு இந்த புதிய பிரச்னை வெடித்ததாகவும்,  கிழக்கு லெஸ்டரில்  தங்களது பாதுகாப்பு பணி தொடரும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக லெஸ்டர் காவல்துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அதிகளவிலான காவல்துறையினர் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் அமைதியை நிலைநாட்டுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு வன்முறை மற்றும் சேதம் தொடர்பான புகார்கள் குறித்து விசாரித்து வருகிறோம். மேலும், வழிபாட்டுத்தலம் ஒன்றின் வெளியே இருந்த கொடியை ஒருவர் அகற்றுவது போன்ற காணொளி பரவி வருவது குறித்து எங்களுக்கு தெரியும். இந்த சம்பவம் தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்படும்," என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இரவில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர்

இதுதொடர்பாக லண்டனில் உள்ள இந்திய உயர் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "லெஸ்டரில் இந்திய சமூகத்திற்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை மற்றும் இந்து மத வழிபாட்டுத்தலத்தின் வளாகங்கள், சின்னங்கள் சேதப்படுத்தப்பட்டதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இந்த விஷயத்தை நாங்கள் இங்கிலாந்து அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளதுடன், இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கமாறு கோரியுள்ளோம். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/global-62965186

  • கருத்துக்கள உறவுகள்

இந்து, முஸ்லிம் கலவரம் அல்ல.

இது இந்திய ஹிந்துக்களுக்கும் பாகிஸ்தானிய முஸ்லிம்களுக்கும் இடையில் நடைபெற்ற அடிதடி சண்டை. 

BBC தமிழ் இதனை இந்து முஸ்லிம் என  பொதுமைப் படுத்தி போராட்டமாகச் சித்தரிப்பது அயோக்கியத்தனம். 

இந்தியர்கள்தான் இந்த Brawl ல் ஈடுபட்டார்கள். தாக்கப்பட்டது பாகிஸ்தானியர்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லெஸ்டர் இந்து - முஸ்லிம் மோதல்: முடிவுக்குக் கொண்டு வர இரு சமூகத்தினரும் கூட்டறிக்கை

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

லெஸ்டர் இந்து-முஸ்லிம் மோதல்

பட மூலாதாரம்,LEICESTER MEDIA

பிரிட்டனின் லெஸ்டர் நகரில் நடந்த இந்து - முஸ்லிம் மோதல் மற்றும் போராட்டத்தைத் தொடர்ந்து பலரும் கைது செய்யப்படுகின்றனர். கடந்த வார இறுதியில் லெஸ்டரில் நடந்த போராட்டத்தில் கையில் கத்தி வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட ஒருவர், சமூக ஊடக பதிவுகளால் தான் ஈர்க்கப்பட்டு அப்படிச் செய்ததாகக் கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அடையாள அணிவகுப்பில் கத்தி வைத்திருந்ததை ஒப்புக்கொண்ட 21 வயதான ஆடம் யூசுஃப், இடைநிறுத்தி வைக்கப்பட்ட தண்டனையைப் பெற்றார்.

சனிக்கிழமையன்று ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து நடந்த போராட்டத்தில் 25 அதிகாரிகள் காயமடைந்தனர். ஒரு போலீஸ் நாயும் காயமுற்றது . இந்து, முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக இளைஞர்களால் இந்தப் பதற்றம் ஏற்பட்டது.

'போலிச் செய்தி'

லெஸ்டர் காவல்துறையின் தற்காலிக தலைமை கான்ஸ்டபிள் ராப் நிக்சன், சமூக ஊடகங்கள் இந்தப் பதற்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதில் "பெரும் பங்கு" வகித்ததாக பிபிசியிடம் கூறினார்.

மக்கள் மீதான தாக்குதல்கள், மத ஸ்தாபனங்கள் மீதான தாக்குதல்கள் போன்ற தகவல்களைச் சான்றுகளாகக் காட்டி, "இங்கே பொய்யான தகவல்கள் பரவுகின்றன" என்று கூறினார்.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

"சமூக ஊடகங்களில் அத்தகைய தகவல்களைப் பார்க்கும் மக்களால் அதைச் சரிபார்த்து உண்மையானதா என்பதை உறுதிசெய்ய முடியாவிட்டால், தயவு செய்து அதைப் பகிர வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள்.

ஏனெனில், எங்களுக்குத் தெரிந்தவரை, அவர்கள் சமூக ஊடகங்கள் வழியாக போலிச் செய்திகளைப் பெறுகிறார்கள். பிறகு அதை மற்றவர்களுக்குப் பகிர்கிறார்கள். இது சிக்கலை மேலும் அதிகரிக்கிறது, அச்சத்தை அதிகரிக்கிறது," என்று அவர் கூறினார்.

லெஸ்டரில் உள்ள ப்ரூயின் தெருவைச் சேர்ந்த யூசுஃப், அமைதியின்மை தொடர்பாக தண்டனை பெற்ற இருவரில் ஒருவர்.

லெஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், யூசுஃப் தான் வசித்த இடத்திற்கு அருகில் நடக்கும் நிகழ்வுகள் தொடர்பான "சமூக ஊடக பதிவுகளால் தன்னுள் தாக்கம்" ஏற்பட்டதாகவும், அதுகுறித்து "வருத்தமடைந்ததாகவும்" கூறினார்.

அவருக்கு அடுத்த 18 மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்ட, ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

யூசுஃபிற்கு தண்டனை விதித்த மாஜிஸ்திரேட், "இந்த நடத்தை பொறுத்துக்கொள்ளப்படாது. நம் நகரத்திற்கும் சமூக உறவுகளுக்கும் இது அவமானத்தை ஏற்படுத்துகிறது," என்று குறிப்பிட்டார்.

காணொளிக் குறிப்பு,

லெஸ்டர் நகரில் இந்து - முஸ்லிம் இளைஞர்களிடையே மோதல்

கைதுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதியிலிருந்து இந்த நகரில் கலவரம் தொடர்பாக 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 2 பேர் சனிக்கிழமையும் 18 பேர் ஞாயிற்றுக்கிழமையும் கைது செய்யப்பட்டனர்.

"பல மாதங்களுக்கு இல்லையென்றாலும், பல வாரங்களுக்காவது கைதுகள் தொடரலாம்" என்று நிக்சன் கூறினார்.

"எங்களிடம் சுமார் 50 பேர் கொண்ட புலனாய்வுக் குழு உள்ளது. அவர்கள் வெவ்வேறு கூறுகள் அனைத்தையும் கவனித்து வருகின்றனர். நாங்கள் மக்களின் தோற்றங்களை அடையாளம் காணத் தொடங்குகிறோம்," என்று கூறினார்.

லெஸ்டரின் இல்லிங்வொர்த் வீதியைச் சேர்ந்த 20 வயதான ஆமோஸ் நோரோனா, சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் ஆயுதம் வைத்திருந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு திங்கட்கிழமையன்று அவருக்கு 10 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

லெஸ்டரில் ஹோம்வே சாலையைச் சேர்ந்த 31 வயதான லுக்மான் படேல், ஆயுதம் வைத்திருந்ததற்காகவும் இனரீதியாக மோசமான துன்புறுத்தலைச் செய்ததாகவும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் தான் குற்றமற்றவர் என்று அவர் கூறுகிறார். மூன்றாவதாகக் கைது செய்யப்பட்ட லுக்மான் படேல் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

ஞாயிற்றுக்கிழமை மதியம் பெல்கிரேவ் சாலையில் போராட்டம் நடந்தது

 

படக்குறிப்பு,

ஞாயிற்றுக்கிழமை மதியம் பெல்கிரேவ் சாலையில் போராட்டம் நடந்தது

கிழக்கு லெஸ்டரில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைக்கு இடையிலான இரவு முழுவதும் "செயல்திறன் மிக்க ரோந்துப் பணிகளை" தொடர்ந்ததாகவும் புதிய சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

நிக்சன், வார இறுதியில் அதிகாரிகள் "குறிப்பிடத்தக்க அளவிலான மூர்க்கத்தை" எதிர்கொண்டதாகவும் 25 பேர் காயமடைந்ததாக அறியப்பட்டதாகவும் இருப்பினும் காயங்கள் எதுவும் பெரிதாக இல்லையென்றும் கூறினார்.

சனிக்கிழமையன்று நடந்த முக்கியமான பதற்றநிலை ஒரு போராட்டத்தால் தூண்டப்பட்டதாகவும் இவ்வளவு பேர் இதில் ஈடுபடுவார்கள் என்று காவல்துறைக்குத் தெரிந்திருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

"ஒரு கட்டத்தில் நாங்கள் 200 பேர் இருந்தனர். மறுபுறம் 600 முதல் 700 பேர் இருந்தனர். ஆகவே, மொத்தமாக சுமார் 800 முதல் 900 பேர் வரையிலான நபர்கள் மிகவும் நெருக்கமான பகுதியில் இருந்தனர். சுமார் 100 அல்லது அதற்கு மேற்பட்ட போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தியிருந்தனர். எங்களுடைய அதிகாரிகள் மிகவும் கடினமான சூழ்நிலையில் அற்புதமான பணியைச் செய்துள்ளதாக நான் கருதுகிறேன்," என்றார்.

ஞாயிற்றுக்கிழமை சுமார் 100 பேர் பங்கேற்ற மற்றொரு போராட்டம் நடந்தது. ஆனால், திங்கட்கிழமை இரவு முழுவதும் நிலைமை அமைதியாக இருந்தது என்று போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பர்மிங்ஹாமை சேர்ந்த சிலர் உட்பட நகரத்திற்கு வெளியிலிருந்து வந்திருந்தவர்களும் அடங்குவர்.

 

ஹம்பர்ஸ்டோன் சாலை

 

படக்குறிப்பு,

ஹம்பர்ஸ்டோன் சாலையில் அமைதியின்மையின்போது போலீசார் பல திசைகளில் சுற்றி வளைத்தனர்

"லெஸ்டருக்கு வெளியே உள்ளவர்கள் சமூக ஊடகங்களுக்குச் சென்று, 'இதில் நாம் உடன் நிற்போம், லெஸ்டருக்கு பயணிப்போம்' என்று பேசுவதாக நான் நினைக்கிறேன்," என்கிறார் நிக்சன்.

"இதன்மூலம் அவர்கள் லெஸ்டருக்கு வெளியிலிருந்து இந்த மோதலில் சேர்வதற்கு மக்களைத் தூண்டுகிறார்கள். இது சமூக ஊடக பதிவுகளால் தூண்டப்படுகிறது," என்கிறார்.

நகரத்திலுள்ள சமூகத் தலைவர்கள் காவல்துறையினருடன் சேர்ந்து அமைதியைக் காக்க அழைப்பு விடுத்துள்ளனர்.

நகர மேயர் சர் பீட்டர் சோல்ஸ்பி, "நாங்கள் லெஸ்டரில் உள்ள நல்ல சமூக உறவுகளைப் பற்றி அடிக்கடி பேசுகிறோம். ஆனால், நாம் அந்த விஷயத்தைப் பொறுத்தவரை முழு மனநிறைவை அடையமுடியாது. அந்த நல்லுறவை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

இது செயல்பாட்டில் தான் உள்ளது. இங்கே செய்ய வேண்டிய பணிகள் இன்னும் நிறைய உள்ளன என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது," என்று கூறினார்.

'இதற்கு முடிவுகட்ட வேண்டும்"

இந்து, முஸ்லிம் சமூகங்களின் கூட்டறிக்கையைப் படித்துக் காட்டிய பிரதீப் கஜ்ஜர் என்பவர், "இந்த அற்புதமான நகரத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இரு மதத்தினரும் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர்.

நாங்கள் ஒன்றாக இந்த நகரத்திற்கு வந்தோம், ஒன்றாக ஒரே மாதிரியான சவால்களை எதிர்கொண்டோம். கூட்டாக இந்த நகரத்தை பன்முகத்தன்மை, சமூக ஒற்றுமையின் கலங்கரை விளக்கமாக மாற்றினோம்."

"சிந்தனை, நடத்தை ஆகிய இரண்டிலும் வெளிப்படும் ஆத்திரமூட்டல் மற்றும் வன்முறையை உடனடியாக நிறுத்துமாறு நாங்கள் ஒற்றுமையாக அழைப்பு விடுக்கிறோம்," என்று கூறினார்.

https://www.bbc.com/tamil/global-62977596

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.