Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சட்டவிரோத உத்தரவுகளை நிறைவேற்றும் பொலிஸார் அதற்கான விலையை செலுத்தவேண்டியிருக்கும் - சாலிய பீரிஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரோத உத்தரவுகளை நிறைவேற்றும் பொலிஸார் அதற்கான விலையை செலுத்தவேண்டியிருக்கும் - சாலிய பீரிஸ்

By RAJEEBAN

10 OCT, 2022 | 11:20 AM
image

சட்டவிரோத உத்தரவுகளை நிறைவேற்றும் பொலிஸார் என்றோ ஒரு நாள் சட்டவிரோத உத்தரவுகளை நிறைவேற்றியமைக்கான விளைவுகளை அனுபவிக்கவேண்டியிருக்கும் என்பதை நினைவில் வைத்திருக்கவேண்டும் என  இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸார்  தங்கள் எஜமானர்களை திருப்திப்படுத்துவதற்காக மக்களின் உரிமைகளை மீறியவர்கள்   தங்கள் தவறுகளிற்கான விலைகளை செலுத்தியதை நான் பார்த்திருக்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சிலர் இழப்பீடுகளை செலுத்தினர்,தங்கள் பதவி உயர்வுகளை இழந்தனர் ஏனையவர்கள் குற்றங்களில் ஈடுபட்டமை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிறைதண்டனையை அனுபவித்தனர் என தெரிவித்துள்ள சாலியபீரிஸ் அந்த வேகைளில் அவர்களை காப்பாற்ற அவர்களின் எஜமானர்கள் காணப்படமாட்டார்கள் பொலிஸார் தண்டனைகளை தனியாக அனுபவிக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.சட்டவிரோத உத்தரவுகளை நிறைவேற்றும் பொலிஸார் அதற்கான விலையை செலுத்தவேண்டியிருக்கும் - சாலிய பீரிஸ் | Virakesari.lk

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரத்தில் உள்ளவர்களின் அலட்சியத்தினால் பொலிஸாரின் அடாவடி தொடர்கின்றது – சாலிய பீரிஸ்

By RAJEEBAN

13 NOV, 2022 | 09:11 AM
image

அதிகாரத்தில் உள்ளவர்களி;ன் அலட்சியம் காரணமாக காவல்துறையினரின் அடாவடிகள் தொடர்கின்றன என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ்  தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

police_bru.jpg

 

  இன்று ( 12-11- 22)

இடம்பெற்ற மூன்று சம்பவங்கள்  இலங்கை பொலிஸார் எவ்வளவு தூரம் தரம்தாழ்ந்துவிட்டனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

முதலாவது சம்பவம் கையில் பதாகைகளுடன் நடந்துகொண்டிருந்த பெண்களை பொலிஸார் துன்புறுத்தியது.

இரண்டாவது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பெண்பொஸிஸார் ஒருவரின் கழுத்தின் மீது கையை வைத்து அழுத்துவது.

மூன்றாவதாக சிரேஸ்ட சட்டத்தரணியொருவர் என்னை அழைத்து தனது உதவியாளரை அடையாள அட்டை வைத்திருக்கவில்லை என தெரிவித்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என தெரிவித்தார்.அவரை பொலிஸ் நிலையத்தில் வைத்துள்ளனர்.

பொலிஸாரை கையாளும் அதிகாரம் படைத்தவர்கள் அதிகாரத்தில் உள்ளவாகளின் தோல்வி மெத்தனப்போக்கினால் காவல்துறையின் ஈவிரக்கமற்ற தன்மைகள் தொடர்கின்றன 

அவமானம்

https://www.virakesari.lk/article/139839

  • கருத்துக்கள உறவுகள்

பாணந்துறை பொலிஸ் அதிகாரிக்கு எதிராக விசாரணை- பொலிஸ்மா அதிபர்

By RAJEEBAN

14 NOV, 2022 | 08:08 AM
image

பாணந்துறையை சேர்ந்த பெண்;பொலிஸாரை பொலிஸ் அதிகாரியொருவர் கழுத்தில் பிடித்து தள்ளிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

பாணந்துறை தெற்கு பொலிஸ்தலைமையகத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரியின் இந்த நடவடிக்கை குறித்து பொலிஸ்மா அதிபர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

police_bru.jpg

பொலிஸ் விசேட விசாரணை பிரிவை இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை கழுத்தில் பிடித்து தள்ளுவதை காண்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

https://www.virakesari.lk/article/139933

  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon of text

 

May be an illustration of one or more people

 

May be a cartoon of standing

  • கருத்துக்கள உறவுகள்

பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் கழுத்தைப் பிடித்து அச்சுறுத்திய பொலிஸ் அதிகாரியை சேவையிலிருந்து நீக்கவும் - கீதா குமாரசிங்க 

By DIGITAL DESK 2

14 NOV, 2022 | 05:31 PM
image

 

 

போராட்டத்தின்போது பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கழுத்தைப் பிடித்து அச்சுறுத்திய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியை சேவையிலிருந்து உடனடியாக இடைநிறுத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இன்று (14) தெரிவித்தார்.

 

Police.jpg

 மக்களைக் காக்க வேண்டிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி,  ஒரு பெண் பொலிஸ் உத்தியோகத்தரை மிகவும் விரும்பத்தகாத மற்றும் அவமானகரமான முறையில் கழுத்தைப் பிடித்து அச்சுறுத்திய செயலுக்கு தாம் மிகவும் வருந்துவதாகவும் இந்தச் செயலை  கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது பொலிஸ் சேவையில் சுமார் 9,000 பெண்கள் கடமையாற்றி வருவதாகவும், தாய்மார்கள் இவ்வாறானவற்றை எதிர்பார்த்து தமது பெண் பிள்ளைகளை பொலிஸ் சேவைக்கு அனுப்புவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/140022

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.