Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆனந்தசங்கரி-சித்தாத்தன்-ஸ்ரீதரன் ஜனாதிபதியுடன் வெள்ளியிரவு சந்திப்பு.

Featured Replies

த.வி.கூட்டணித் தலைவர் வி. ஆனந்தசங்கரியும் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் ஈ.பி.ஆர்.எல்.எவ். பதமநாபா பிரிவின் இணைப்பாளர் ஸ்ரீதரனும் நேற்று முன்தினமிரவு சிரிலங்ககா ஜனாதிபதி மஹிந்தவுடன் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

அலரிமாளிகையில் இரவு எட்டு மணிக்கு ஆரம்பமான அந்த பேச்சுவார்த்தை சுமார் இரண்டு மணிநேரம் நீடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவும் அங்கு இருந்துள்ளார்.

மட்டக்களப்பிற்கு கடந்த செவ்வாய்க்கிழமை மேற் கொண்ட விஜயத்தின் போது அங்குள்ள மக்கள் தெரிவித்த பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கும் நோக்கிலேயே இந்தச் சந்திப்பு இடம் பெற்றதாக கூறப்படுகின்றது.

இந்தச் சந்திப்பில் த.வி.கூட்டணித்தலைவர் வி. ஆனந்தசங்கரி புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா பிரிவின் இணைப்பாளர் ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து உருவாக்கவுள்ள அரசியல் கூட்டணி குறித்தும் ஜனாதிபதிக்கு விளக்கிக் கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழர் வி.கூட்டணி,ஈ.பி.ஆர்.எல்.எவ். பதமநாபா பிரிவு ஆகியனவற்றுடன் இணந்து அரசியல் முன்னணி ஒன்றை உருவாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் இதுவரை அந்த முன்னணிக்குப் பெயர்; சூட்டப்படவில்லை, என்றும் அதற்கான பேச்சுக்கள் தொடர்ந்தும் இடம் பெறுவதாகவும் புளொட் தலைவர் சித்தார்த்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து அவர் கூறுகையில்:-

மட்டக்களப்பு விஜயத்தின் போது நாங்கள் இனம் கண்ட பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் சமர்ப்பித்துள்ளளோம். குறிப்பாக மூதூர்,சம்பூர் ஈச்சிலம்பற்று ஆகிய பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களிலேயெ மீளக்குடியமாத்த வேண்டும் என்று ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம்.

அதற்கு அவர் சம்பூர் உயர்பாதுகாப்பு வலயம் என்பதால் அங்கே மக்களை மீளக் குடியமர்த்;துவது கடினம் என்று தெரிவித்தார்.

அத்துடன் மீளக்குடியேற்றப்பட்ட மக்களின் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்தும் ஆராய்ந்தோம். அதற்கு அவர், ஏற்கனவே அப்பகுதி மக்களுக்கான தொழில் வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. அத்தகைய வசதிகள் கிடைக்காதவர்களுக்கு தொடர்ந்தும் தொழில் வாய்ப்பு வசதிகளை பெற்றுக் கொடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

த.வி.கூட்டணி,ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா பிரிவு ஆகியனவற்றுடன் இணைந்து அரசியல் முன்னணி ஒன்றை உருவாக்கும் விடயம் குறித்தும் எமது முன்னணியில் ஏனையவர்களையும் இணைத்துக் கொள்வது குறித்தும் ஜனாதிபதியுடன் பேசினோம் என அவர் கூறினார்.

இந்த சந்திப்பில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத்திட்டம் குறித்தும் முன்னாள் ஜனாதிபதியின் வருகை மற்றும தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து பேசப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

நன்றி : கேசரி வாரவெளியீடு

பாவம் யாராவது இந்த துரோகக் குழுவுக்கு ஒரு பெயர் சூட்ட உதவுங்களேன. ஐயா சங்கரித்த சங்கரி மறக்காமல் கெல உறுமைய மொட்டைகளையும் முன்னணிக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள். இது எனது தாழ்வான வேண்டுகோள்.

Edited by Janarthanan

தமிழர் உரிமைகேளாக் கூட்டணி

ஜெனார்த்தனன் பெயர் ஓக்;கேவா?

(கனக்க நினைச்சன் ஆனா அதனை எழுதினால் களத்தில் இருந்து என்னை கலைச்சுப்போடுவினம். அதுதான் நாகரிகமாக வந்த ஒன்றை மட்டும் போட்டுக்கிடக்கு)

இந்தக் கூட்டத்திற்குப் பெயர் வைப்பதா? ம்ம்ம்ம்...........ம்ம்ம்ம்..........ம்ம

  • தொடங்கியவர்

மின்னல் தமிழ் என்டு வரக்கூடாது. இருந்தாலும் இரண்டு பெயரையும் அனுப்பி வைக்கலாம். ஆனா அவையள்; மஹிந்த தான் பெயர் வைக்கோனும் என்டு ஒத்தக்காலில நிக்கினம் போலக் கிடக்கு. எதுக்கும் அனுப்பிப் பாப்பம்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

அகில இலங்கை எட்டப்பர் கழகம்.

எல்லா நாய்களுக்கும் எலும்புத்துண்டினை கொடுத்திருப்பார் மகிந்த இனி வாலாட்டி கொன்டு இருபீனம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.