Jump to content

பிரித்தானிய அரசர் மீது முட்டை வீச்சு: மாணவர் ஒருவர் கைது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய அரசர் மீது முட்டை வீச்சு: மாணவர் ஒருவர் கைது!

பிரித்தானிய அரசர் மீது முட்டை வீச்சு: மாணவர் ஒருவர் கைது!

யோர்க்கில் நடந்த நடைபயணத்தின் போது பிரித்தானிய அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா மீது முட்டை வீசப்பட்டதைத் தொடர்ந்து மாணவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட 23 வயதான யோர்க் பல்கலைக்கழக மாணவர், பொது ஒழுங்கு மீறல் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று நோர்த் யார்க்ஷயர் பொலிஸார் தெரிவித்தனர்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர், முட்டைகளை வீசும்போது ‘இந்த நாடு அடிமைகளின் இரத்தத்தால் கட்டப்பட்டது’ என்று கூச்சலிட்டார், அதே நேரத்தில் கூட்டம் ‘கடவுள் ராஜாவைக் காப்பாற்றுங்கள்’ என்று கூச்சலிட்டது.

காணொளி காட்சிகளில் பல முட்டைகள் அசைந்து தரையில் அடித்து நொறுக்கப்பட்டன. ஆனால் வீசப்பட்ட அந்த மூன்று முட்டைகள் அரச குடும்பத்தினர் மீது படவில்லை. உள்ளூர் பிரமுகர்களால் தொடர்ந்து வரவேற்கப்பட்டு, கூடியிருந்த நலம் விரும்பிகளை சந்திக்கும் அரச தம்பதிகளை யாரும் தாக்கவில்லை.

புதிய மன்னரின் ஆட்சியின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் பிரித்தானியாவைச் சுற்றியுள்ள தொடர் பயணங்களின் ஒரு பகுதியாக சார்லஸ் மற்றும் கமிலா யோர்க் சென்றார்கள். அவர்கள் நகரின் கதீட்ரல், யோர்க் மினிஸ்டரில் நடந்த ஒரு சேவையில் கலந்து கொண்டனர், மேலும் 70 ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பரில் இறந்த அரசரின் தாயார் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் சிலையைத் திறந்து வைத்தனர்.

தம்பதிகளை வாழ்த்துவதற்காக நகரத்தின் பாரம்பரிய அரச நுழைவாயிலான மிக்லேகேட் பட்டியில் கூட்டம் கூடிய போது மற்றும் யார்க்ஷயருக்கு உத்தியோகபூர்வ அரச விஜயத்தின் இரண்டாவது நாளில் இந்த சம்பவம் நடந்தது.

https://athavannews.com/2022/1309777

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டன் அரசர் சார்ல்ஸை நோக்கி முட்டைகளை வீசிய நபர் கைது - என்ன நடந்தது?

9 நவம்பர் 2022
காணொளிக் குறிப்பு,

காணுங்கள்: அரசர் சார்ல்ஸை நோக்கி முட்டைகள் வீசப்படும் காணொளி

யார்க்குக்கு வருகை தந்த பிரிட்டன் அரசர் மற்றும் அரசி துணைவியை நோக்கி முட்டை வீசிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த தம்பதியை வாழ்த்துவதற்காக நகரின் பாரம்பரிய அரச நுழைவாயிலான மிக்கில்கேட் பாரில் கூட்டம் கூடியபோது, அவர்களிடையே இருந்த ஒரு எதிர்ப்பாளரின் திடீர் செயலைத் தொடர்ந்து அவர் காவல்துறையினரால் கட்டுப்படுத்தப்பட்டார்.

இருந்தபோதும், அந்த நேரத்தில் "இந்த நாடு அடிமைகளின் ரத்தத்தால் கட்டப்பட்டது" என்று அந்த நபர் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்.

நடந்த சம்பவம் குறித்து நார்த் யார்க்ஷயர் காவல்துறை கூறுகையில், "23 வயதான ஒரு நபர் பொது ஒழுங்கை மீறிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்," என்றது.

 

கூட்டத்தில் இருந்தவர்கள், "கடவுளே அரசரைக் காப்பாற்றுங்கள்" என்றும், எதிர்ப்பாளரை நோக்கி "உனக்கு அவமானம்" என்றும் குரல் எழுப்பினர்.

காணொளிக் குறிப்பு,

யார்க்கில் அரசர் சார்ல்ஸ் மீது முட்டைகளை வீசிய நபர் கைது செய்யப்பட்டார்

யார்க்ஷயருக்கு அலுவல்பூர்வமாக அரசர் வருகை தந்த இரண்டாம் நாளில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்த பயணத்தின்போது அரசருடன் அரசி துணைவியாரும் டான்காஸ்டருக்கு பயணம் செய்தார்.

இந்த அரச தம்பதியை யார்க்கில் நகரத் தலைவர்கள் வரவேற்றனர், அப்போது எதிர்ப்பாளர் தரப்பில் இருந்து அரச தம்பதியை நோக்கி ஏராளமான முட்டைகள் வீசப்பட்டன.அந்த நேரத்தில் லார்ட் மேயர் உள்ளிட்ட பிரமுகர்களுடன் அரசர் சார்ல்ஸ் கைகுலுக்கியபடி இருந்தார்.

திடீரென்று தரையில் விரிசல் விழுந்த முட்டை ஓடுகளைப் பார்க்க சில நொடிகள் அரசர் நின்று கீழே பார்த்தார்.

முட்டைகள் அரச தம்பதி மீது விழாதபோதும் அந்த பகுதியில் இருந்து இருவரையும் உடனடியாக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

இதேவேளை மற்றொரு அதிகாரிகள் குழு, அரசரின் வருகைக்காக அமைக்கப்பட்ட தற்காலிக வேலிகளுக்குப் பின்னால் சந்தேக நபரை தரையில் தடுத்து கட்டுப்படுத்துவதைக் காண முடிந்தது.

 

பிரிட்டன் கூட்டம்

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

மறைந்த தமது தாயின் சிலையை திறப்பதற்காக நகருக்கு வருகை தரும் அரசை வாழ்த்த மக்கள் திரண்டிருந்தபோது எதிர்ப்பாளரின் குரல்கள் கேட்கப்பட்டன.

சம்பவத்தை நேரில் பார்த்த ப்ளாசம் ஸ்ட்ரீட் கேலரியின் உரிமையாளரான கிம் ஓல்ட்ஃபீல்ட், தனது கடையின் வாசலில் நின்று தம்பதியின் வருகையை "மகிழ்ந்து" கொண்டிருந்தபோது "திடீரென சத்தமும் முட்டைகளும் பறந்தன" என்று கூறினார்.

"நான் முழுவதையும் பார்த்தேன், போலீசார் தடுப்பு மீது ஏறி அந்த நபரின் மேலே படுத்து அவரை கட்டுப்படுத்த முயன்றனர்.

"அதற்குள்ளாக அந்த நபரால் ஐந்து முட்டைகளை வீச முடிந்தது."

"சத்தம் தொடங்கும் போது கமில்லா கொஞ்சம் பதற்றமாக இருந்தார். ஆனால் மிக விரைவாகவே நிலைமையை காவல்துறையினர் கையாண்டனர். அந்த நபரின் அவமானகர செயல் ஒரு அழகான தருணத்தை கெடுத்துவிட்டது," என்கிறார் கிம் ஓல்ட்ஃபீல்ட்.

 

2px presentational grey line

 

Analysis box by Sean Coughlan, royal correspondent

எதிர்ப்பாளரால் வீசப்பட்ட முட்டைகள் சம்பவம், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அரசர் எவ்வளவு ஆபத்தை சந்திக்கக் கூடிய சூழலில் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது என்கிறார் அரண்மனைக்கான பிபிசி செய்தியாளர் சீன் கோக்லான். நடந்த சம்பவம் குறித்த அவரது பார்வை:

"அரசர் சார்ல்ஸ் நலம் விரும்பிகள் அடங்கிய கூட்டத்திடம் மிகவும் அணுகக்கூடிய நபராகவே இருந்துள்ளார். மக்களுடன் கைகுலுக்கி வருவதும் நகைச்சுவைகளை பரிமாறிக் கொள்வதும் என மக்கள் சந்திப்பு பயணத்தின்போது உண்மையிலேயே அவர் ஒரு அரசரைப் போலவே மாறினார்.

அரசர், தனது தாயின் மரணத்திற்கு அடுத்த சில நாட்களில் மக்களைச் சந்தித்த போது அவர்களின் அரவணைப்பை அனுபவித்ததாகவே தோன்றுகிறது. நேற்று அவர் லீட்ஸின் வீதிகளில் வரிசையாக நிற்கும் கூட்டத்தை வாழ்த்தினார். அந்த தருணத்தை பதிவு செய்த செல்பேசி புகைப்பட கிளிக்குகளையும் அவர் எதிர்கொண்டார்.

ஒரு அமெரிக்க அதிபரை சுற்றியுள்ள அடர்த்தியான பாதுகாப்பிற்கு சற்று குறைவாகவே இந்த நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு இருந்திருக்கும். எனவே பிரிட்டனில் உள்ள மூத்த அரசியல்வாதிகள், இத்தகைய கூட்டத்தின் சீரற்ற தன்மையால் இனி இதுபோல வெளிப்படையாக நடந்து கொள்ள வாய்ப்பில்லை. கூட்டத்துக்கு வரும் மக்களில் யார் எதை எடுத்து வருவார்கள் என யாருக்குத் தெரியும்?

ஆனால் பாதுகாப்பாக வலம் வருவதற்கும், மக்களிடையே அணுகும் முகமாக இருப்பதற்கும் இடையே எப்போதும் ஒரு பாகுபாடு இருக்கவே செய்யும். இதுவே கட்டுப்படுத்தப்பட்ட நிகழ்வுகளாக இருந்தால் அரசருக்கும் கூட்டத்திற்கும் இடையில் சிறிய இடைவெளி ஏற்படுத்தப்படும்.

இந்த நிகழ்வின் மறுபுறம் 'இவர் என் ராஜா அல்ல' என்ற பதாகையுடன் சில போராட்டக்காரர்கள் காணப்பட்டனர். அவர்கள் நின்றிருந்த சில அடி தூரத்தில் இருந்து தான் முட்டைகள் வீசப்பட்டன.

ஆனால், நடந்த நிகழ்வால் அரசர் கவலைப்படவில்லை என்றே தோன்றுகிறது. காவல்துறை விரைவாக எதிர்வினையாற்றியது. ஆனால் அதற்குள் முட்டைகள் வீசப்பட்டு விட்டன," என்கிறார் சீன் கோக்லான்.

 

2px presentational grey line

யார்க் நகருக்கு அதிகாரபூர்வமாக வருகை தரும் அரசரை லார்ட் மேயர் வரவேற்கும் பாரம்பரிய நிகழ்வில் நின்றிருந்த கூட்டத்தில் அரசர் சார்ல்ஸ் குழப்பமில்லாமல் தோன்றினார்.

இத்தகைய பாரம்பரிய நிகழ்வில் அரசரின் தாய் ராணி இரண்டாம் எலிசபெத் 2012ஆம் ஆண்டு கலந்து கொண்டார்.

இப்போது அரசர் மற்றும் அரசி துணைவியார் யார்க் மின்ஸ்டரில் மாட்சிமை வாய்ந்த அரசியின் சிலையை திறப்பதற்காக யார்க்கிற்குச் வந்துள்ளனர். மறைந்த அரசியாரின் மரணத்திற்குப் பிறகு நிறுவப்பட்ட அவரது முதல் சிலையின் திறப்பு விழா நிகழ்ச்சி இதுவாகும்.

யார்க் பேராயர், ஸ்டீபன் காட்ரெல், "நடந்த சம்பவம் பொதுமக்களை சந்திப்பதில் இருந்து அரச தம்பதியை தடுக்காது," என்று கூறினார்.

அவர் பிபிசியிடம் பேசுகையில், "பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் சில சமயங்களில் பாதிக்கப்படக்கூடிய நிலைகளில் இருக்கிறார்கள். நாம் சந்திக்க முடியாத அளவுக்கும் அரட்டை அடிக்க முடியாத அளவுக்கும் சிந்தனை கொண்ட மக்கள் அல்லாத ஒரு நாட்டில் உண்மையில் உலகில் வாழவே நான் ஆசைப்படுகிறேன்," என்கிறார்.

"நிச்சயமாக அரசியும் அரசி துணைவியாரும் இதைத்தான் விரும்புகிறார்கள். அவர்கள் மக்களுடன் [பின்னர்] கலந்துரையாடிக் கொண்டிருந்தார்கள். அதனால் நடந்த சம்பவம் தங்களை பாதித்து விட அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்," என்கிறார் பேராயர் ஸ்டீபன் காட்ரெல்.

 

அரசர் சார்ல்ஸ்

 

படக்குறிப்பு,

வீசப்பட்ட முட்டைகள் அரச தம்பதி மீது விழவில்லை

 

பிரிட்டன் அரசர் சார்ல்ஸ்

 

படக்குறிப்பு,

யார்க்கில் அரசர் மூன்றாம் சார்ல்ஸ் மற்றும் கமில்லாவை காண அலைமோதிய மக்கள் கூட்டம்.

பின்னர், செளத் யார்க்ஷயரில் உள்ள டான்காஸ்டருக்கு அதன் நகர அந்தஸ்தை முறையாக வழங்குவதற்காக அரசர் வந்தபோது, அவரை உள்ளூர் மக்கள் வரவேற்று உற்சாகப்படுத்தினர்.

சார்ல்ஸ் மற்றும் கமில்லா பின்னர் முட்டை மற்றும் வாட்டர்கெஸ் சாண்ட்விச்கள் உள்ளிட்ட மெனுவுடன் கூடிய விருந்து அடங்கிய வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

பிரிட்டன் அரசர் சார்ல்ஸ்

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

டான்காஸ்டருக்கு நகர அந்தஸ்தை வழங்குவதற்காக மேன்ஷன் ஹவுஸுக்கு வந்த அரசர் தமது நலம் விரும்பிகளைச் சந்தித்து கைகுலுகுக்கிறார்.

https://www.bbc.com/tamil/global-63571699

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்வியறிவுள்ள, பல்வேறு தொடர்புகளுள், ஆழுமையுள்ளசுமந்திரனும் சாணக்கியனும் TNA க்குத் தலைமை தாங்கி  வழிநடாத்த வேண்டும்,...👍 ஏனப்பா,.. ஒரு குசும்புக்கு எழுதினாலும் விசுகர் தடியோடதான் நிக்கிறார் கண்டியளோ,..🤣
    • புதிய ஜனாதிபதி அநுரவின் கட்சிக்கு கணிசமான அளவு வாக்குகள் வடக்கு/கிழக்கில் வரும் பொதுதேர்தலில் கிடைக்கலாம். ஆனால் அவை ஆசனத்தை பெறுவதற்கு போதுமானதாக அமையுமா என்பது சந்தேகமே.
    • நாங்கள் சிறுவயதில் காலைக்காட்சி, மாலைக்காட்சி, கடற்கரைக்காட்சி என்று சோதனையில் வந்த கேள்விகளுக்கு ஏற்றமாதிரி கட்டுரை எழுதுவது போலத் தான் இருக்கின்றது இந்த பகிரங்கக் கடிதம்.  இதை எழுதியவர் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்கச் சொன்னவராக இருக்கலாம், இல்லாவிட்டால் இலங்கைச் சிங்கள ஒற்றை ஆட்சிப் பாராளுமன்றம் தேவையில்லை, எங்களின் ஒற்றுமை மட்டுமே முக்கியம், அதை சர்வதேசத்திற்கு காட்டினால் போதும் என்று சொன்னவராக இருக்கலாம். ஒரு அணுக்கமான அரசியல் செய்வோம் என்று சொன்னவராக இருக்கலாம். இன்னும் சில வகைகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் நியாயங்கள் இருக்கிறது தானே........... நாங்கள் எழுதிய காலை, மாலை, கடற்கரை காட்சிக் கட்டுரைகள் போலவே. சொன்னவர் யார் என்று தெரிந்தால் தான், இதில் இருக்கும் சொற்களையும், வசனங்களையும் கடந்து, அதில் மறைந்திருக்கும் உட்பொருளை விளங்கிக்கொள்ள முடியும். நித்தியின், ஜக்கியின் மற்றும் பல குருக்களின் பக்தர்களும் இதையே தான் சொல்கின்றனர். குருவின் தனிப்பட்ட வாழ்க்கையை விட்டு விட்டு, குரு சொல்வதை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள் என்று....... உங்கள் குருக்களே தங்கள் சுகபோக வாழ்க்கைகளுக்காக மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இறுதியில் உங்களையும், உங்கள் குடும்பங்களையும் நடுத்தெருவில் நிற்பாட்டுவார்கள் என்று தானே நாங்கள் அவர்களுக்கு எதிர்க் கருத்துகள் சொல்லுகின்றோம். இதை எழுதியவர் கூட அப்படியான ஒருவராக இருக்கலாம். இப்பொழுது பாராளுமன்றம் முக்கியம், அங்கு போவது முக்கியம், அதிகாரம் முக்கியம்............. என்கின்றனர். உண்மையே, இவை எல்லாம் முக்கியம். இவை எப்போதும் முக்கியமானவையாக இருந்தன. அத்துடன், இதைச் சொல்பவர் முன்னர் என்ன சொல்லியிருந்தார் என்று அறிதலும் முக்கியம் தானே............    
    • 👆 Thank God, I have not been so ruthless as the guy above in dealing with relatives. I seem to be fair enough 👇    
    • கொழும்பில் போட்டியிடும் தமிழரசு கட்சி..! பங்காளி கட்சிகளுக்கு கால அவகாசம் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டமானது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.  இதற்கமைய, ரெலோ மற்றும் ப்ளொட் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மூன்று நாட்களுக்குள் தமது முடிவு எட்டப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி போட்டியிடுவதாகவும் இதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு ஒரு குழுவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அடுத்த கூட்டம்  அதேவேளை, குறித்த விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 03ஆம் திகதி மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கியவர்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் கடிதம் ஒன்றை முன்வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதன்போது, கிட்டத்தட்ட 2018ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இடம்பெற்றிருக்க கூடிய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் விளக்கம் கோர வேண்டுமே தவிர தற்போது நடந்த விடயங்கள் தொர்பில் மாத்திரம் விளக்கம் கோரப்பட கூடாது எனவும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், மத்தியக்குழு கூட்டமானது, பல்வேறுபட்ட வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் முடிவுக்கு வந்துள்ளது.  அதேவேளை, கூட்டத்திற்கு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், "தமழிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான விடயங்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கூடி ஆராய்ந்தோம். ஜனாதிபதி தேர்தலில் கட்சி எடுத்த 3 தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டவர்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. அதிலே அப்படியாக கட்சியின் முடிவை மீறி செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோருவது என முடிவு எடுக்கப்பட்டது. அரியநேத்திரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என பலமான கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தாலும், முதலாம் திகதி எடுத்த தீர்மானத்தில் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று கோரியிருந்தோம். அதற்கு அவருடைய விளக்க கடிதத்தில் பதில் சொல்லப்பட்டிருக்கவில்லை. அது காலம் கடந்து கிடைத்தாலும் வாசித்து காட்டப்பட்டது. ஆகவே அது சம்மந்தமாக கேட்டு விட்டு தீர்மானங்களை எடுக்கவுள்ளோம். முக்கிய விடயமாக ஆராயப்பட்டது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆகும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் விசேட அறிவிப்பை மனவுவந்து விடுவதற்கு தீர்மானித்துள்ளோம். அதாவது தமிழ் தேசிய பரப்பில் இருக்கிற கட்சிகள் விசேடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெவ்வேறு காலகட்டங்களில் விலகிப் போன கட்சிகள் திரும்பவும் எங்களுடன் சேர்ந்து தேர்தலை முகங்கொடுங்க விரும்பினால் வரமுடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றவர்கள் வருகிற தேர்தல் சவால் மிக்க தேர்தலாக இருப்பதால் இணங்கி வந்து இந்த தேர்தலில் போட்டியிட முடியும். தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலும் தான் கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்டோம். அந்த விதமாக இந்த தேர்தலில் போட்டியிட நாங்கள் தீர்மானித்துள்ளோம். அப்படியாக அந்த அழைப்பை ஏற்று வந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேட்ப்பாளர்களை நிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடி முடிவு எடுப்போம். அப்படி அவர்கள் வராவிட்டால் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும். திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அங்கே ஒரு தமிழ் உறுப்பினர் மட்டும் தான் தெரிவு செய்யப்படும் நிலை இருப்பதால் அந்த விடயங்களை அந்த மாவட்ட கிளைகளுடன் பேசி முடிவுக்கு கொண்டு வரலாம் என தீர்மானித்துள்ளோம். அதற்கு மேலதிகமாக இம்முறை வடக்கு - கிழக்குக்கு வெளியே உள்ள கொழும்பு உட்பட தமிழர்கள் வாழும் ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிட பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. விடுக்கப்பட்டுள்ள அழைப்பு  எதிர்வரும் 4 ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல செய்தல் ஆரம்பிக்கவுள்ளதால் பிரிந்து சென்றவர்கள் மீள வருவது தொடர்பாக மிக விரைவாக அவர்களது பதிலை எதிர்பார்க்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் வந்து இணைவதற்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதற்கு வெளியே வேறு கட்சிகள் வந்தால் அதனை பரிசீலிக்கலாம். ஏனெனில் எங்களது கட்சியில் இருந்து பிரிந்து போனவர்களது கட்சியும் மேலும் பிரிந்து இருக்கின்றது. அவர்களை உள்வாங்கும் போது சில ஆட்சேபனைகள் இருக்கும். அது பற்றி பேசியே முடிவு எடுப்போம். ஆனால் தீர்மானமாக அழைப்பு விடுப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை வாருங்கள் சேர்ந்து பயணிப்போம் என்று புன்முறுவலோடு அவர்களை அழைக்கின்றோம். புதியவர்களை தேர்தலில் உள்வாங்குவது, இளைஞர்களை உள்வாங்குவது தொடர்பிலும் நீண்ட நேரம் பேசினோம். அதனை சரியாக நாம் அணுகுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்களிடத்தில் இது தொடர்பான பாரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. விசேடமாக தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றிக்கு பிற்பாடு அத்தகைய எண்ணப்பாடு எங்களது பிரதேசங்களிலும் உயர்ந்துள்ளது. அது நல்ல விடயம். இளைஞர்கள், ஆளுமையுள்ளவர்கள், படித்தவர்கள், பெண்கள் என அவர்களுக்கான பிரதிநித்துவத்தை உறுதி செய்யும் வகையில் தான் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அதற்கான நியமனக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இறுதி முடிவுகளை எடுக்கும். ஆனால் மாவட்ட ரீதியாக கலந்து ஆலோசித்து தான் அந்த முடிவுகள் எடுக்கபடும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சிலர் எம்முடன் பேசியுள்ளார்கள். தம்முடன் இணையுமாறு அவர்கள் அழைப்பு எதனையும் விடவில்லை. நாங்கள் பிரதானமான தமிழ் கட்சி. இது வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக வேறு கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்ட போது தேர்தலுக்கு முகம் கொடுத்தது இலங்கை தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலுமே தான். அதே முறையில் நாங்கள் இந்த தேர்தலையும் சந்திப்பதற்கு பிரதான கட்சி என்ற வகையில் நாங்கள் அவர்களுக்கும் அழைப்பு விடுகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.  https://tamilwin.com/article/ilankai-tamil-arasu-katchi-meeting-in-colombo-1727533785?itm_source=parsely-detail
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.