Jump to content

195 கையடக்கத்தொலைப்பேசிகள், 4 தங்க சங்கிலிகள், 8 ஜோடி தங்க வலையல்களுடன் இருவர் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

195 கையடக்கத்தொலைப்பேசிகள்,  4 தங்க சங்கிலிகள், 8 ஜோடி தங்க வலையல்களுடன் இருவர் கைது

By DIGITAL DESK 5

12 NOV, 2022 | 12:23 PM
image

 

நாட்டின் இருவேறு பகுதிகளில் பல்வேறுகொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கல்கிஸ்ஸ

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்து 1426,500 ரூபா பணத்திணை கொள்ளைட்டு சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கல்கிஸ்ஸ புகையிரத நிலையத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து  4 தங்க சங்கிலிகள், 8 ஜோடி தங்க வலையல்கள்  மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

நுகேகொடை

நுகேகொடை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபர் ஒருவர் பொரளை -ஹல்கஹவத்த பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு மிரிஹான பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதன்போது கைது செய்யப்பட்டவர் 37 வயதுடைய பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவர்.

13 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சந்தேகநபரின் வீட்டிலிருந்து 195 கையடக்கத்தொலைப்பேசிகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/139791

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம ஊரிலை தான் களவு நடக்குதெண்டு பார்த்தால்....
சிங்களவன், அதை விட பயங்கரமாக களவு எடுத்துக் கொண்டு திரியுறான்.
சோனகன் இப்ப... திரிந்தீட்டானோ, அல்லது வேறை இரகசிய வியாபாரம் பண்ணுறானோ....  

சிங்கப்பூராக மாற்ற யோசித்த சொறிலங்காவை, கள்வர் பூமியாக மாற்றி வைத்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தமிழ் சிறி said:

சோனகன் இப்ப... திரிந்தீட்டானோ, அல்லது வேறை இரகசிய வியாபாரம் பண்ணுறானோ...

அண்ணை இன்னும் நீங்கள் ஊர்ப்பக்கம் போகல்லைப் போல. சாதாரண சனமே சொல்லுது.. அவையள் தான் உந்த போதைவஸ்து விற்பனை.. விநியோகத்தின் முக்கிய ஆக்கள். அவை.. ஏலவே இராணுவம்.. பொலிஸ்.. புலனாய்வுப் பிரிவென்று இருந்த தொடர்புகளை வைச்சுக் கொண்டு.. வேலை நடக்கது. வீணை ஆக்களும்.. இப்ப களம் இறங்கிட்டினம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, nedukkalapoovan said:

அண்ணை இன்னும் நீங்கள் ஊர்ப்பக்கம் போகல்லைப் போல. சாதாரண சனமே சொல்லுது.. அவையள் தான் உந்த போதைவஸ்து விற்பனை.. விநியோகத்தின் முக்கிய ஆக்கள். அவை.. ஏலவே இராணுவம்.. பொலிஸ்.. புலனாய்வுப் பிரிவென்று இருந்த தொடர்புகளை வைச்சுக் கொண்டு.. வேலை நடக்கது. வீணை ஆக்களும்.. இப்ப களம் இறங்கிட்டினம். 

இவர்கள் போதை வஸ்து வியாபாரத்தில் பிடிபட்டதாக, எங்கும் நான் வாசிக்கவில்லை. 
அந்த அளவுக்கு... மேல் மட்ட ஒத்துழைப்புடன் வியாபாரம் நடத்துகிறார்கள் போலுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இவர்கள் போதை வஸ்து வியாபாரத்தில் பிடிபட்டதாக, எங்கும் நான் வாசிக்கவில்லை. 
அந்த அளவுக்கு... மேல் மட்ட ஒத்துழைப்புடன் வியாபாரம் நடத்துகிறார்கள் போலுள்ளது.

ஒருக்கா அவை பிழங்கிற வீதியால போய் வாங்க. ஐரோப்பிய நகரங்கள் சிலவற்றின் வீதிகளில் வீசும் அந்த துர்நாற்றத்தை நுகரலாம். 

மேலும் அவை பிடிபட்டால்.. பெயர் மதம் வெளிவராமல் செய்திகள் வரும். அப்படி பார்த்துக் கொள்வார்கள்.. அவ்வளவுக்கு செல்வாக்கிருக்கு. 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.