Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அத்தாசின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீளவும் பழையநிலைக்கு கொண்டுவரகோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் 28-08-2007 03:47 மணி தமிழீழம் [செந்தமிழ்]

அத்தாசின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீளவும் பழையநிலைக்கு கொண்டுவரகோரிக்கை

சிறீலங்காவில் பத்திரிகையாளர்களாக தொழில்புரியும் ஊழியர்கள் சங்கம் நேற்று சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலருக்கு சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் ஆலோசகராகவும் பாதுகாப்பு பத்தி எழுத்தாளருமான இத்பால் அத்தாசிற்கு மறுபடியும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

அவரது பாதுகாப்பு எதுவித முன்அறிவிப்பு ஏதுமின்றி தீடீரென குறைக்கப்பட்டுள்ளதாகவம் இனம்தெரியாத நபர்கள் உந்துருளியில் அவரை தொடர்பதாகவும் இதனால் அவரது பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுவதாகவும் சிறீலங்காவின் பாதுகாப்பு செயலருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாக தெரியவருகிறது.

இவர் அண்மையில் மிக் விமானகொள்வனவில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் வெளிக்கொணர்ந்தமையே இவரது பாதுகாப்பு குறைக்கப்பட்டமைக்கு காரணமாக இருக்கலாம் எனக்கருதப்படுகின்றது.

நன்றி

பதிவு.

  • கருத்துக்கள உறவுகள்

அத்தாசின் பாதுகாப்பு எடுக்கப்பட்ட பின் பெட்டி பாம்பாக அடங்கி விட்டதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஊடகவியலாளர் இக்பால் அத்தாசின் வீட்டுக்கு முன்னால் நேற்று ஆர்ப்பாட்டம்.

சிரேஸ்ட ஊடகவியலாளரும் 'சன்டே ரைம்ஸ்' பத்திரிகையின் பாதுகாப்புத்துறைச் செய்தியாளரும், பிரதி ஆசிரியருமான இக்பால் அத்தாஸின் வீட்டுக்கு முன்னால நேற்றுக் காலை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.

நுகேகொட விஜேயராமவில் உள்ள அவரது வீட்டுக்கு முன்னேயே இந்த ஆர்ப்பாட்டம் இடம் பெற்றுள்ளது.

மேல் மாகாணச்பை உறுப்பினர்கள் சிலரின் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இக்பால் அத்தாஸ் 'நாட்டைக் காட்டிக் கொடுக்கும் பாதகர்;' எனற சுலோக அட்டைகளையும் அவர்கள் தாங்கியிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பாதுகாப்புத்துறைச் செய்தியாளரான இவருக்கு கடந்த காலங்களில் பாரிய அச்சுறுததல்கள் ஏற்பட்டதையடுத்து, அரசு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. தற்போது அந்தப்பாதுகாப்பு அகற்றப்டட்டுள்ளது.

தமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அகற்றப்பட்தையடுத்து மரண அச்சுறுத்தல்கள் ஏற்பட்டிருக்கினறன என கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் ஊடகங்களுக்குத் தகவல் வழங்கியிருந்தார். என்பதும் குறிப்படடத்தக்கது.

இந்நிலையில் இவருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றிருக்கின்றமை அவரது உயிருக்கு மேலும் அச்சுறுத்தலாக அமையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி : சுடர் ஒளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.