Jump to content

IND vs BAN: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய வங்கதேசம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

IND vs BAN: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய வங்கதேசம்

Bangladesh's Shakib Al Hasan

பட மூலாதாரம்,MUNIR UZ ZAMAN/AFP VIA GETTY IMAGES

 
படக்குறிப்பு,

விராட் கோலியின் விக்கெட் வீழ்ந்தபின் தமது அணியுடன் கொண்டாடும் ஷாகிப் அல் ஹசன்

4 டிசம்பர் 2022

வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது.

187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 46 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. டாக்காவில் உள்ள ஷேர்-ஈ-பங்களா தேசிய மைதானத்தில் உள்ளூர் நேரப்படி மதியம் 12 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கியது.

பந்துவீச்சில் அசத்திய வங்கதேசம்

டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதலில் பேட் செய்த இந்திய அணி 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 186 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் நல்ல தொடக்கத்தைக் கொடுக்கவில்லை. ரோகித் சர்மா 31 பந்துகளில் 27 ரன்களும், தவான் 17 பந்துகளில் 7 எடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலியும் 15 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஷாகிபின் பந்துவீச்சில் லிட்டன் தாசுக்கு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

 

அடுத்து வந்தவர்களில் விக்கெட்-கீப்பர் கே.எல். ராகுல் தவிர வேறு யாருமே சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை. ராகுல் 70 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். இந்திய பேட்ஸ்மேன்களில் இன்று இவரது ஸ்ட்ரைக் ரேட் மட்டுமே நூறைக் கடந்தது. தீபக் சாஹர் மற்றும் குல்தீப் சென் ஆகியோர் டக்-அவுட் ஆகினர்.

India's Mohammed Siraj and Virat Kohli

பட மூலாதாரம்,MUNIR UZ ZAMAN/AFP VIA GETTY IMAGES

 
படக்குறிப்பு,

முஷ்ஃபிகர் ரஹீம் அவுட் ஆனதைக் கொண்டாடும் இந்திய பந்துவீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் விராட் கோலி.

12 வைடு உள்பட இந்தியாவுக்கு எக்ஸ்ட்ரா ரன்கள் மூலம் மட்டுமே 12 ரன்கள் கிடைத்தன. இல்லாவிட்டால் இந்தியாவின் ஸ்கோர் இன்னும் பரிதாபமாக இருந்திருக்கும்.

முதல் இன்னிங்சில் பந்துவீச்சைப் பொறுத்தவரை வங்கதேச அணி சார்பில் ஷாகிப் அல் ஹசன் ஐந்து விக்கெட்டுகளையும், இபாதத் ஹொசைன் நாக்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மெஹுதி ஹசன் மிராஜ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். ஷாகிப் தாம் வீசிய 10 ஓவர்களில் 36 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இரண்டு ஓவர்களில் ஒரு ரன் கூட கொடுக்கவில்லை. எனினும், இந்தியாவுக்காக ஐந்து வைடு பால்களை வீசி எஸ்ட்ரா ரன்கள் கொடுத்தார்.

India's KL Rahul

பட மூலாதாரம்,MUNIR UZ ZAMAN/AFP VIA GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கே.எல். ராகுல் இன்று இந்தியாவுக்காக அதிகபட்ச ஸ்கோர் எடுத்தார்

முதல் பந்திலேயே வங்கதேசத்துக்கு அதிர்ச்சி

எளிதான இலக்குதான் என்றாலும் வங்கதேசம் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கியபோது, முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ, இந்தியாவின் தீபக் சாஹர் பந்துவீச்சில் ரோகித் சர்மாவுக்கு கேட்ச் கொடுத்து டக்-அவுட் ஆனார்.

வங்கதேச அணியின் இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் அந்த அணிக்காக அதிகபட்சமாக 63 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். அவர் ஆட்டமிழந்த பின்னர் ரன் எடுக்கவே திணறிய வங்கதேச பேட்ஸ்மேன்கள் 35வது ஓவருக்கு பின்னர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பேட்ஸ்மேன்களே ரன் எடுக்கத் திணறிய நிலையில், பேட்டிங் செய்ய வந்த பௌலர்கள் இபாதத் ஹொசைன் மற்றும் ஹசன் மஹ்மூத் ஆகியோர் டக்-அவுட் ஆகினர்.

எனினும், 24ஆம் ஓவரில் நான்காவது விக்கெட்டை இழந்த வங்கதேசம், 35வது ஓவரில்தான் அடுத்த விக்கெட்டை இழந்தது.

35வது ஓவரின் கடைசி பந்தில் இருந்து 40வது ஓவருக்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி, ஆட்டம் முடியும் வரை தனது கடைசி விக்கெட்டை இழக்காமல் இருந்தது வெற்றிக்கு வழிவகுத்தது.

இந்திய அணியின் முகமது சிராஜ் ஒரு மெய்டன் ஓவர் உள்பட 10 ஓவர்கள் வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரது எகானமி வெறும் 3.20 ஆகவே இருந்தது.

குல்தீப் சென் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்திய பந்துவீச்சாளர்கள் வங்கதேசத்துக்கு 17 எக்ஸ்ட்ரா ரன்களைக் கொடுத்து உதவினர்.

https://www.bbc.com/tamil/articles/c2x1km4n450o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயம் காட்டிய ரோகித் - இந்திய அணியை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்

டாக்கா: இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் அந்த அணி கைப்பற்றியுள்ளது. இந்தப் போட்டியின் இறுதி ஓவர்களில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக பேட் செய்திருந்தார். ஆனாலும் அவரால் அணியின் வெற்றிக்கு தேவையான ரன்களை பெற முடியவில்லை.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது. இந்தத் தொடரின் முதல் போட்டியை வங்கதேசம் வென்றிருந்தது குறிப்படத்தக்கது.

ரோகித் சர்மா, காயம் அடைந்த காரணத்தால் கோலி மற்றும் தவான் இன்னிங்ஸை ஓபன் செய்தனர். இருவரும் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்பினர். தொடர்ந்து வந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் அவுட்டாகி இருந்தனர்.

பின்னர் களம் கண்ட அக்சர் படேல் உடன் 107 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஷ்ரேயஸ் ஐயர். இருவரும் இறுதி வரை விளையாடி இந்திய அணியை வெற்றி பெற செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஷ்ரேயஸ் 82 ரன்களிலும், அக்சர் படேல் 56 ரன்களிலும் வெளியேறினர். பின்னர் வந்த ஷர்துல் 7 ரன்களிலும், தீபக் சாஹர் 11 ரன்களிலும் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.

அந்தச் சூழலில் இடது கையில் ஏற்பட்டிருந்த காயத்தை பொருட்படுத்தாமல் பேட் செய்ய வந்தார் கேப்டன் ரோகித் சர்மா. அவர் வந்தது முதலே பந்தை அடித்து ஆடும் மோடில் இருந்தார். அவரது பேட்டில் படும் பந்துகள் பவுண்டரிகளாக சென்று கொண்டிருந்தன. அவர் கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளை வங்கதேச வீரர்கள் டிராப் செய்திருந்தனர்.

கடைசி 6 பந்துகளில் இந்திய அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்ட்ரைக்கில் ரோகித் சர்மா இருந்தார். அந்த ஓவரின் முதல் பந்து டாட். அடுத்த இரண்டு பந்துகள் பவுண்டரி. நான்காவது பந்து டாட். ஐந்தாவது பந்தில் சிக்ஸர் விளாசி இருந்தார். அணியின் வெற்றிக்கு கடைசி பந்தில் சிக்ஸர் தேவைப்பட்டது. ஆனால், அந்த பந்து யார்க்கராக வீசப்பட, அதில் ரோகித் ரன் ஏதும் எடுக்கவில்லை. அதனால், வங்கதேசம் வெற்றி பெற்றது. ரோகித் 28 பந்துகளில் 51 ரன்களை குவித்தார். 5 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகள் இதில் அடங்கும்.

முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் தோல்வியை தழுவியதன் மூலம் தொடரையும் இழந்துள்ளது இந்திய அணி.

முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி, பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 69 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பிறகு 7-வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த மெஹதி ஹசன் மற்றும் மஹ்முதுல்லா, 148 ரன்களை குவித்தனர். இருவரும் நேர்த்தியாக பேட் செய்தனர். மெஹதி ஹசன் 100 ரன்களும், மஹ்முதுல்லா 77 ரன்களும் எடுத்திருந்தனர். 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 271 ரன்களை எடுத்தது.

69 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது வங்கதேச அணி. அப்போது களத்திற்கு வந்தார் மெஹதி ஹசன். இறுதி வரை அவுட்டாகாமல் பேட் செய்த அவர் இன்னிங்ஸின் கடைசி பந்தில் சதம் விளாசி அசத்தினார். 83 பந்துகளில் இந்த சதத்தை அவர் பதிவு செய்தார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது முதல் சதம் ஆகும். இதில் 8 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதில் இரண்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் கைப்பற்றி அசத்தினார். உம்ரான் மாலிக் மற்றும் முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.

IND vs BAN 2nd ODI | பயம் காட்டிய ரோகித் - இந்திய அணியை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம் | india versus bangladesh cricket second odi rohit sharma - hindutamil.in

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஒரு சமிக்கை காட்டினால் மட்டுமே ஜனாதிபதி உண்மையான மாற்றத்தை கொண்டுவந்ததாக கூற முடியும் - வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் 28 SEP, 2024 | 03:37 PM ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஒரு சமிக்கையை காட்டினால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டுவந்தார் என எங்களால் கூற முடியும் என்று வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி சி.ஜெனிற்றா தெரிவித்தார். இன்று (28) தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,  யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ளது. இறுதி யுத்தத்தின்போது சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் செல்வீச்சுக்களினாலும் விமான குண்டு தாக்குதலாலும் உடல் சிதறி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.  மேலும், இறுதி யுத்தம் முடிவடைந்த  நிலையில் குடும்பம் குடும்பமாக இடம்பெயரும்போது  தங்களது பிள்ளைகளை கையிலே ஒப்படைத்தனர். இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பள்ளி மாணவர்களும் பச்சிளங்குழந்தைகளும் ஆயுதம் ஏந்தி போராடியவர்களா? இவர்களுக்கு என்ன நடந்தது? கடந்த எட்டு தசாப்த காலமாக பதவி வகித்த எட்டு ஜனாதிபதிகளுக்கே யுத்தத்தை நடாத்திய பொறுப்பு இருக்கிறது. இந்நிலையிலே கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நிகழ்ந்தது என்று தெரியாமல் வீதியிலே போராடிக் கொண்டிருக்கிறோம். ஆட்சியாளர்கள் மாறுகின்றார்கள், ஆட்சியும் மாறுகின்றது. தற்போது மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது என்றாலும் கூட அது எந்த வகையில் எமக்கான மாற்றத்தை தரும் என்பது தெரியாது. சர்வதேச நீதி நெறிமுறைமையை மட்டுமே நாம் இன்று வரை நம்பியிருக்கின்றோம். குறிப்பாக உள்ளக முறையில் எந்தவித நம்பிக்கையும் இல்லாத காரணத்தினால் நாங்கள் சர்வதேச நீதிப் நெறிமுறைக்காகவே இதுவரை போராடிக்கொண்டிருக்கின்றோம்.  300க்கு மேற்பட்ட தங்களது பிள்ளைகள் எங்கே என்று தெரியாமல் போராடிக்கொண்டிருந்த தாய், தந்தையரை இழந்த நிலையிலும் அவர்களின் ஏக்கத்துக்காகவும் நாம் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கின்றோம். இலங்கையில் சர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடுபவர்களுக்கு ஒரு வேண்டுகோளினை விடுக்கின்றோம். எமது உறவுகள் எத்தனை பச்சிளம் குழந்தைகளையும், பாடசாலை மாணவர்களையும் இழந்து அவர்கள் மீண்டும் வருவார்களா என்ற ஏக்கத்துடனும் தவிப்புடனும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை  உங்கள் பிள்ளைகளாக நேசியுங்கள். எனவே, சர்வதேச சிறுவர் தினமான ஒக்டோபர் முதலாம் திகதியன்று வடக்கு, கிழக்கு தழுவிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க உள்ளோம்.  அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக காலை 10 மணிக்கு இந்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம். எனவே இப்போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இலங்கை அரசானது 75 வருடகாலமாக தமிழ் மக்களை ஏமாற்றி இருந்தது. பரம்பரை பரம்பரையாக 08 ஜனாதிபதிகள் மாறி மாறி ஆட்சி செய்திருந்த நிலையிலே எங்களுக்கு எந்தவித மாற்றங்களும் நிகழவில்லை. எனவே, எந்த நிலையிலும் எந்த ஒரு அரசையும் நம்பவில்லை.  காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக  ஜனாதிபதியாக பதவியேற்க முன்னர் குறிப்பிட்டிருந்தார்.  குறிப்பாக, சர்வதேச பொறிமுறையின் ஊடாக உண்மைகளை கண்டறிந்து, குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுக்கொடுத்து மீள் நிகழாமையை உறுதிப்படுத்தும் நிலையில் புதிய ஜனாதிபதியை பற்றி யோசிக்க முடியும். எந்த ஜனாதிபதி வந்தாலும் எமக்கான தீர்வு கிடைக்கப் பெற வேண்டும் என்பதையே சர்வதேசத்திடம் கேட்டுக்கொள்கிறோம். எனவே, புதிய ஜனாதிபதி ஏதாவது ஒரு சமிக்கையை காட்டினால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டுவந்தார் என எங்களால் கூற முடியும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/194991
    • நஸ்ரல்லாவை சாய்த்த இஸ்ரேல்: நிலை தடுமாறி அமைதியாய் நிற்கும் ஈரான் ஈரான் (Iran) ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா (Nasrallah)படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் (Israel) அறிவித்தும், ஈரான் அமைதி காத்து வருவது அந்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலின் அறிவிப்பிற்கு ஹிஸ்புல்லா, லெபனான் தரப்பிலிருந்தும் எவ்வித உறுதிபடுத்தப்பட்ட தகவல்களும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், இதற்கு எதிராக ஈரான் மற்றும் ஏமன் நாடுகளில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஈரானின் செயற்பாடு எவ்வாறானெதொரு பின்னணியில், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராக ஈரான் அமைதியாக இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, இத்தகைய சூழலில் ஈரான் கடுமையான பதிலடிகளை வழங்கும், ஆனால் இப்போது மிதவாதம் காட்டுவதாக உள்ளதாக ஈரானின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இது ஈரானில் உள்ள பழமைவாதிகள் மத்தியில் பாரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்காலத்தில் இது அரசியல் மாற்றங்களுக்கு காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இறுதி இலக்கு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்றிரவு நடத்தப்பட்ட தொடர் வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் மொத்தம் 18 பேர் முக்கிய தளபதிகள் இருந்த நிலையில்,17 பேரை இஸ்ரேல் ஏற்கனவே படுகொலை செய்தது. இறுதியாக நஸ்ரல்லா மட்டுமே உயிருடன் இருந்த நிலையில் தற்போது அவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.  https://ibctamil.com/article/death-of-hassan-nasrallah-pressure-on-iran-1727524484#google_vignette
    • இஸ்ரேலின் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா பலி- உறுதி செய்தது ஹெஸ்புல்லா அமைப்பு 28 SEP, 2024 | 07:08 PM ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் வான்தாக்குதலில் தனது தலைவர் கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளது. லெபனான் தலைநகரின் தென்புறநகர் பகுதியில் சியோனிஸ்ட்கள் மேற்கொண்ட துரோகத்தனமான நடவடிக்கையில் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார் என ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிற்கு எதிராக தொடர்ந்தும் போராடப்போவதாக உறுதியளித்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பு காசாவிற்கும் பாலஸ்தீனத்திற்கும் தொடர்ந்தும் ஆதரவளிக்கப்போவதாக தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/195018
    • அனுரவின்... தேசிய மக்கள் சக்தி கட்சி, நாளை 29.09.2024 அன்று புலம் பெயர் தமிழர்களுடன் இணையவழி (Zoom meeting)  சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அறிய முடிகின்றது.  கேள்வி பதில் அரங்கு. பங்கு கொள்வோர்... # இராமலிங்கம் சந்திர சேகர். (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) # சிவா சிவப்பிரகாசம். (மலையக தேசியக்குழு உறுப்பினர்) # எம்.ஜே.எம். பைசல்.  (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) # ஜனகா செல்வராஜ்.  (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) வழிப்படுத்தல்: எம். பெளசர். காலை 10:00 மணி - கனடா. மதியம் 2:00 மணி ஐரோப்பா. மதியம் 3:00 இங்கிலாந்து. மாலை 7:30 இலங்கை நேரப்படி இந்த சந்திப்பு நிகழும். Meeting ID : 831 9644 1969 Pass Code: 660804 Contact - Fauzer 0776613739 (Mob.) 0044 7817262980 (WhatsApp)
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.