Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'கள நிலையில் மாற்றம் வருகின்றபோது----!"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'கள நிலையில் மாற்றம் வருகின்றபோது----!"

-சபேசன் (அவுஸ்திரேலியா)-

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும், நிவாரண ஒருங்கிணைப்பாளருமான திரு ஜோன் ஹோல்ம்ஸ் அவர்கள், மனித உரிமை மீறல்கள், துஷ்ப்பிரயோகங்கள் சம்பந்தமாகச் சிறிலங்காவைச் சாடியதையடுத்து அவர் மீது கடுமையான கண்டனங்களைச் சிறிலங்கா அரசு சுமத்தியிருந்தது. சிறிலங்காவின் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே, 'ஐ.நா. சபையின் உயர் அதிகாரியான ஜோன் ஹோல்ம்ஸ் ஒரு பயங்கரவாதி' என்றும், 'அவர் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இலஞ்சம் வாங்கியிருக்கக் கூடும்' என்றும் கருத்து வெளியிட்டிருந்தார். சிங்களப் பேரினவாத அரசியல் கட்சிகளும், சிங்கள ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு ஜோன் ஹோல்ம்சைக் கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டிருந்தன.

இத்தனைக்கும் ஜோன் ஹோல்ம்ஸ் சிறிலங்கா அரசைப் பெரிதாகக் குற்;றம் சாட்டியிருக்கவில்லை. அவர் சிறிலங்கா அரசின் நலன் சார்ந்து பேசிவிட்டு, சிறிலங்கா அரசிற்குச் சார்பாகச் சந்திப்புக்களை நடாத்திவிட்டு, உலக அரங்கில் சிறிலங்காவிற்கு ~நல்ல பெயர்| கிடைப்பதற்கான அறிவுரைகளையும் வழங்கிவிட்டுத்தான் சென்றிருந்தார். ஆனால் அவற்றைக்கூட சிங்களப் பேரினவாதத்தால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சிறிலங்கா அமைச்சரின் இந்தக் கடுமையான குற்;றச்சாட்டுக்களை அடுத்து, ஜோன் ஹோல்ம்ஸ் 'தன்னிலை விளக்கப் பாணியில்' தனது கருத்துக்கள் தொடர்பான விளக்கங்களைச் சிறிலங்காவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்சவி;ற்குக் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். ~தான் சிறிலங்கா அரசிற்கு எதிரான கருத்துக்களைக் கூறவில்லை| என்றும் ஜோன் ஹோல்ம்ஸ் குறிப்பிட்டிருந்தார்.

சிறிலங்காவின் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளேயின் விமர்சனம் ~பொருத்தமற்றது| என்றும், ~ஏற்றுக்கொள்ள முடியாதது| என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கி-மூன்; (BAN KI- MOON) கண்டித்திருந்தார். ஆனால் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளேயோ, இந்தக் கண்டிப்புக் குறித்து அலட்டிக் கொள்ளவில்லை. ~ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் இவ்வாறு கூறுவது பற்;றி எனக்கு அக்கறையெதுவும் இல்லை. என்னைப் பொறுத்தவரையில் ஜோன் ஹோல்ம்ஸ் ஒரு பயங்கரவாதி. அவர் விடுதலைப் புலிகளிடம் இலஞ்சம் வாங்குபவர்| - என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே மீண்டும் காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்.

cartoon5oz7.jpg

வெளிப்படையாகவே தமிழினத்தை அழிக்கின்ற செயற்பாடுகளையும், மனித உரிமை மீறல்களையும், அதிகாரத் துஷ்ப்பிரயோகங்;களையும் செய்து வருகின்ற சிறிலங்கா என்கின்ற சின்னஞ் சிறிய நாடு, எந்தத் துணிவில் மேற்குலகையும் ஐக்கிய நாடுகள் சபையையும் அவமதித்து எதிர்த்துப் பேசுகின்றது என்று பலரும் எண்ணக்கூடும்!.

சிறிலங்கா அரசின் இந்த அவமதிப்பிற்கான தார்மீகப் பொறுப்பையும் மேற்குலகம்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்!.

இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரியைப் ~பயங்கரவாதி| என்று சிறிலங்கா அரசு சொல்கின்றது. இந்தப் ~பயங்கரவாதம்| என்கின்ற சொற்றொடரைப் பிழையாகக் கையாளத் தொடங்கியதே மேற்குலகம்தான்! தெளிவான, சரியான வரைவிலக்கணம் எதுவும் இன்றி, தங்கள் பாட்டில், தங்களது சொந்த நலன் கருதி மேற்குலகம் எல்லாவற்றையும் பொதுமைப்படுத்தப் புறப்பட்டதன் பக்க விளைவுதான் இது! மேற்குலகின் இந்தப் ~பயங்கரவாதப் பொதுமைப்படுத்தலை|, சிறிலங்கா இன்று தனக்கு சாதகமாகச் தனது அரச பயங்கரவாதச் செயற்பாடுகளுக்குச் சார்பாகப் பயன்படுத்துகின்றது.

சிறிலங்கா அரசு, தான் மேற்கொண்டு வருகின்ற தமிழின அழிப்பை, மனித உரிமை மீறல்களை, படுகொலைகள் போன்ற விடயங்களையெல்லாம் ~புலிகள் பயங்கரவாதிகள்| என்று சொல்லிக்கொண்டு இருப்பதன் மூலம் நியாயப்படுத்திக்கொண்டு தப்பிவிடலாம் என்று எண்ணுகின்றது. அந்த வகையில் இவ்வளவு காலமும் சிங்கள அரசு தப்பித்தான் வந்துள்ளது.

இதன் அடிப்படையில்தான், ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரியான ஜோன் ஹோல்ம்சுக்குக் சிறிலங்கா கொடுக்கின்ற காட்டமான அறிக்கையை நாம் பார்க்க வேண்டும். என்;னதான் சிறிலங்கா பேசினாலும், பயங்கரவாதத்திற்கு(?) எதிராகப் போராடுகின்ற (சிறிலங்கா) அரசிற்கு எதிராக, மேற்குலகம் ஒன்றும் செய்யாது என்ற துணிவான ஒரு நிலைப்பாட்டை வைத்துக்கொண்டு சிறிலங்கா அரசு இன்று செயல்பட்டு வருகின்றது.

மேற்குலகம் தன் நலன் கருதி, ~பயங்கரவாதம்| என்ற சொற்றொடருக்குள் எல்லாவற்றையும் பொதுமைப்படுத்தியதால், அந்தப் பலவீனத்திற்கு ஊடாகச் சிறிலங்கா அரசாங்கம் தன்னுடைய செயற்பாடுகளை நடத்திக் கொண்டு போகின்றது. அதில் சில வெற்;றிகளையும் அது அடைந்திருக்கின்றது.

இத்தோடு இன்னுமொரு விடயத்தையும் நாம் சுட்டிக்காட்ட விழைகின்றோம்.

வெளிப்படையாகக் காரசாரமாக இவ்வாறு பேசினாலும், உள்ளுர (இராஜதந்திர) உறவு நிலைகள் சுமூகமாகப் பிரச்சனைகள் இல்லாமல் இருக்கும். மேற்;குலகம் தன்னுடைய தேவை கருதிச் சிறிலங்கா போன்ற நாடுகளிடம் போக வேண்டிய நிலை இருக்கின்றது. தனது போக்குவரத்திற்காக எரிபொருள் கொடுப்பதில்pருந்து திறந்த வெளிச்சந்தை அமைப்பது வரை சிறிலங்கா தனக்கு உதவியாக இருக்கும் வரைக்கும், சிறிலங்கா என்ன பேசினாலும், என்ன செய்தாலும் மேற்குலகத்திற்குக் கவலையில்லை. இதுபோல் இஸ்ரேலும் அமெரிக்காவை அவ்வப்பொழுது தூக்கி எறிந்து பேசுவதுண்டு. சிறிலங்கா அரசிற்கும், அமெரிக்கா, சீனா என்று எல்லா இடமும் ஓடி ஓடித் தனது பிரச்சனைகளை இவ்வாறு சமாளிக்கலாம் என்ற நம்பிக்கை உண்டு. அத்தோடு ஜப்பான் தன்னை ஒருபோதும் கைவிடாது என்ற நம்பிக்கையும் சிறிலங்காவிற்கு உண்டு. இதனோடு பயங்கரவாதம் என்கின்ற பொதுமைப்படுத்தப்பட்ட சொற்றொடரையும் சிறிலங்கா அரசு இன்று நன்றாகப் பயன்படுத்தி வருகின்றது.

~பயங்கரவாதம்| என்ற சொற்றொடரை மட்டுமல்லாது, ~பயங்கரவாத அமைப்பு| என்று தீர்மானிக்கின்ற விடயங்களும் சர்ச்சைக்குரியவையாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பு என்று கணிப்பதுவும், அதனை தடை செய்வதும் அநீதியான செயற்பாடுகளாகும். இவை மிகத் தவறான செயற்பாடுகள் மட்டுமல்லாது இன்று பிரச்சனைகள் தீராததற்கு இவை காரணமாக அமைகின்றன என்று மனித உரிமைகள் சட்டத்தரணியான கரன் பாக்கர் போன்றோரும் சுட்டிக் காட்டி வருகின்றார்கள்.

இன்றைக்கு உலக நாடுகள் சுட்டுகின்ற ~பயங்கரவாதம்| என்று சொல்லக்கூடிய பட்டியலுக்குள் - அரச பயங்கரவாதிகள் என்ற கருத்துக்குள் - சரியாக இன்று அடங்கக்கூடியது சிறிலங்காவேதான்! இந்தப் பட்டியலுக்குள் சரியாகப் பொருந்தக் கூடிய ஒரே ஒரு நாடும் சிறிலங்காதான்! பயங்கரவாதம் என்று பட்டியல் இடுகின்றபோது, பயங்கரவாதத்தை அரச பயங்கரவாதம் என்று வகைப்படுத்துகின்றபோது, அந்த வகைப்படுத்தலுக்குள்;ளும் சரியாகப் பொருந்தக் கூடியதும் சிறிலங்காவேயாகும்.!

சிங்கள அரசு, ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமை மீறல்களுக்கும் அப்பால், தனது அரச பயங்கரவாதச் செயல்களை நடாத்தி வருகின்றது. தமிழ் மக்களை அவர்களது பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து துரத்தியடிக்கின்ற சிங்களச் சிறிலங்கா அரசு, இன்று தமிழ் பேசும் முஸ்லிம் மக்களையும் விரட்டியடிக்க ஆரம்பித்துள்ளது. மூதூர் அரபாத் நகரை உயர் பாதுகாப்பு வலயமாக சிறிலங்கா அரசு பிரகடனப்படுத்தியதையடுத்து அங்கிருந்த முஸ்லிம் மக்கள் இராணுவத்தால் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்

நக்குகின்ற நாய்க்கு செக்கென்ன? சிவலிங்கமென்ன? குஜ்ராலும் பயங்கரவாதிதான். சந்தர்ப்பம் வரும்போது இதைச்சொல்வார்கள். களத்தில் பலமான மாற்றங்கள் நடந்துவிட்டன. அதனை அறிந்துதான் பிரித்தானியாவின் சமாதான முன்னெடுப்புகளும் மனிதவுரிமை அமைப்புக்கனினது அறிக்கைகளும் ஐ.நா வின் கண்டனங்களும். மாவீரர் தின உரையின் தாக்கங்களையும் அதைத்தொடர்ந்து நடைபெறும் விளைவுகளையும் தணிப்பதற்கான முயற்சிகளில் உலக நாடுகள் இப்பொழுதே ஈடுபடத் தொடங்கிவிட்டன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.