Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாக்கு பைகளில் சிறுமிகள், தொடர் பாலியல் வன்கொடுமை! – தந்தை, மகன் உள்ளிட்ட 7 பேருக்கு வாழ்நாள் சிறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் பிழைப்புக்காக குடும்பத்துடன் இடம்பெயர்ந்து, புதுச்சேரியின் கிராமப்புற பகுதியான கோர்க்காட்டில் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். கரும்பு வெட்டும் வேலைக்காக வருடத்தின் பெரும்பாலான நாள்கள் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தங்கிவிடும் இவர்களுக்கு குழந்தைகள் என்பது எப்போதும் கூடுதல் சுமை. இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு கீழ்சாத்தமங்கலத்தைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவர் தனது வாத்துப் பண்ணையில் சிறுமிகளை கொத்தடிமைகளாக வைத்திருக்கிறார் என்று புதுச்சேரி குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவுக்கு ரகசிய தகவல் சென்றது. அதனடிப்படையில் அங்கு சென்று ஆய்வு நடத்திய குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் 2020 அக்டோபர் 21-ம் தேதி இரண்டு சிறுமிகளை மீட்டனர்.

 

போக்சோ
 
போக்சோ
 

அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மறுநாள் 22-ம் தேதி கன்னியப்பனின் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மற்ற 3  சிறுமிகளும் மீட்கப்பட்டனர். அதையடுத்து காப்பகங்களில் தங்கவைக்கப்பட்ட அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு அவர்கள் இயல்புநிலைக்குத் திரும்பியதும்  கொத்தடிமைகள் என்ற ரீதியில் சிறுமிகளிடம் விசாரணையை துவக்கிய குழந்தைகள் பாதுகாப்புக் குழுவினரும், காவல் துறையினைரும் அவர்கள் பேசப் பேச அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். வாத்துகளை மேய்க்கும் வேலைக்காக சிறுமிகளை விலை கொடுத்து வாங்கும் கன்னியப்பன், 2 வருடங்களுக்கு முன்பு இந்த பெற்றோர்களைச் சந்தித்து அவர்களின் குழந்தைகளை விலைக்குக் கேட்டிகிறார். ஒரு குழந்தைக்கு ரூ.3,000 என பேசி, ரூ.500 மட்டும் முதலில் தருவதாகவும் மீதித் தொகையை தவணை முறையில் தருவதாகவும் கூற, 4 முதல் 10 வயது வரை உள்ள 5 சிறுமிகளை அப்போதே அவருடன் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

 

மீதித் தொகையை கேட்டுவரும் பெற்றோர்களுக்கு அவ்வப்போது ரூ.50, ரூ.100 என்று மட்டும் கொடுத்து வந்த கன்னியப்பன், அந்த சிறுமிகளை திண்டிவனம், விழுப்புரம், திருச்சிற்றம்பலம் என பல பகுதிகளுக்கு வாத்து கிடை போடுவதற்கு அனுப்பி வந்திருக்கிறார். அப்போது அந்தச் சிறுமிகளில் இருவருக்கு 6 வயது, மற்றவர்களுக்கு 8 முதல் 13 வயது இருக்கும். அந்தச் சிறுமிகள் அனைவரையுமே கன்னியப்பன், அவர் மகன் ராஜ்குமார், அவர்களது உறவினர்கள், பண்ணையில் வேலை செய்யும் பெரியவர்கள், சிறுவர்கள் என அனைவருமே 2 வருடங்களாக, குடி போதையுடன் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் வலி தாங்க முடியாமல் அழுத சிறுமிகளுக்கு, வலிக்காமல் இருக்க ஹான்ஸ், பீர் உள்ளிட்ட போதை வஸ்துகளை பழக்கப்படுத்தியிருக்கிறார்கள்.

13 வயது சிறுமியை இரவில் தனியே அழைத்துச் செல்வதற்காக, கொசு கடிக்கும் என்று கூறி மற்ற சிறுமிகளை சாக்கு பைகளுக்குள் சென்று படுத்துக் கொள்ளுமாறு கூறியிருக்கிறார்கள். அதைக் கேட்டு சாக்கு பைகளுக்குள் செல்லும் சிறுமிகளை அப்படியே மூட்டையாகக் கட்டி மறுநாள் காலையில் அவிழ்த்து விடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவர்களுடன் செல்ல மறுத்த சிறுமிகளின் கை, கால்களை கட்டி வைத்து பாலியல் வன்கொடுமை செய்து, அதன்பிறகு பிறப்புறுப்பில் மிளகாய் பொடியைத் தூவி சித்ரவதை செய்திருக்கிறார்கள். அதேபோல பாட்டில்களில் சிறுநீரைக் கழித்து அதை குடிநீருக்கு பதிலாக குடிக்க வைத்திருக்கிறார்கள். இரு சிறுமிகளின் வளர்ப்புத் தந்தையான ஆறுமுகம் என்பவரே சிறுமிகளை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்திருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

 

மேலும் பெண் குழந்தைகள் என்று மற்றவர்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக ஆண்களுக்கான உடையை கொடுத்து, அவர்களைப் போலவே முடியையும் வெட்டி விட்டு சாதுர்யமாக செயல்பட்டிருந்தார் கன்னியப்பன். சிறுமிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின்போது 13 வயதுள்ள சிறுமி 3 மாதங்கள் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதற்கிடையில் இரண்டாவதாக மீட்கப்பட்ட 3 சிறுமிகளின் தாய் சாந்தி என்பவர் 2020 நவம்பர் 1-ம் தேதி நல்லவாடு கடற்கரையில் மர்மமாக கொலைசெய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார். சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக மங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. சிறுமிகள் அடையாளம் காட்டியதன் அடிப்படையில் கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்த வாத்துப்பண்ணை உரிமையாளர் கன்னியப்பன், அவர் மனைவி சுபா, மகன் ராஜ்குமார், உறவினர்கள் பசுபதி, அய்யனார் மற்றும் ஒரு சிறுவன் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணை நடைபெற்று வந்தது.

தந்தை, மகன் உள்ளிட்ட 7 பேருக்கு வாழ்நாள் சிறை
 

தந்தை, மகன் உள்ளிட்ட 7 பேருக்கு வாழ்நாள் சிறை

அனைத்து தரப்பு சாட்சிகளும் விசாரித்து முடிக்கப்பட்டுவிட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இன்று காலை சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வாத்துப்பண்ணை உரிமையாளர் கன்னியப்பன், அவர் மகன் ராஜ்குமார் உள்ளிட்ட 7 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனையும், கன்னியப்பனின் மனைவி சுபாவுக்கு ஒரு ஆயுள் தண்டனையும், சுபாவின் தந்தை காத்தவராயன் என்பவருக்கு ஐந்து வருடங்கள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி செல்வநாதன். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவருக்கு ரூ.7 லட்சமும் மற்ற 4 சிறுமிகளுக்கு தலா 5 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் இருக்கும் ஒரு சிறுவன் சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், குற்றம் நிரூபிக்கப்படாததால் ஒருவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

சாக்கு பைகளில் சிறுமிகள், தொடர் பாலியல் வன்கொடுமை! – தந்தை, மகன் உள்ளிட்ட 7 பேருக்கு வாழ்நாள் சிறை | the court sentenced lifetime prison to 7 in girl children sexual harassment case (vikatan.com)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.