Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தென்னாபிரிக்காவில் எரிவாயு கொள்கலன் லொறி வெடித்ததில் 8 பேர் உயிரிழப்பு : பலர் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்காவில் எரிவாயு கொள்கலன் லொறி வெடித்ததில் 8 பேர் உயிரிழப்பு : பலர் காயம்

25 DEC, 2022 | 03:15 PM
image

தென்னாபிரிக்காவில் எரிவாயு கொள்கலன் லொறி வெடித்துச் சிதறிய விபத்தில்  8 பேர் உயிரிழந்தனர். அரச அவசர சேவை செய்தித் தொடர்பாளர் வில்லியம் என்ட்லாடி தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்க தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் சென்று கொண்டிருந்த எரிவாயு கொள்கலன் லொறி  ஒன்று, பாலம் ஒன்றின் அடியில் சிக்கிக் கொண்டது. அந்த லொறியை நகர்த்த முயன்றபோது அது பாரிய சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது.

இந்த சம்பவத்தில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர் என்றும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன. எனினும் பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது. 

இந்த கோர விபத்தால் அந்த பாலத்தின் அருகில் இருந்த கட்டிடங்களும் சேதமடைந்தது. அங்கிருந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு மேற்கூரை உடைந்தது. இரண்டு வீடுகள் மற்றும் பல கார்கள் சேதமடைந்துள்ளன.

இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அரச அவசர சேவை செய்தித் தொடர்பாளர் வில்லியம் என்ட்லாடி தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள தம்போ நினைவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான அதன் முயற்சிகள் அதன் கூரை சேதமடைந்ததால் தடைபட்டதாக ஏபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையின் உள்ளே இருந்து டுவிட்டரில் ஒரு வீடியோ, மக்கள் பதற்றமாக ஓடும் ஒரு குழப்பமான காட்சியை வெளியாகி இருந்தது. 

மேலும், பாலத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருவதாகவும், அருகில் உள்ள இரண்டு வீடுகளில் தீயை அணைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் வில்லியம் என்ட்லாடி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/144073

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்காவில் எரிபொருள் வாகனம் வெடித்ததால் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு

By SETHU

30 DEC, 2022 | 05:38 PM
image

தென் ஆபிரிக்காவில் எரிபொருள் வாகனம் ஒன்று வெடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் இன்று தெரிவித்தள்ளனர். 

போக்ஸ்பேர்க் நகரில், கடந்த சனிக்கிழமை திரவ பெற்றோலிய வாயு (எல்பிஜி)) ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று பாலமொன்றின் அடியில் சிக்கிக் கொண்டதால், வாயு கசிவு ஏற்பட்டு வெடித்தது. இதனால் 10 பேர் உடனடியாக கொல்லப்பட்டனர். 

இந்நிலையில், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது என  தென் ஆபிரிக்க சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. காயமடைந்த பலர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அவ்வமைச்சு தெரிவித்துள்ளது. 

பாலத்தின் அடியில் சிக்கிய வாகனம் வெடிப்பதற்கு முன்னர் அதை பார்வையிடச் சென்றவர்களும் பலியானோரில் அடங்கியுள்ளனர். சுகாதார ஊழியர்கள் 11 பேரும் உயிரிழந்துள்ளனர் மேற்படி அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/144575

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.