Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். பல்கலைக்கழகத்தில் ஆழிப் பேரலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

யாழ். பல்கலைக்கழகத்தில் ஆழிப் பேரலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்கான 18ஆவது ஆண்டு நினைவேந்தல், யாழ். பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கு முன்றலில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

இன்று (திங்கட்கிழமை) உயிர்நீத்த உறவுகளின் நினைவுருவ படத்திற்கு அகவணக்கம் செலுத்தி ஈகைசுடரேற்றப்ட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சி.ஜெல்சின், பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

https://athavannews.com/2022/1317364

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற சுனாமி பேரழிவின்18வது ஆண்டு நிகழ்வு!

சுனாமி காவுகொண்ட 18வது ஆண்டு  நினைவு நாடெங்கிலும் இன்று காலை  உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

அந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாக 2800க்கும் மேற்பட்டவர்கள் காவுகொள்ளப்பட்ட நிலையில் நினைவுகூரும் வகையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

இதற்கமைய மட்டக்களப்பு –அம்பாறை மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் விசேட பூஜைகள் நடாத்தப்பட்டதுடன் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது உயிர்நீர்த்தவர்களின் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் உயிர்நீர்த்தவர்களின் உறவினர்கள் உறவுகளின் புகைப்படங்களுக்கு மலர் தூவி கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்கள்.

குறித்த அஞ்சலி நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம்,பிரசன்னா இந்திரகுமார்,பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

https://athavannews.com/2022/1317307

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

சுனாமியில் இறந்தவர்களை நினைவுக்கூர்ந்த மலையக மக்கள்!

னாமி ஆழிப்பேரலை இடம்பெற்று 18 ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.

இன்று (திங்கட்கிழமை) ஹட்டன் பொலிஸார், நகர வர்த்தகர்களின் ஏற்பாட்டில் ஹட்டன் புத்தர் சிலைக்கு முன்னால் குறித்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது உயிர்நீத்த இலங்கை உறவுகளுக்கு அஞ்சலியை மலையக மக்களும் செலுத்தினர்.

குறித்த நிகழ்வுகளில் ஹட்டன் நகரில் உள்ள வங்கி ஊழியர்கள், நகர வர்த்தகர்கள், சாரதிகள் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் என அனைவரும் இதில் கலந்துக்கொண்டிருந்தனர்.

https://athavannews.com/2022/1317317

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

யாழ் .உடுத்துறையில் சுனாமி நினைவேந்தல் அனுஷ்டிப்பு

சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 18வது ஆண்டு நினைவு நாடெங்கிலும் இன்று காலை உணர்வுபூர்வமாக நடைபெற்று வருகின்றது.

அந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) யாழ். வடமராட்சி உடுத்துறையில் உள்ள சுனாமி பொது நினைவாலயத்தில் உறவுகளால் நினைவு அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மாலையிட்டு , தீபங்கள் ஏற்றி உணவுகளை படையலிட்டு உறவுகள் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1317323

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.