Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடன் மறுசீரமைப்புக்கு சீனாவும் இந்தியாவும் இணங்கவேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடன் மறுசீரமைப்புக்கு சீனாவும் இந்தியாவும் இணங்கவேண்டும்

கடன் மறுசீரமைப்புக்கு உடனடியாக இணங்குமாறு சீனா மற்றும் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியைப் பெறுவதற்கு குறித்த இணக்கம் அவசியமாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.

அனைத்துத் தரப்பினரின் நலன் கருதி சீனாவும் இந்தியாவும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பது அனைவருக்கும் சிறந்தது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 
 

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/கடன்-மறுசீரமைப்புக்கு-சீனாவும்-இந்தியாவும்-இணங்கவேண்டும்/150-310577

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் கடன்களை இந்தியாவும் சீனாவும் குறைக்கவேண்டும் - மத்திய வங்கி ஆளுநர்

By RAJEEBAN

12 JAN, 2023 | 10:38 AM
image

சீனாவும் இந்தியாவும் கூடியவிரைவில் இலங்கை செலுத்தவேண்டிய கடன்களை குறைக்கவேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிபிசியின் நியுஸ்நைட்டிற்கு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் இது அனைத்து தரப்பினரினதும் நலன் தொடர்பான விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் எவ்வளவு வேகமாக கடன் உத்தரவாதங்களை வழங்குகின்றார்களோ அது  கடன் பெற்றவர்களிற்கும் கடன் வழங்கியவர்களிற்கும் நன்மையளிக்கும் என மத்தியவங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கடன்வழங்கியவர்களிற்கான எங்களது கடப்பாட்டை நாங்கள்திருப்பிசெலுத்துவதற்கு இது உதவியாக அமையும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

கடன்களை நீண்டகாலம் செலுத்த முடியாமலிருக்கும் நிலையில் இருப்பதற்கு இலங்கை விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ள இலங்கையின் மத்திய வங்கியின் ஆளுநர் இது நாட்டிற்கும் எங்களிற்கும் சிறந்த விடயமல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

இது இலங்கை மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பான இந்தியா சீனாவுடனான உடன்படிக்கை ஜனவரி இறுதியில் சாத்தியமாகலாம் என தெரிவித்துள்ள நந்தலால் வீரசிங்க ஆனால் இது ஏனைய தரப்பை பொறுத்தவிடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எங்களிற்கு கடன்வழங்கியவர்கள் இது குறித்து தீர்மானிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடன்பட்ட நாடுகள் கோரிய அனைத்து விபரங்களையும் வழங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/145576

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.