Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே விமானப்படை விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதேபோல் மத்திய பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய்-30 மற்றும் மிராஜ்-2000 விமானங்கள் விபத்துக்குள்ளாகி உள்ளன.

இந்தியா - மத்திய பிரதேசம் அருகே மொரேனாவில் விமானப்படைக்கு சொந்தமான 2 விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. குவாலியர் விமானப்படை தளத்திலிருந்து பயிற்சிக்காக புறப்பட்ட விமானங்கள் இவை.

விபத்துக்கான காரணம் என்ன? விமானிகளின் நிலை என்ன? என்பது குறித்து தேடுதல்கள் நடைபெற்று வருகின்றன.

அதேபோல் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரிலும் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. அடர்ந்த பனிமூட்டம் காரணமாக விபத்து நிகழ்ந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. விபத்துக்குள்ளான சுகோய் மற்றும் மிராஜ் இரண்டுமே தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும் போர் விமானங்கள்.

மிராஜ் விமானமானது ஃபிரான்ஸ் நாட்டிலிருந்தும், சுகோய் விமானமானது ரஷ்யாவிடமிருந்தும் வாங்கப்பட்டவை.

இரண்டுமே நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டவை. இவை இரண்டுமே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

விமானங்களிலுள்ள கருப்புப் பெட்டியில் பதிவாகியிருக்கும் தகவல்களை வைத்து விமானத்தில் கோளாறு ஏற்பட்டதா? பறந்த உயரம், வேகம் போன்றவற்றை கொண்டு விபத்திற்கான காரணம் கண்டறியப்படும் என்று கூறப்படுகிறது. விமானங்கள் விழுந்து நொறுங்கிய இடங்களில் மீட்புப்பணிகளை விமானப்படை தீவிரப்படுத்தியுள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்

பயிற்சியின் போது விபத்துக்குள்ளான இந்திய விமானப் படை விமானங்கள்: ஒரு விமானி பலி

விமான விபத்து

பட மூலாதாரம்,ANI

28 ஜனவரி 2023, 10:20 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்திய விமானப் படைக்கு சொந்தமான சுகோய்-30 மற்றும் மிராஜ்-2000 போர் விமானங்கள் விபத்திற்கு உள்ளானதில், விமானத்தில் இருந்த 3 விமானிகளில் ஒருவர் பலியானதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள இந்திய விமானப் படையின் விமான தளத்திலிருந்து, இன்று காலை வழக்கமான பயிற்சிக்காக சுகோய்-30 மற்றும் மிராஜ்-2000 வகை போர் விமானங்கள் புறப்பட்டுச் சென்றன.

நடுவானில் அதிவேகமாக பறந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, இந்த விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் நடந்துள்ளது.

வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட இந்த விபத்தில் இந்திய விமானப் படை விமானி ஒருவர் பலியானதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்த விங் கமாண்டர் ஹனுமந்த் ராவ் சாரதியின் குடும்பத்தினருக்கு ஆதரவாக எல்லா வான் போராளிகளும், சகோதரர்களும் நிற்பதாக இந்திய விமானப்படை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

"குவாலியரில் இருந்து காலையில் புறப்பட்ட மிராஜ் மற்றும் சுகோய் விமானங்களில் மொத்தம் மூன்று விமானிகள் இருந்துள்ளனர். இரண்டு விமானிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மற்றொரு விமானியின் உடல் பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன," என்று மொரேனா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான சுகோய்-30 போர் விமானத்தில் 2 விமானிகளும், மிராஜ்-2000 விமானத்தில் ஒரு விமானியும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர்.

மொரேனா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசுதோஸ், "விமானங்கள் நடுவானில் மோதின என உறுதி செய்ய மறுத்து விட்டார். இந்திய விமானப் படையின் முழு விசாரணைக்குப் பிறகே விபத்து எப்படி நடந்தது என அறிய முடியும்," என்று அவர் கூறினார்.

விபத்து நடந்த இடத்திலிருந்து மிராஜ்-2000 போர் விமானத்தை இயக்கிய விமானியின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

மத்திய பிரதேசம் - ராஜஸ்தான் மாவட்ட எல்லையில் நடந்த இந்த விபத்தில் சிதைந்த விமானத்தின் சில பாகங்கள் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள ரத்தன்கர் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சுகோய்-30, மிராஜ்-2000

பட மூலாதாரம்,BBC/PRAHLAD_SEN

இதுகுறித்து பேசிய பரத்பூர் டி.எஸ்.பி, "காலை 10-10.15 மணியளவில் விமான விபத்து பற்றிய தகவல் கிடைத்தது. இங்கு வந்த பிறகு, அது இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு காணப்படும் பாகங்களை வைத்து, இது போர் விமானமா அல்லது சாதாரண விமானமா என்பதை எங்களால் தீர்மானிக்க முடியவில்லை." 

இந்த விபத்து குறித்த தகவலை இந்திய விமானப் படை உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட டிவிட்டர் பதிவில், விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

விமான விபத்து தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதற்கட்ட தகவல்களை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மூலம் கேட்டு அறிந்து கொண்டதாகவும், தொடர்ந்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தக் கூறியுள்ளதாகவும் பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

இன்று காலை நடந்த இந்த விபத்து குறித்து உள்ளூர் காவல்துறைக்கு 10 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இது தனியார் ஜெட் என தகவல் வெளியான நிலையில், விசாரணைக்கு பிறகு இந்திய விமானப் படைக்கு சொந்தமான போர் விமானங்கள் என தெரிய வந்துள்ளது.

விமான விபத்து தொடர்பாக தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ள மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், உள்ளூர் நிர்வாகம் மூலமாக மீட்பு பணிகளை விரைந்து நடத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c9e4exppkryo

  • கருத்துக்கள உறவுகள்

இரு வேறு மாநிலங்களில் விழுந்த இந்தியப் போர் விமானங்கள்; ஒரே விபத்தா? அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்?

https://www.facebook.com/watch/?v=1586504331851544

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 5 வருடங்களில் 24 விமானப்படை விமானிகளை இழந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.