Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`பிரபாகரன் விவகாரத்தைக் கிளப்பியதற்குப் பின்னால் பாஜக அரசா?' - திருமா குற்றச்சாட்டும், பின்னணியும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறன் அறிவித்த நிலையில், இலங்கை ராணுவம் அந்தக் கூற்றை முற்றிலுமாக மறுத்துவிட்டது. தமிழ்நாட்டிலுள்ள அரசியல் தலைவர்களில் சீமான், வைகோ ஆகியோர் பிரபாகரன் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தை தெரிவித்துவிட்டனர். நெடுமாறனைப் பொறுத்தவரை இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டம் முடிவடைந்து பிரபாகரன் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு அரசு அறிவித்ததிலிருந்தே, அதை மறுத்துவருகிறார். இதுவரை நான்குக்கும் மேற்பட்ட முறை `பிரபாகரன் திரும்ப வருவார்' என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார் நெடுமாறன்.

இந்த அறிக்கைக்கு ஆதரவும், விமர்சனங்களும் எழுந்துவரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ``பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற அறிவிப்பில் கால பொருத்தமும் இல்லை, அரசியல் பொருத்தமும் இல்லை. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதைத் தற்போது அறிவிப்பதற்கு என்ன காரணம்... அதை அறிவிப்பதற்கான தற்போதைய தேவை என்ன... பா.ஜ.க அரசு ஈழத் தமிழர் பிரச்னையில் இலங்கையிலுள்ள சிங்கள அரசை அச்சுறுத்தும் நோக்கோடு தலையீடுவதாகத் தெரிகிறது. அதே வேளையில், பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பின் பின்னணியில் இந்திய உளவுத்துறை இருப்பதாக எண்ணத் தோன்றுகிறது” என்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசிடம் பேசினோம். ``இப்போது இருக்கும் தெற்காசிய அரசியல் சூழலில் இந்தியா ராணுவரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்துவருகிறது. இந்தியாவைச் சுற்றியிருக்கும் நாடுகள் எல்லாமே பகை நாடுகளாக மாறியிருக்கின்றன. நிலைமை இவ்வாறு இருக்க இந்தியாவை ஒட்டியிருக்கும் இலங்கையைத் தன் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு ரொம்ப நாள்களாக இந்தியா ஆசைப்படுகிறது. அதவாது காங்கிரஸ், பா.ஜ.க இரண்டுமே. இதற்காக இந்தியா பல கோடி ரூபாய் இலங்கைக்கு நிதி உதவி செய்தாலும், இலங்கை சீன சார்பு நாடாகவே இருக்கிறது. ரணில் விக்ரமசிங்க அமெரிக்க சார்புடையவராக இருந்தாலும், ராஜபக்சே ஏற்கெனவே சீன சார்பு நிலையை எடுத்ததினால், அந்த நிலைப்பாட்டிலிருந்து விலக முடியவில்லை.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் இலங்கையைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று இந்தியா நீண்டகாலமாக முயல்கிறது. ஏற்கெனவே இந்த ஸ்டேட்டர்ஜியை வைத்துத்தான் ஜெயவர்த்தனேவை இந்திரா காந்தி அச்சுறுத்தி வைத்திருந்தார். அதே நிலைப்பாட்டை இவர்கள் மீண்டும் பிரபாகரன் வருகிறார் என்று சொல்லவைத்து இலங்கையை அச்சுறுத்துவதற்கான ஒரு யுத்தியை உளவுத்துறையும், உளவுத்துறை இயக்குகிற பா.ஜ.க-வும் கையாள்வது தெரிகிறது. இந்தப் பின்னணியில் நெடுமாறன் ஐயாவிடம் இந்தச் சதியைச் சொல்லி, சொல்லவைத்திருப்பார்கள் என்று நான் நம்பவில்லை. பிரபாகரன் உயிரோடு இருப்பார் என்றால், புலிகளைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவின் உதவி தேவைப்படும். அப்போது நாம் கட்டுப்படுத்தலாம் என இவர்கள் கணக்கு போடுகிறார்கள்.

வன்னி அரசு
 
வன்னி அரசு

அதே வேளையில் ராஜபக்சேவுக்கு எதிராக சிங்கள மக்களே போராட்டம் நடத்துகிறார்கள். அந்த சிங்கள மக்களை திசைதிருப்புவதற்கு, ‘எதிரி பிரபாகரன் வந்துவிட்டார். அமைதியாக வந்திருங்கள். புலிகளை அடக்க ராஜபக்சேதான் சரியாக இருப்பார்’ என்கிற ஒரு யுத்தியையும் கையில் எடுக்கிறார்கள். இலங்கை ராணுவம் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று அறிவித்தபோது, இந்தியாவும் ஒப்புக்கொண்டது. அதைத் தொடர்ந்து இந்தியா அங்கிருக்கும் மக்களுக்கு உதவி செய்கிறது. இந்த நிலையில், இப்போது இதைச் செய்வதற்கான காரணம் தெற்காசியாவில் இந்தியா, இலங்கையைக் கட்டுப்படுத்தும் என்பதே.நெடுமாறன் ஐயா அறிவிப்புக்குப் பிறகு, இந்நேரம் உளவுத்துறை விசாரித்திருக்க வேண்டாமா... ஏனென்றால் விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கம். ஒவ்வொரு மூன்றாண்டும் பா.ஜ.க தடையை நீட்டிக்கிறது. அப்படி நீட்டிக்கப்படும் இயக்கத்தின் தலைவர் உயிரோடு இருக்கிறார் என்று சொல்லும்போது, நெடுமாறன் ஐயாவை விசாரணை செய்திருக்க வேண்டும். இதுவரை அவரை விசாரணை செய்யாததினால் முழுக்க முழுக்க அவரை இயக்கியதன் பின்னணியில் இந்தியாவின் உளவுத்துறையும், பா.ஜ.க அரசும் சேர்ந்து செய்த நாடகம் என்பது தெளிவாகிறது. இதனால் ஈழத்தமிழர்களுக்கு எந்தவித பயனும் கிடைக்காது. இது முழுக்க முழுக்க பா.ஜ.க அரசின் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடிய ஒரு யுக்தி. அந்த யுக்திக்கு நெடுமாறன் ஐயா பயன்பட்டிருக்கிறார்” என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பேசுகையில், ``கடந்த இருபது, இருபத்தைந்து ஆண்டுகளாக ஈழ நாடகத்தை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருப்பவர்கள், அங்கிருக்கக்கூடிய மக்களைக் காப்பாற்றுவதற்கு, நல்வாழ்வுக்கு, பொருளாதார சீர்திருத்தத்துக்குப் பாடுபட்டு உழைத்துக்கொண்டிருக்கும் பா.ஜ.க-வைக் குறித்துப் பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை. இதுவரையிலும் ஈழ மக்கள் குறித்து, திருமாவளவன் உட்பட யாரேனும் யாழ்ப்பாணம் சென்று யாரையாவது சந்தித்தது உண்டா... இவர்கள் பா.ஜ.க நாடகமாடுகிறது என்று சொல்வதற்கு எந்தவிதமான முகாந்திரமும், உரிமையும் இல்லை.

நாராயணன் திருப்பதி
 
நாராயணன் திருப்பதி

அந்த மக்கள் குறித்து கவலைப்படுவதற்கு இவர்களுக்குத் தகுதியும் கிடையாது. பா.ஜ.க தொடர்ந்து இத்தனை வருடங்களாக, அங்கிருக்கும் மக்கள் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அந்த நாட்டில், அந்த மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்று உறுதியோடு பணியாற்றிக்கொண்டிருக்கிறது. ஆனால், ஒன்றரை லட்சம் தமிழர்களைப் படுகொலை செய்யக் காரணமாக இருந்த காங்கிரஸுடன் வெட்கமே இல்லாமல் கூட்டணி வைத்துக்கொண்டு பதவி சுகத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் திருமாவளவன், பா.ஜ.க குறித்துப் பேசுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்றார்.

`பிரபாகரன் விவகாரத்தைக் கிளப்பியதற்குப் பின்னால் பாஜக அரசா?' - திருமா குற்றச்சாட்டும், பின்னணியும்! |Is the central BJP government behind the Prabhakaran talks which created a ruckus in the politics? - Vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.