Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பழ.நெடுமாறனின் "தமிழர் தியாகப் பயண"த்தை தடுக்க வேண்டும்: இந்தியாவிடம் சிறிலங்கா முறைப்பாடு

Featured Replies

புதன்கிழமை 5 செப்ரெம்பர் 2007 17:18 ஈழம் ப.தயாளினி

யாழ்ப்பாணத்தில் அல்லற்படும் ஈழத் தமிழர்களுக்காக உணவு மற்றும் மருந்துப் பொருட்களை படகில் எடுத்துக்கொண்டு தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பழ. நெடுமாறன் மேற்கொள்ள உள்ள "தமிழர் தியாக பயண"த்தை தடுக்க வேண்டும் என்று இந்தியாவிடம் சிறிலங்கா அரசாங்கம் முறைப்பாடு செய்துள்ளது.

பழ.நெடுமாறனின் இந்த தமிழர் தியாகப் பயணம் தொடர்பாக இந்திய அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்ய சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சஇ மகிந்தவின் செயலாளர் பசில் ராஜபக்ச மற்றும் மகிந்தவின் ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அனுப்பி வைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமான டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

அக்குழுவினர் புதுடில்லியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனின் பழ. நெடுமாறனின் "தமிழர் தியாகப் பயணம்" குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர். இந்த சந்திப்பில் சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்தும் பங்கேற்றார்.

யாழ்ப்பாணத்துக்குள் உணவு மற்றும் மருந்துப் பொருட்களுடன் பழ. நெடுமாறன் நுழைவதைத் தடுக்க வேண்டும் என்று இச்சந்திப்பின் போது மகிந்த ராஜபக்சவின் பிரதிநிதிகள் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

நன்றி : புதினம்

நல்லது ஜய்யா அபப்டியே கரவெட்டிக்கும் போவிர்களா?

நீங்களும் கொண்டு போறதை ஆள் மாறி கொடுக்காம எங்கு தேவை இருக்கோ அங்கு கொண்டு சேருங்கள்...

நல்லது ஜய்யா அபப்டியே கரவெட்டிக்கும் போவிர்களா?

நீங்களும் கொண்டு போறதை ஆள் மாறி கொடுக்காம எங்கு தேவை இருக்கோ அங்கு கொண்டு சேருங்கள்...

வினித் நெடுமாறன் எமது விடுதலையின்பால் நாட்டம் கொண்டவர்தான் அதில் சந்தேகமில்லை.

ஆனால் இது ஒரு விளம்பரம். (இதை எதற்காக கையிலெடுத்துக்கொண்டாரோ)

ஒருவேளை தனது எதிர்ப்பை தமிழக மற்றும் மத்திய அரசுக்கு காட்டுவதற்காகவோ என்னவோ?

12 ம்திகதி நெடுமாறன் கடலுக்கு செல்லும்போது கைதுசெய்யப்படுவார். இதற்காகத்தானே இந்த விளம்பரம். உண்மையில் அவர் உதவி செய்ய பொருட்களுடன் புறப்படுவதாக இருந்தால் பொருட்களை ஈழத்திற்கு கொண்டுவந்துவிட்டு அறிவித்திருக்கலாம்.

வன்னியன்

முதலில் நெடுமாறன் ஜயா அவர்கள் அரசியல் கட்சி சார்பாக தேர்த்தலில் நிற்பவரில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள் அரசியல் ஸ்ரன்ட் அடிக்க கனக்க பேர் இருகீனம் ஆனால் ஒரு நல்ல மனிதரை இப்படி சிறுவட்டத்துகுள் பார்காதயுங்கள் அவர் எந்த முடிவையும் எதிர்பார்த்துத்தான் இந்த போராட்டத்தில் குதித்ததாக சொல்லி இருகின்றார் ஆகவே அவரை பாராட்டாவிட்டாலும் பறவாயில்லை அவரை சிறுமைப்படுத்தாமல் இருந்தால் போதும் எமக்கு இல்லாத தில் அவருக்கு இருப்பதையும் ஞாபகபடுத்த விரும்புகின்றேன்

வினித் நெடுமாறன் எமது விடுதலையின்பால் நாட்டம் கொண்டவர்தான் அதில் சந்தேகமில்லை.

ஆனால் இது ஒரு விளம்பரம். (இதை எதற்காக கையிலெடுத்துக்கொண்டாரோ)

ஒருவேளை தனது எதிர்ப்பை தமிழக மற்றும் மத்திய அரசுக்கு காட்டுவதற்காகவோ என்னவோ?

12 ம்திகதி நெடுமாறன் கடலுக்கு செல்லும்போது கைதுசெய்யப்படுவார். இதற்காகத்தானே இந்த விளம்பரம். உண்மையில் அவர் உதவி செய்ய பொருட்களுடன் புறப்படுவதாக இருந்தால் பொருட்களை ஈழத்திற்கு கொண்டுவந்துவிட்டு அறிவித்திருக்கலாம்.

இதை விளம்பரமாக என்னால் எற்றுக் கொள்ள முடியவில்லை மாறக இந்திய அரசையும் தமிழ்நாட்டு அரசுக்கு நெருக்கடி கொடுப்துக்கே .

முக்கியமாக இங்கு தேவை அதிகம் ஆனா கொடுக்க போகும் பொருள் அதை நிவர்த்தி செய்யாது ஆனால் செயற்பாடு தமிழ்நாட்டில் சில மாற்றத்தை கொண்டுவரலாம்?

  • தொடங்கியவர்

நிச்சயமாய் ஐயா நெடுமாறன் விளம்பரத்திற்காய் இதைச் செய்திருக்க மாட்டார். அவரை அறிந்த காலம் தொட்டு ஈழத்தமிழரின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டவர். எமது விடுதலையின் பால் ஆர்வம் கொண்டவர். இவருக்கு விளம்பர ஸ்டண்கள் பண்ண வேண்டி ய எந்த அவசியமும் இல்லை. இவர் எந்த அரசியல் கட்சியிலும் சாராமல் உலகத் தமிழரின் குரலாக இருப்பவர். அரசியல் வாதிகளை நம்பும் எம்மவர்கள் இவரது செயல்களை சந்தேகமாக நோக்குகின்றனர்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக இது விளம்பரம் தான்.

ஈழத்தமிழர் பட்டினியால் வாடுகின்ற நிலையையும், துன்பப்படுகின்ற நிலையையும் வெளிப்படுத்த திரு. நெடுமாறன் ஐயா உலகிற்கு வெளிப்படுத்தச் செய்கின்ற விளம்பரம் தான். இந்த முதிய வயதில் இப்படிக் கஸ்டப்பட வேண்டியதோ, உயிராபத்தை எதிர்நோக்க வேண்டிய தேவையோ அவருக்கில்லை. அதனால் எவ்வித இலாபமும் அவருக்கு வரப்போவதில்லை என்பதை நண்பர் வன்னியன் புரிந்து கொள்வாராக.

இப்படி யோசிக்காமல் எழுதும் வசனங்கள் அன்பு உள்ளங்களின் மனதைத் துன்பப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுவீராக.

ஆனால் நெடுமாறன் ஐயா தன்னுடைய பாதுகாப்பையும் இத்தருணத்தில் உணர்ந்து அதற்கு ஏற்ற வகையில் செயற்பட வேண்டும் என்பதே எம் விருப்பு. ஏனென்றால் என்றுமே தாங்கள் எமக்குத் தேவை.

உணவுப் பொருட்களை கொண்டு போக முடியாது என்பதும், தான் கைது செய்யப்படுவேன் என்பது ஐயா நெடுமாறன் அவர்களுக்கு நன்கு தெரியும்.

இதை அவர் நடத்துகின்ற போராட்டங்களில் ஒரு வடிவமாகத்தான் பார்க்க வேண்டும். இந்தப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்களை தட்டி எழுப்புவதே அவர் நோக்கம்.

நிச்சயமாக இது விளம்பரம் தான்.ஈழத்தமிழர் பட்டினியால் வாடுகின்ற நிலையையும், துன்பப்படுகின்ற நிலையையும் வெளிப்படுத்த திரு. நெடுமாறன் ஐயா உலகிற்கு வெளிப்படுத்தச் செய்கின்ற விளம்பரம் தான். இந்த முதிய வயதில் இப்படிக் கஸ்டப்பட வேண்டியதோ, உயிராபத்தை எதிர்நோக்க வேண்டிய தேவையோ அவருக்கில்லை. அதனால் எவ்வித இலாபமும் அவருக்கு வரப்போவதில்லை என்பதை நண்பர் வன்னியன் புரிந்து கொள்வாராக.இப்படி யோசிக்காமல் எழுதும் வசனங்கள் அன்பு உள்ளங்களின் மனதைத் துன்பப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுவீராக.ஆனால் நெடுமாறன் ஐயா தன்னுடைய பாதுகாப்பையும் இத்தருணத்தில் உணர்ந்து அதற்கு ஏற்ற வகையில் செயற்பட வேண்டும் என்பதே எம் விருப்பு. ஏனென்றால் என்றுமே தாங்கள் எமக்குத் தேவை.
நெடுமாறன் ஜயாவை பற்றி தூயவன் ஜய்யா சொன்னா சரியாகத்தான் இருக்கும்,.
உணவுப் பொருட்களை கொண்டு போக முடியாது என்பதும், தான் கைது செய்யப்படுவேன் என்பது ஐயா நெடுமாறன் அவர்களுக்கு நன்கு தெரியும்.இதை அவர் நடத்துகின்ற போராட்டங்களில் ஒரு வடிவமாகத்தான் பார்க்க வேண்டும். இந்தப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்களை தட்டி எழுப்புவதே அவர் நோக்கம்.
சந்தேக கண் கொண்டு பார்த்து பார்த்து பழகிவிட்டது போல .... :rolleyes:

சாப்பாட்டுச் சாமான்களுக்கே இப்படி ஆடம் காணும் சிங்கள அரசு..

வேறு ஏதும் கொண்டுவருவதாக அறிவித்திருந்தால் ...

சும்மா அறிக்கைக்கே இப்படியென்றால்....

Edited by அ

பழ. நெடுமாறன் கடல் மார்க்கமாக இலங்கை வருவாரேயாயின் அதற்கு நாட்டின் சட்டம் நடவடிக்கை எடுக்கும்-கெஹெலிய

[Thursday September 06 2007 02:18:29 PM GMT]

இந்திய தமிழ் அரசியல்வாதியான பழ. நெடுமாறன் கடல் மார்க்கமாக இலங்கை வருவாரேயாயின் அதற்கு நாட்டின் சட்டம் தான் நடவடிக்கை எடுக்குமென ஏசியன் ரிபியூனிற்கு இலங்கை அரசின் பாதுகாப்பு பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கடல் மார்க்கமாக யாரவது சட்டவிரோதமாக நாட்டினுள் நுழைகின்றார்களா என கண்காணிக்க ஸ்ரீ லங்கா கடற்படையினர் கரையோர பகுதியில் தீவிர ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என கெஹெலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ் மக்களிற்கு தேவையான மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களுடன் பழ நெடுமாறன் கடல் மார்க்கமாக பாக்கு நீரிணையூடக எதிர்வரும் 12 ஆந் திகதி இலங்கை வரப்போவதாக தெரிவித்திருந்தார். எனினும் பழ நெடுமாறனின் இலங்கை விஜயத்தை தடுத்து நிறுத்துமாறு இந்தியா சென்றுள்ள உயர்மட்ட இலங்கை தூதுக்குழு இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது. அதேவேளை நெடுமாறன் இலங்கை வருவாரேயாயின் அடு இந்திய இலங்கை நல்லுறவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நன்றி-தமிழ்வின்.

  • தொடங்கியவர்

படகுப் பயணம் புதனன்று!

திட்டவட்டமாக அறிவித்தார் பழ.நெடுமாறன்

இலங்கைக்கான படகுப்பயணம் திட்டமிட்டபடி எதிர்வரும் 12ம் திகதி புதன்கிழமை தொடரும் என உறுதிப்பட திட்டவட்டமாக மீண்டும் அறிவித்துவிட்டார் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவரும், தமிழீழ விடுதலை ஆதரவாளர் குழு ஒருங்கிணைப்பாளருமான பழ. நெடுமாறன் அவர்கள்.

இறுதியாக நேற்று முன்தினம் மதுரையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு தகவல் தந்த நெடுமாறன் :-

ஈழத் தமிழர்களுக்காக தமிழகத்தில் உணவு மருந்துப் பொருள்கள் பொதுமக்களிடம் திரட்டப்பட்டன. இதையடுத்து, பெப் 9ஆம் திகதி இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மத்திய அரசிடம் பொருட்களை அனுப்ப அனுமதி கேட்டுக் கடிதம் அனுப்பியது.

கடந்த மார்ச்சில் ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ, பா.ம.க. நிறுவுனர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர் நேரிலும், கடிதமூலமும் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து வேண்டுகொள் விடுத்தனர். இதற்கு எவ்வித பதிலும் அவர்களிடமிருந்து எமக்கு இதுவரை கிடைக்கவில்லை. பிரதமர், தமிக முதலவர் ஆகியோருக்கு பல் வேறு அமைப்புகள் சார்பில் தந்திகளும் அனுப்பப்பட்டன.

ஜூன் 5ம் திகதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. ஜூன் 13ல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க தெற்காசிய செயலா உடோவாகுனர் பெய்யையும்; சந்தித்துக் கேட்டோம். மத்திய அரசுக்குப் பதில் அனுப்பியும் உரிய பதில் இதுவரை இல்லை.

எதிர்வரும் 7 முதல் 11ஆம் திகதி வரை திருச்சியிலிருந்து நாகபட்டினம் நோக்கியும், மதுரையிலிருந்து இராமேஸ்வரம் நோக்கியும் பயணம் தொடரும். 12ம் திகதி காலை 10 மணிக்கு நாகப்பட்டினம், இராமேஸ்வரம் ஆகிய துரைமுகங்களிலிருந்து ஈழத் தமிழர்களுக்கான மனித நேய உதவிப் பொருள்களை ஏற்றிச் செல்லும் படகுப் பயணப் போராட்டம் முன்னெடுக்கப்படும். என்றார்.

நன்றி : சுடர் ஒளி

நெடுமாறனின் வருகையினை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் ஜே.வி.பி. கோரிக்கை

தமிழகத்திலிருந்து பழ.நெடுமாறன் கடல் வழியாக யாழ்ப்பாணம் வருவதனை தடுக்க வெளிவிவகார அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் இந்தியாவும் நெடுமாறனின் வருகையை தடுக்கவேண்டும். இல்லாவிடின் இந்தியாவுடனான இலங்கையின் இராஜதந்திர உறவுகளில் பாதிப்புக்கள் ஏற்படலாம் என்று ஜே.வி.பி. எச்சரித்துள்ளது.

இதேவேளை யாழ்ப்பாண மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்து வகைகளை அரசாங்கம் உடனடியாக அனுப்பிவைக்கவேண்டும். எந்தவொரு நாட்டிற்கும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட முடியாது என்று ஜே.வி.பி. யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

திட்டமிட்டபடி எதிர்வரும் 12 ஆம் திகதி படகுகளில் யாழ்ப்பாணம் செல்வோம் சென்று தமிழகத்தின் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது ;

பழ.நெடுமாறன் கடல்வழியாக யாழ்ப்பாணம் வருவதாக தெரிவித்துள்ளார். ஒருவகையிலான எச்சரிக்கையை நெடுமாறன் விடுத்துள்ளார் என்று கூறலாம். இவ்விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிடவேண்டும். நெடுமாறனின் வருகையை தடுத்து நிறுத்தவேண்டும்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இந்தியாவின் வெளிவிவகார அமைச்சுடன் தொடர்புகொண்டு இவ்விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். அவரின் வருகையை தடுக்க அரசாங்கம் சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைய செயற்படவேண்டும்.

அதேவேளை நெடுமாறனின் விஜயத்தை இந்திய அரசாங்கம் நிறுத்தவேண்டும். எந்தவொரு நாட்டிற்கும் எமது நாட்டின் செயற்பாடுகளில் மூக்கை நுழைக்க முடியாது. எனவே இந்தியா இவ்விடயத்தில் எமது நாட்டுக்கு சாதகமான முறையில் செயற்படவேண்டும். இந்தியா அவ்வாறு செயற்படாதவிடத்து எதிர்காலத்தில் இந்தியாவுடனான எமது நாட்டின் இராஜதந்திர உறவுகளில் பாதிப்பு ஏற்படலாம்.

இதேவேளை அரசாங்கம் யுத்தத்தை மேற்கொண்டுவருகின்ற அதேவ÷ளை யாழ்ப்பாண மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசாங்கத்தின் இயந்திரம் சிறப்பாக செயற்படவேண்டும்.

http://www.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.