Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனி அதிக இடங்களில் போட்டி..ஸ்ராலினின் தேசிய அரசியல் நகர்வு ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனி அதிக இடங்களில் போட்டி..ஸ்ராலினின் தேசிய அரசியல் நகர்வு..

MK-stalin-rahul-gandhi-PTI-395x246.jpg

சென்னை: 2024 நாடாளு்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அதிக இடங்களில் போட்டியிடும் திட்டத்தில் திமுக இருப்பதாக திமுகவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் வென்ற குஷியில் இருக்கும் திமுக - காங்கிரஸ் கூட்டணி 2024 லோக்சபா தேர்தலுக்காக தயாராக தொடங்கி உள்ளது. இந்த வெற்றி தொடர் வெற்றிகளை சந்தித்து வரும் திமுகவிற்கு மிகப்பெரிய உந்துதலாக அமைந்து உள்ளது.

இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தலில் கடந்த முறையை விட அதிக இடங்களில் போட்டியிடலாம் என்ற ஆலோசனையில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பின் பல்வேறு திட்டங்களை திமுக வகுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

திமுக

சமீபத்தில் சென்னையில் முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் அவர் தன்னுடைய தேசிய அளவிலான திட்டம் குறித்து பேசினார். இந்த நிகழ்விற்கு முன் பேசிய பரூக் அப்துல்லா.. முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்கிறார். பாஜகவை கட்டுப்படுத்த அவரை போன்ற ஒருவர் தேசிய அரசியலுக்கு தேவை. தேசிய அரசியலில் அவர் இருந்தால் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இதனால் ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வர வேண்டும் என்று பரூக் அப்துல்லா பேசி இருந்தார். இதையடுத்து செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்.. தான் ஏற்கனவே தேசிய அரசியலுக்கு வந்துவிட்டதாகவும், தேசிய அரசியலில்தான் தான் இருப்பதாகவும் பேசி இருந்தார்.

முதல்வர் ஸ்டாலின்

மேலும் பிறந்தநாள் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகாலமாக வெற்றிபெற்றதற்கு ஒற்றுமை தான் காரணம். இந்த ஒற்றுமை தேசிய அளவில் இருக்க வேண்டும். தமிழ்நாட்டை போல் ஒற்றுமையான கூட்டணியை தேசிய அளவில் அமைக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டாலே வெற்றி நிச்சயம். அதுதான் இப்போது முக்கியம். காங்கிரஸ் அல்லாத கூட்டணிக்கு விடுக்கும் வாதங்களை நிராகரிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் விட்டுக்கொடுத்து பாஜகவுக்கு எதிராக ஒன்றுசேர வேண்டும். காங்கிரஸ் இல்லாமல் கூட்டணி அமைக்க கூடாது. அப்படியே அமைத்தாலும் அது கரை சேராது. தேர்தலுக்கு பின் கூட்டணி என்பதும் நடைமுறைக்கு சரியாக இருக்காது, என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த விழாவில் ஸ்டாலின் பிரதமர் ஆக வேண்டும் என்றும் கூட பரூக் அப்துல்லா கூறி இருந்தார். இதற்கான திட்டங்களை திமுகவும் வைத்து உள்ளதாக கூறப்படுகிறது. 2024ல் தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் பட்சத்தில்.. காங்கிரசை பல்வேறு கட்சிகள் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை. உதாரணமாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, திரிணாமுல் காங்கிரஸ் போன்றவை காங்கிரசை ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கும் போது இந்த கட்சிகளுக்கு நட்பாக இருக்கும் ஒருவர்தான் பிரதமர் ஆக முடியும். அதாவது தொங்கு நாடாளுமன்றம் உருவானால், எதிர்க்கட்சிகள் ஒன்று இணைந்து ஆட்சி அமைக்கும். அப்படிப்பட்ட சமயத்தில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஏற்றுக்கொள்ளும் ஒருவர் பிரதமராக வேண்டும். இதை மனதில் வைத்தே திமுக காய்களை நகர்த்தி வருகிறதாம்.

காங்கிரஸ்

காங்கிரஸ் சார்பாக ராகுல் பிரதமர் ஆக வேண்டும் என்பதே திமுகவின் எண்ணமாம். காங்கிரஸ்தான் தலைமையேற்க வேண்டும். அதில் தவறு இல்லை என்பதில் திமுக உறுதியாக உள்ளது. இதை முதல்வர் ஸ்டாலினும் அழுத்தமாக சொல்லி இருக்கிறார். ஆனால் ஒருவேளை தொங்கு நாடாளுமன்றம் உருவாகி, காங்கிரஸ் தலைமை மற்ற கட்சிகள் ஏற்கவில்லை என்றால் அப்போது ஸ்டாலினை பிரதமராக்கலாம் என்ற திட்டமும் திமுக வசம் உள்ளதாம். இதை மனதில் வைத்தே நாடாளுமன்ற தேர்தலில் கூடுதல் இடங்களில் போட்டியிட திமுக முடிவு செய்துள்ளதாம்.

25 - 28 இடங்களில் போட்டி

கடந்த தேர்தலில் 20 இடங்களில் திமுக போட்டியிட்ட நிலையில் இந்த முறை 25 - 28 இடங்களில் கூட போட்டியிடலாம் என்ற திட்டத்தில் இருக்கிறதாம். காங்கிரசுக்கு குறைவான சீட்டுகளை கொடுக்கலாம். அதேபோல் கூட்டணி கட்சிகளுக்கு 2 சீட் கொடுத்தாலும், அனைத்திலும் திமுக சின்னத்தில் போட்டியிட வைக்கலாம் என்ற திட்டத்திலும் இருக்கிறதாம். நாடாளுமன்றத்தில் தற்போது 3வது பெரிய கட்சி திமுகதான். அந்த ஸ்டேட்டஸை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறதாம். அதோடு தொங்கு நாடாளுமன்றம் உருவானால் அப்போது தங்களுக்கும் பவர் இருக்க வேண்டும் என்பதால் இத்தனை இடங்களில் போட்டியிட திமுக பிளான் செய்துள்ளதாம்.

https://tamil.oneindia.com/news/chennai/is-cm-stalin-of-tamil-nadu-going-national-what-is-the-dmk-plan-for-2024-lok-sabha-election-501269.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டிலேயே… துண்டுச் சீட்டு.
தேசிய அளவில்…..?
ப்ளீஸ்  ரெல் மீ…. 🫠

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

தமிழ் நாட்டிலேயே… துண்டுச் சீட்டு.
தேசிய அளவில்…..?
ப்ளீஸ்  ரெல் மீ…. 🫠

IMG-20230304-114843.jpg

அதனாலென்ன.. ரகு தாத்தா தான் தோழர்..😊

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இதனால் ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வர வேண்டும் என்று பரூக் அப்துல்லா பேசி இருந்தார். இதையடுத்து செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்.. தான் ஏற்கனவே தேசிய அரசியலுக்கு வந்துவிட்டதாகவும், தேசிய அரசியலில்தான் தான் இருப்பதாகவும் பேசி இருந்தார்.

இந்த விழாவில் ஸ்டாலின் பிரதமர் ஆக வேண்டும் என்றும் கூட பரூக் அப்துல்லா கூறி இருந்தார். இதற்கான திட்டங்களை திமுகவும் வைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

அகில இந்திய அளவில்... ஓட்டுக்கு காசு கொடுக்கும் அளவுக்கு,
தி.மு.க. தமிழ்நாட்டை... வரி சுருட்டி கொள்ளை அடித்து வைத்திருக்கின்றது.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.