Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனித உரிமை மீறல்கள் குறித்து அரசிடம் விளக்கம் கோர வேண்டும் ஐ.நா. சபையிடம் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமை மீறல்கள் குறித்து அரசிடம் விளக்கம் கோர வேண்டும் ஐ.நா. சபையிடம் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை

இலங்கையில் இடம்பெறும் மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பாக ஐக்கியநாடுகள் சபை இலங்கை அரசாங்கத்திடம் விளக்கம் கோர வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை கோரியுள்ளது. மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு குழுவை அனுமதிப்பதோடு, பலவந்தமாக காணாமல் போவதிலிருந்து சகலரையும் பாதுகாக்கும் ஐ.நா. சமவõயத்தை தாமதமின்றி அமுல்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துமாறும் சர்வதேச மன்னிப்புச் சபை ஐ.நா.வை கேட்டுள்ளது.

இலங்கையில் இடம் பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு ஐ.நா.வின் மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள பகிரங்க அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

நீதிக்கு புறம்பõன கொலைகள், கடத்தல்கள், பலவந்தமான காணாமல் ÷பாதல்கள் என்பன இலங்கையில் நாளாந்த நிகழ்வாகிவிட்டன. கடத்தல்கள், கொலைகள் தொடர்பான பல முறைப்பாடுகள் ஆண்டின் முதல் 6 மாத காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இனந்தெரியாத ஆயுததாரிகளால் ஊடகவியலாளர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கிறது.

2005 ஆம் ஆண்டு மோதல்கள் மீண்டும் ஆரம்பமானதையடுத்து ஆகக்குறைந்தது 4000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வார இறுதியில்

மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையை அடுத்து மன்னாரில் 4000 பொது மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

பொது மக்கள் போர் நிறுத்தத்தை காணமுடியாதுள்ளனர். பாதுகாப்பு படைகளாலும் புலிகள் உள்ளிட்ட ஏனைய ஆயுதக் குழுக்களாலும் பொது மக்கள் நேரடியாக இலக்கு வைக்கப்படுகின்றனர்.

விஷேடமாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் பொது மக்களை பாதுகாப்பதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் யாழ்ப்பாணத்தில் 21 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 13 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதõகவும் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனவே இலங்கையில் இடம் பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த சர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவின் விடுகையை அனுமதிக்குமாறு ஐ.நா. இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்.

ஐ.நா.வின் மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தாமதமின்றி அமுல்படுத்துமாறு அரசாங்கத்தை ஐ.நா. கோர வேண்டும்.

- வீரகேசரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமைகளை இங்கு பேண

சர்வதேச அவதானிப்பு அவசியம்

`

"இலங்கையில் மனித உரிமைகளைப் பேணுவது தொடர்பில் இழைக்கப்பட்டு வரும் தவறுகள் மற்றும் செயற்றிறனின்மை போன்றவை குறித்து ஊன்றிக் கவனிக்கும்படி இலங்கை அரசை வற்புறுத்துங்கள்''

இவ்வாறு ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் பிரிட்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் முக்கிய சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான சர்வதேச மன்னிப்புச் சபை கோரியிருக்கின்றது.

இன்னும் நான்கு நாட்களில் அடுத்த திங்கட்கிழமை ஜெனிவாவில் ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆறாவது அமர்வு ஆரம்பமாகி சுமார் 18 நாட்கள் நீடிக்க இருக்கையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.

ஐ. நா. மனித உரிமை ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் அனைத்து பிரதிநிதிகளும் இலங்கையில் மனித உரிமைகள் சீர்கெட்டு வரும் நிலைமை குறித்து கவனித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என மன்னுப்புச் சபை கோரியிருக்கின்றது.

மன்னிப்புச் சபை இலங்கை நிலைமை குறித்து சுட்டிக்காட்டியுள்ள விடயங்கள் முக்கியமானவை. சகல தரப்பினராலும் கவனத்தில் கொள்ளத்தக்கவை.

வடக்கு, கிழக்கில் மக்களைப் பாதுகாக்க முடியாத நிலைமை குறித்து மன்னிப்புச்சபை விசேடமாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றத

சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை வரவேற்கத்தக்க்கது.

ஆனால், இன்னும் நான்கு நாட்களில் அடுத்த திங்கட்கிழமை ஜெனிவாவில் ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆறாவது அமர்வு ஆரம்பமாகும் போது சிறீ லங்காவும் தமது தலையை பாதுகாத்துக்கொள்ளும் தயார்படுத்தலில் ஏற்கனவே இறங்கி இருக்கக்கூடும்.

இலங்கையில் சர்வதேச மனித உரிமைகளும் சட்டங்களும் மீறப்படுவதை, இலங்கையில் நேரடியாகப் பிரசன்னமாகி இருந்து, கண்காணித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்க சுயாதீனமான சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு முறைமை இருக்கவேண்டும் என வலியுறுத்துவது ஆக்கபூர்வமான சிந்தனை.

ஆனால், சிறீ லங்காவில் போர் நிறுத்த கண்காணிப்பு குழுவிற்கு ஏற்பட்ட நிலமையே நிச்சயம் இந்த சுயாதீன அமைப்பிற்கும் எதிர்காலத்தில் ஏற்படும். சுயாதீன அமைப்பில் பணிபுரியும் தொண்டர்களிற்கு சுயாதீனமான முறையில் கொலை அச்சுறுத்தல்கள் விடுவிக்கப்படக்கூடும். உயிர் ஆபத்துக்கள் ஏற்படக்கூடும்.

எனவே, பாரிய மனித உரிமை மீறல்கள் செய்வதற்காக முதலில் சிறீ லங்கா அரசுமீது சர்வதேசம் பொருளாதாரத் தடைகளை இட்டு அதனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும்.

வெறும் கண்துடைப்பு நடவடிக்கைகளால் பயன் இல்லை.

யார் கூச்சலிட்டாலும் ஆட்டுவிக்கும் அமெரிக்கா வாய்திறக்க வேண்டும். போராட்டங்களை வளர்த்துவிட்ட இந்தியாவே என்ன செய்ய வேண்டுமென்பதில் தெளிவில்லாமலிருக்கிறது. யாராவது ஏதாவது செய்வதற்குப் புறப்பட்டால் தனது மூக்கை நுழைத்துக் குழப்புகிறது. மன்னிப்புச்சபை விடயமெல்லாம் மாவீரர் தின நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமளவில்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.