Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் விரைவில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் விரைவில்!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வர்த்தமானியில் வெளியிட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

புதிய சட்டம் உத்தியோகபூர்வ மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஏப்ரல் தொடக்கத்தில் வர்த்தமானியாக வெளியிடப்படும் என்றும் அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறினார்.

சந்தேக நபர்களை தன்னிச்சையாக காவலில் வைப்பதற்காக பயங்கரவாத தடைச் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக கடந்த மூன்று தசாப்தங்களாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

கடந்த சில வருடங்களாக, பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றியமைப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை உறுதியளித்துள்ளது.

வலுவான இராஜதந்திர அழுத்தத்தைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை கடந்த ஆண்டு மீளாய்வு செய்த அரசாங்கம் பல வருடங்களாக சிறையில் இருந்தவர்களையும் விடுவித்தமை குறிப்பிடத்தக்கது.
 

 

http://www.samakalam.com/புதிய-பயங்கரவாத-எதிர்ப்-2/

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமூலம்: வர்த்தமானி வெளியானது!

பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக, புதிய சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய, புதிய சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது. ‘பயங்கரவாதத்திற்கு எதிரானது’ எனப் பெயரிப்பட்டுள்ள இந்த சட்டமூலம், ஆங்கிலத்தில் எண்டி – டெரரிசம் (anti-terrorism) எனக் குறிப்பிட்பட்டுள்ளது. 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகளை நீக்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது இந்த சட்டமூலத்தை தயாரிப்பதன் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/245999

  • கருத்துக்கள உறவுகள்

புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலத்தை அடுத்த அமர்வில் சபையில் சமர்ப்பிப்போம் - சுசில் பிரேம ஜயந்த

Published By: DIGITAL DESK 5

24 MAR, 2023 | 06:05 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக அரசாங்கத்தினால் புதிதாக கொண்டு வரப்படவுள்ள புதிய பயங்கரவாத தடைச் சட்ட மூலத்தை அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது சபையில் சமர்ப்பிக்க முடியும் என சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (24) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்  எம் பி எழுப்பிய கேள்வி யொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்தார்.

ரவூப் ஹக்கீம் குறிப்பிடுகையில், புதிய பயங்கரவாத தடைச்சட்டம் வர்த்தமானிப் படுத்தப்பட்டிருக்கிறது. அதனை எப்பாேது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க எதிர்பார்க்கிறது என கேட்டார்.

அதற்கு அமைச்சர் சுசில் பதிலளிக்கையிலேயே  அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது சபையில் சமர்ப்பிக்க முடியும் என தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலம் நேற்று (23) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. 

நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு இணங்க புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் பயங்கரவாத தடைச் சட்டம் என்ற பெயரில் நடைமுறையில் இருந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதனை தேசிய பாதுகாப்பு சட்டமாக கொண்டு வருவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. 

அது தொடர்பில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஏற்கனவே பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். அதற்கிணங்க புதிய சட்டமூலத்தை தயாரிப்பதற்காக விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டு சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் அது நேற்று (23) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகளை நீக்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது இந்த சட்டமூலத்தை தயாரிப்பதற்கான நோக்கமாகும் என்றும் நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/151335

  • கருத்துக்கள உறவுகள்

இனி இலங்கையில் பயங்கரவாதச்சட்டத்துக்கு வேலையுமில்லை. அதை வைத்து; அழிக்கவேண்டியதை அழித்து, பறிக்க வேண்டியதை பறித்து, அடக்கவேண்டியவர்களை அடக்கி முடிந்தாயிற்று. இனி அது இருந்தால் சிங்களத்துக்கு பாதிப்பு. அதை நீக்கினால் பாராட்டு கிடைக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.