Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"13" அமுலானால் சமஷ்டி ஆட்சி மலரும்! - சரத் வீரசேகர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"13" அமுலானால் சமஷ்டி ஆட்சி மலரும்! - சரத் வீரசேகர 

z_p08-UNHRC1.jpg

“தமிழ் மக்கள் சமஷ்டியைக் கேட்கவில்லை. பிரிவினையை விரும்பும் தமிழ் அரசியல்வாதிகளும் புலம்பெயர் தமிழர்களுமே சமஷ்டியைக் கேட்கின்றனர்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்தார்.

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். 13 ஐ நடைமுறைப்படுத்தினால் ஒற்றையாட்சியின் கீழ் இருக்கின்ற நாடு சமஷ்டி ஆட்சிக்கு உட்படும்” – என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“தமிழ் நாட்டின் ஆதரவைப் பெறுவதற்காகத்தான் இந்திய அரசு 13 ஆவது திருத்தச் சட்டத்தை வடக்குக்குக் கொடுப்பதற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் வழங்கிய செவ்வியின் போதே சரத் வீரசேகர எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் சமஷ்டி தொடர்பில் தொடுக்கப்பட்ட கேள்விகளும், அதற்குச் சரத் வீரசேகர எம்.பி. அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?

பதில்:- 13 முற்றாக அகற்றப்பட வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு. 13 ஐ நடைமுறைப்படுத்தினால் ஒற்றையாட்சியின் கீழ் இருக்கின்ற நாடு சமஷ்டி ஆட்சிக்கு உட்படும்.

ஒற்றையாட்சியின் கீழ் நாடு முழுவதும் ஒரே நீதி. சமஷ்டி ஆட்சியின் கீழ் மாகாணத்துக்கு மாகாணம் நீதி வேறுபடும். இதனால் நாடு துண்டு துண்டாகப் பிரியும்.

வடக்குத் தமிழர்களின் துன்பத்தைப் போக்குவதற்குத்தான் சமஷ்டி தேவை என்று தமிழ் அரசியல்வாதிகள் கேட்கின்றார்கள். அப்படியென்றால் 52 வீதமான தமிழர்கள் வாழ்வது தெற்கில். வடக்குக்குத் சமஷ்டியைக் கொடுத்தால் தெற்குத் தமிழர்களின் பிரச்சினைகளை அது எப்படித் தீர்க்கும்?

கேள்வி:- சமஷ்டியின் தேவை யாருக்கு? மக்களுக்கா…? அரசியல்வாதிகளுக்கா…?

பதில்:- இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் சமஷ்டியைக் கேட்கவில்லை. பிரிவினையை விரும்பும் தமிழ் அரசியல்வாதிகளும் புலம்பெயர் தமிழர்களுமே சமஷ்டியைக் கேட்கின்றனர். சில சிங்கள அரசியல்வாதிகளும் இதற்கு உதவுகின்றனர்.

கேள்வி:- 13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது இந்தியாவா?

பதில்:- ஆம்.. தமிழ் நாட்டின் ஆதரவைப் பெறுவதற்காகத்தான் இந்திய அரசு 13ஐ வடக்குக்குக் கொடுப்பதற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.13 ஆவது திருத்தச் சட்டம் இந்தியாவால் எமக்குப் பலவந்தமாகத் திணிக்கப்பட்டதுதான்.

இதில் இருக்கின்ற பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் பிரதிப் பொலிஸ்மா அதிபர் முதலமைச்சரின் கீழ் வருவார். அப்போது பொலிஸ் அரசியல்மயமாகிவிடும்.

கேள்வி:- 13 ஆல் நாடு பிரிக்கப்படும் முறைமை பற்றிக் கூற முடியுமா?

பதில்:– அநேகமாக 13 இல் இருக்கின்ற பல விடயங்கள் கொடுக்கப்பட்டுவிட்டன. காணி மற்றும் பொலிஸ் அதிகாரம்தான் கொடுக்கப்பட வேண்டியுள்ளது.

உதாரணத்துக்குப் பொலிஸ் அதிகாரத்தைக் கொடுத்தால் வடக்கின் கடல் பாதுகாப்புக்கு என்று தனியான பொலிஸ் – இராணுவப் பிரிவை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னால் மத்திய அரசு அதை எதிர்க்கும். அப்போது இரு தரப்புக்கும் பிரச்சினை ஏற்படும்.

அரசு மாகாண சபையின் தீர்மானத்துக்கு இடம் கொடுப்பதில்லை என்று கூறி பிரிந்து செல்வதற்கு வாய்ப்புண்டு. – என்றார்.

https://vanakkamlondon.com/world/srilanka/2023/04/189848/

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா திண்டு, படுத்தெழும்பி, தொப்பை வண்டியோட சமஸடி பற்றி அலம்பறை பண்ணுற இந்த ஈர வெங்காயத்துக்கு யாராவது சொல்லுங்கப்பா தெற்கில சீனனும், வடக்கு கிழக்கில இந்தியனும் வந்திட்டாங்கள், கிடந்து நுழையிற கள்ளருக்கு, கீழால நுழையிற எமகாதக கள்ளன் மாதிரி, அமேரிக்கன் கிழக்கில பூர நிக்கிறான்.

இந்த நட்டு கழண்டது எங்கையோ நிக்குது. 🤦‍♂️

 

  • கருத்துக்கள உறவுகள்

போனவாரம் கொழும்பு விமான நிலையத்தில், சீன, இந்தி பெயர்ப்பலகை.

கடுப்பான சில பேருக்கு சொல்லப்பட்டுள்ளது: அங்கை இருந்துதான் சுற்றுலாவுக்கு கணபேர்வருகினமாம்.

அடங் கொய்யால, வருறவன் பெயர் பலகை வாசிக்க முடியாம, கண்டில போய் நிப்பான் போல.

இலங்கை அரச நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு சிறந்த நிர்வாக சேவை குறித்து விரிவுரை நடத்த, டெல்லியில் இருந்து இந்திய அரசின் மூத்த நிர்வாக சேவை அதிகாரி வந்துள்ளார்.

இது ஏப்பிரல் பூல்செய்தி இல்லைத்தானே எண்டு கேக்கிறேலல. 

 

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.