Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூடானில் ராணுவம் - துணை ராணுவம் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானப் பேச்சுவார்த்தைகளை சூடான் இராணுவம் இடைநிறுத்தியது

Published By: SETHU

31 MAY, 2023 | 03:35 PM
image
 

சூடானின் துணை இராணுவப் படையினருடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளை சூடானிய இராணுவம் இடைநிறுத்தியுள்ளது. 

தனது கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு துணை இராணுவப் படை தவறியுள்ளதாக இராணுவம் குற்றம் சுமத்துகிறது. இதனால் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்துவதாக சூடான் இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியாவின் அனுசரணையுடன் சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரில் இப்பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

போர்நிறுத்த விதிகளை இரு தரப்பினரும் மீறியுள்ளனர் என மத்தியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர் எனினும், இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தை மேசையில் தக்கவைத்திருப்பதற்காக இதுவரை தடைகள் எதுவும் விதிக்கப்படவில்லை.

இதேவேளை போர் நிறுத்தத்தை மேலும் 5 நாட்கள் நீடிப்பதற்கு இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர் என மத்தியஸ்தர்கள் நேற்றுமுன்தினம் அறிவித்தனர்.

ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் சூடானில் நடைபெறும் மோதல்களால் குறைந்தபட்சம் 1800 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், சுமார்; 350,000 பேர் சூடானிலிருந்து வெளியேறியுள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/156619

  • Replies 78
  • Views 5.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சூடான் தலைவர்களுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை அறிவித்தது

Published By: SETHU

02 JUN, 2023 | 03:20 PM
image
 

சூடானின் தலைவர்களுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை அறிவித்துள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி, அமைதியை சீர்குலைத்தமைக்காக பொருளாதார தடைகளை விதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அப்தேல் பத்தாஹ் அல் புர்ஹான் தலைமையிலான சூடான் இராணுவத்துக்கும் மொஹம்மத் ஹம்தான் டக்லோ தலைமையிலான, ஆர்எஸ்எவ் எனும் துணை இராணுவப் படையினருக்கும் இடையில் ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நடைபெறும்  மோதல்களால் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியாவின் அனுசரணையுடன் சவூதி அரேபியாவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளிலிருந்து தான் விலகுவதாக சூடான் இராணுவம் நேற்றுமுன்தினம் அறிவித்தது. 

அதன்பின் சூடான் தலைநகர் கார்ட்டூமில் நடந்த தாக்குதல்களில் 19 பேர் பலியானதுடன் 105 பேர் காயமடைந்தனர் என மனித உரிமைகளுக்கான சட்டத்தரணிகள் குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வன்முறைகள் நீடிப்பதற்கு காரணமானவர்களுக்கு பொருளாதாரத் தடைகளையும், விசா கட்டுப்பாடுகளையும்  அமெரிக்கா விதிப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக் சுலீவன் கூறியுள்ளார்.

4 நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளளது. இவற்றில் இரு நிறுவனங்கள் சூடான் இராணுவத்துடன் தொடர்புடையவை. 

ஆர்எஸ்எவ் எனும் துணை இராணுவப் படையின் தளபதி டக்லோ மற்றும் அவரின் இரு சகோதரர்களினால் நடத்தப்படும் இரு நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.  

சூடானில் கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நடைபெறும் மோதல்களால் குறைந்தபட்சம் 1800 பேர் உயிரிழந்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/156795

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சூடானில் உள்நாட்டு போரால் 48 இலட்சம் பேர் இடம்பெயர்ந்தனர்: ஐ.நா. தகவல்

sutan.jpg

சூடானில் இராணுவத்தினருக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை இராணுவத்துக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கலவரம் வெடித்தது. இந்த உள்நாட்டு போரில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 6 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். ஏராளமானோர் பாதுகாப்பு கருதி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இடம்பெயர்ந்தனர்.

அந்த வகையில் சூடான் உள்நாட்டு போரால் சுமார் 48 இலட்சம் பேர் தங்களது சொந்த பகுதிகளை விட்டு இடம்பெயர்ந்ததாக ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சூடானில் இராணுவத்தினருக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை இராணுவத்துக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கலவரம் வெடித்தது.

ஏராளமானோர் பாதுகாப்பு கருதி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இடம்பெயர்ந்தனர்.

https://thinakkural.lk/article/272028

  • கருத்துக்கள உறவுகள்

அதிவேக துணைப்படையின் தலைவர்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

RSF

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.