Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு உத்தேச வீதி வரைபடத்திற்கும் காலவரையறைக்கும் அமைச்சரவை அங்கீகாரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச வீதி வரைபடத்திற்கும் காலவரையறைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

புதிய மின்சார சட்டத்தின் இறுதி வரைவு மே மாத இறுதிக்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சீர்திருத்த செயலகத்தை நிறுவுவதற்கும் அபிவிருத்தி முகவர்களிடமிருந்து உதவிகளை பெற்றுக் கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, USAID மற்றும் JICA ஆகியவற்றிலிருந்து இந்த செயல்முறைக்கு உதவி பெறப்படும்,

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் இதனை நிறைவு செய்ய நம்புவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/249500

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்சாரசபை மறுசீரமைப்பு திட்ட வரைபிற்கு அமைச்சரவை அங்கீகாரம் - காஞ்சன

Published By: VISHNU

18 APR, 2023 | 10:19 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை மின்சாரசபையை மறுசீரமைப்பதற்கான திட்ட வரைபு மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான கால வரையறைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மே மாத இறுதிக்குள் புதிய மின்சார சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்கு மேலதிகமாக, மறுசீரமைப்புத் திட்டத்தை ஒருங்கிணைக்கும் பணியகம் ஒன்றை நிறுவுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி , உலக வங்கி, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் மற்றும் ஜைக்கா உள்ளிட்டவற்றிடம்  அந்த செயற்திட்டங்கள் மற்றும் மறுசீரமைப்புக்களுக்கான ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதிக்குள் நிதி மற்றும் மனித வளக் கணக்காய்வுகளை நிறைவு செய்வதற்கும், முழு மறுசீரமைப்புச் செயற்பாடுகளையும் நிறைவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/153166

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மின்சார சபையை ஒக்டோபர் மாதத்துக்குள் மறுசீரமைக்க உத்தேசம் - இந்திக அனுருத்த

Published By: VISHNU

19 APR, 2023 | 01:13 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பான நிபுணர் குழு அறிக்கை எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்குள் மறுசீரமைப்பு பணிகளை நிறைவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் பட்டியலில் மின்சார சபை, பெற்றோலிய கூட்டுத்தாபனம், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்க துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய வகையில் நியமிக்கப்பட்ட குழு அறிக்கையை அடிப்படையாக கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைய மறுசீரமைப்பு தொடர்பான அறிக்கையை எதிர்வரும் மே மாதம் முதல்வாரத்தில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பின் போது மனித வள முகாமைத்துவத்துக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி,உலக வங்கி,உட்பட சர்வதேச நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதால் எவரது தொழிலுரிமைக்கும் பாதிப்பு ஏற்படாது. அரசாங்கத்துக்கு சுமையாக உள்ள நிறுவனங்கள் தொடர்பில் கடுமையான தீர்மானம் எடுக்காவிட்டால் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது.

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பது வெறும் அரசியல் பிரச்சாரமாகும்.

ஒரு சில அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தியுள்ளதால் பொது மக்களுக்கான சேவைகள் வினைத்திறனாக கிடைக்கப் பெறுகிறது என்றார்.

https://www.virakesari.lk/article/153197

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மின்சார சபையை 14 நிறுவனங்களுக்கு பொறுப்பாக்க உத்தேசம் - ஜனக ரத்நாயக்க

Published By: DIGITAL DESK 5

03 MAY, 2023 | 01:10 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தில் மின்சார சபை சட்டங்களை இரத்து செய்து மின்சார சபையின் வளங்கள்,பொறுப்புகள் மற்றும் உரிமைகளை 14 நிறுவனங்களுக்கு பொறுப்பாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் சட்டமாக்கப்பட்டால் பாரிய நெருக்கடிகளை மின்சார சபை ஊழியர்கள் எதிர்கொள்ள நேரிடும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (02)இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்தரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

1967 ஆம் ஆண்டு மின்சார சட்டம் மற்றும் 2009 ஆம் ஆண்டு மின்சார சட்ட திருத்தம் ஆகியவற்றை இரத்து செய்து மின்கட்டமைப்பு தொடர்பில் புதிய சட்டத்தை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை மின்சார சபையை 14 பிரிவுகளாக வகைப்படுத்தி  2007 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க கம்பனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு மின்சார சபையின் சொத்துக்கள்,பொறுப்புக்கள் மற்றும் உரிமங்களை பொறுப்பாக்க் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் மகாவலி மின்சார சபை,உமா ஓயா உட்பட சகல நீர்மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் நுரைச்சோலை அனல் மின்நிலையம் உள்ளிட்ட  மின்நிலையங்களை 14 கட்டங்களாக வகைப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்காக  மின்சாரத்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட குழுவினர் தங்களின் விடயதானங்களுக்கு அப்பாற்பட்ட வகையில் ஒருசில பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்கள்.

எழுவர் அடங்கிய இந்த குழுவினர் இலங்கை மின்சார சபையை முழுமையாக இரத்து செய்து அதன் வளங்களை 14 நிறுவனங்களுக்கு பொறுப்பாக்க பரிந்துரைத்துள்ளனர். இதற்காக இவர்கள் மின்கட்டமைப்பு தொடர்பில் புதிய சட்டதிருத்தங்களையும் முன்வைத்துள்ளார்கள்.

மின்சார சபையை மறுசீரமைப்பதை காட்டிலும் மின்சார சபையை தனியார் மயப்படுத்தும் அரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்டதாக குழுவினர் பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்கள்.

மின்சார சபையை முழுமையாக இரத்து செய்து அதன் வளங்களை 14 கட்டங்களாக வேறுப்படுத்துவது பரிந்துரைகளில் பிரதானவையாக காணப்படுகிறது. இதற்கமைய சகல மகாவலி மின்நிலையங்களையும் ஒரு நிறுவனத்துக்கும்,லக்ஷபான மின்நிலையங்களை பிறிதொரு நிறுவனங்களுக்கும் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மின்சார சபையின் வளங்கள் மற்றும் பொறுப்புக்கள்,உரிமைகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் போது மின்னுற்பத்தி கட்டமைப்பில் பாரிய நெருக்கடி தோற்றம் பெறும் அத்துடன் மின்சார சபை ஊழியர்களின் தொழில் உரிமைகளுக்கு பாதிக்பு ஏற்படும்.குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தினால் பாரிய நெருக்கடிகள் தோற்றம் பெறும்.

உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவை இரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் ஊடாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு சுயாதீன ஆணைக்குழுவாக இயற்றப்பட்டது. அரசியலமைப்பு பேரவையின் ஊடாகவே ஆணைக்குழுவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள்.

மின்சாரத்துறை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்;டமூலத்தில் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரை நியமிக்கும் அதிகாரம் மின்சாரத்துறை அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதியான அமைச்சர் சுயாதீன ஆணைக்குழுவுக்கு எப்படி தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க முடியும்.குழுவின் செயற்பாடு நகைப்புக்குரியதாக உள்ளது.

சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தின் பல விடயங்களை எதிர்வரும் நாட்களில் பகிரங்கப்படுத்துவோம்.இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு தனியார் மயப்படுத்த முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

https://www.virakesari.lk/article/154363

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறுதிக்கட்டத்தில் புதிய மின்சார சட்ட வரைவு -காஞ்சன விஜேசேகர

புதிய மின்சார சட்டத்தை உருவாக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையில் சீர்திருத்தங்களுக்கு வழி வகுக்கும் புதிய மின்சார சட்டத்திற்கான ஆரம்ப வரைவு இறுதி வரைவுக்கான அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை பங்குதாரர்கள், அபிவிருத்தி முகவர்கள் மற்றும் சீர்திருத்த நிபுணர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

பங்குதாரர்களிடம் இருந்து பெறப்பட்டதும் இறுதி வரைவு சட்ட வரைவாளர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சான்றிதழுக்காக மாத இறுதிக்குள் பகிர்ந்து கொள்ளப்படவுள்ளது.

புதிய மின்சாரச் சட்டத்தின் இறுதி வரைபு சான்றிதழின் பின்னர் அமைச்சரவையின் அனுமதிக்காக விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/253433

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்சார ஊழியர் சங்கத்தினால் அரசுக்கு சமிக்ஞை

மின்சார சபையை தனியார் மயமாக்கும் சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“மின்சார வாரியத்தை 15 நிறுவனங்களாகப் பிரிக்கும் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில தினங்களில் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும். அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 6 வாரங்கள் கடந்ததும், அக்டோபர் 1-ஆம் திகதி முதல் இந்த 15 நிறுவனங்களையும் அந்த சட்டமூலத்தின்படி தான் செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் எமக்கு தகவல் கிடைத்துள்ளன.

இந்த சட்டத்தின் ஏற்பாடாக இலங்கை மின்சார சபை ஊழியர்களின் ஓய்வூதியத்தை உள்ளடக்குவதில்லை என தீர்மானம் எடுத்துள்ளனர்.
நிறுவனங்களுக்கு மின் வாரியத்தை வழங்கும் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இல்லையேல் 21ஆம் திகதி மின்சார வாரியத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து மின்வாரிய அலுவலகத்தை விட்டு அனைவரும் வெளியேறி விகாரமஹாதேவி பூங்காவில் ஒன்று கூடுவோம். இது அரசாங்கத்திற்கும் எளிதாகும். ”

https://thinakkural.lk/article/257852

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.