Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜி ஸ்கொயர் ஐடி ரெய்டு: சபரீசனுக்கு ஸ்கெட்ச் - மோடி Vs ஸ்டாலின் சண்டையின் நீட்சியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
99729781.jpg?imgsize=51940&width=700&height=525&resizemode=75
 

ஜி ஸ்கொயர் ஐடி ரெய்டு: சபரீசனுக்கு ஸ்கெட்ச் - மோடி Vs ஸ்டாலின் சண்டையின் நீட்சியா?

ஜி ஸ்கொயர் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனை அரசியல் ரீதியாகவும் பல்வேறு விவாதங்களை தொடங்கி வைத்துள்ளது.

ஜி ஸ்கொயர் உரிமையாளர் பாலா, அண்ணாநகர் எம்.எல்.ஏ மோகன் மகன் கார்த்திக் ஆகியோரது வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த இருவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனின் நெருங்கிய நண்பர்கள்.

2021 சட்டமன்றத் தேர்தலின் போது சபரீசன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய போது கார்த்திக் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

சபரீசனை நெருக்குவதற்காகவே ஜி ஸ்கொயர் மீது சோதனை நடத்தப்பட்டுள்ளது. சபரீசனை வழக்கில் சிக்க வைத்தால் அதன் மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு செக் வைக்க முடியும் என்பது தான் டெல்லி போடும் கணக்கு என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.

“பாஜகவை, பிரதமர் மோடியை வலுவாக எதிர்த்து அரசியல் செய்யும் பணியை காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியவில்லை. பல மாநிலங்களில் அந்த கட்சி வலுவிழந்து விட்ட நிலையில் மோடி எதிர்ப்பை முன்னெடுப்பது பிராந்திய கட்சிகள் தான். தனித்தனி கட்சிகளாக இருந்தாலும் மோடி எதிர்ப்பு என்ற ஒற்றை புள்ளியில் பிராந்திய கட்சிகள் ஒன்றாக இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டு காலமே உள்ள நிலையில் பிராந்திய கட்சிகளை தட்டி வைக்க வேண்டும் என பாஜக திட்டம் தீட்டுகிறது. எனவே தன் வசம் உள்ள சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவை மூலம் மோடி எதிர்ப்பை முன்னெடுக்கும் பிராந்திய கட்சிகளின் தலைமைகளை ஆட்டம் காண வைக்கும் வேலைகள் தொடங்கி விட்டன.

அந்த வகையில் டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவருமான மணீஷ் சிசோடியா, பீகார் மாநில துணை முதலமைச்சரும், ராஷ்டிரியா ஜனதாதளம் கட்சி இளைஞரணித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், தெலங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவின் மகள் கவிதா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் சிபிஐ, அமலாக்கத்துறை போன்றவற்றால் விசாரணைக்கு ஆளாகி வருகின்றனர்.
 
இதன் நீட்சியாக தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசனையும் ஏதேனும் ஒரு விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருவதற்காகவே இது போன்ற சோதனைகள் நடைபெறுகின்றன” என்று கூறுகிறார்கள் திமுக வட்டாரத்தில்.

https://tamil.samayam.com/latest-news/state-news/what-is-the-background-behind-the-it-raid-on-g-square-company-related-premises-sketch-for-sabareesan-or-mk-stalin/articleshow/99729721.cms

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செய்தியாளர் மீது அடுக்குமாடி குடியிருப்பின் செயலாளர் தாக்குதல். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த விகடன்... இந்த வருமான வரிச் சோதனையை ஓரளவு  அலசுகின்றது.
சபரீசன், தற்போது  லண்டனில் உள்ளார் என்ற செய்தியையும் குறிப்பிட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.