Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் அனைத்து உதவிகளையும் எதிர்வீரசிங்கமே செய்து தருகின்றார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் அனைத்து உதவிகளையும் எதிர்வீரசிங்கமே செய்து தருகின்றார் -சுசந்திகா

[09 - ஸெப்டெம்பெர் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ]

`சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு விளையாட்டுத்துறை மூலம் புகழ்தேடித்தந்த வீரர்கள் வரிசையில் சுசந்திகா ஜெயசிங்கவே முதலிடத்தில் இருக்கின்றார். இதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்'

இவ்வாறு விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். ஜப்பானின் ஒசாக்கா மாநிலத்தில் நடைபெற்ற 11 ஆவது உலகமெய்வல்லுநர் சாம்பியன் போட்டியில் பெண்களுக்கான 200 மீற்றர் ஒட்டத்தில் வெண்கலப் பதக்கம் பெற்ற சுசந்திகாவுக்கு விளையாட்டு அமைச்சரின் தலைமையில் விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வரவேற்பு வைபவத்தில் அமைச்சர் காமினி லொக்குகே தொடர்ந்து உரையாற்றுகையில் ;

1997 ஆம் ஆண்டு எதென்ஸில் நடைபெற்ற உலக மெய்வல்லுநர் போட்டியில் 200 மீற்றர் ஓட்டத்தில் சுசந்திகா வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார். பின்பு 2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் பெற்றார். தற்போது(2007) ஜப்பானில் நடைபெற்ற உலக மெய்வல்லுநர் போட்டியில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்று இலங்கைக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளார்.

இந்த மூன்று விளையாட்டுப் போட்டிகளிலும் பதக்கம் பெற்று சுசந்திகா நாடுதிரும்பிய போது இலங்கை அரசு அவருக்கு மூன்று தடவைகளும் செங்கம்பள வரவேற்பு அளித்து கௌரவித்துள்ளது. 3 தடவைகள் செங்கம்பள வரவேற்பு பெற்ற ஒரேயொரு விளையாட்டு வீராங்கனை சுசந்திகாதான்.

31 வயதான சுசந்திகா சர்வதேச மட்டத்தில் ஏனைய நாட்டு இளம் ஓட்ட வீராங்கனைகளுக்கு சமனாக தற்போதும் ஓடுவதையிட்டு சர்வதேச மெய்வல்லுநர் சங்கம் அவரை கௌரவிக்கும் முகமாக சிறப்புப் பதவி ஒன்றையும் வழங்கியுள்ளது. இலங்கையில் சுசந்திகாவுக்கு சவால் விடுத்த பலர் தற்போது ஓய்வெடுத்து விட்டனர்.

அடுத்த வருடம் சீனாவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக்போட்டியில் சுசந்திகா தங்கப்பதக்கம் பெறுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. இதற்காக அவருக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் விளையாட்டு அமைச்சு செய்து கொடுக்கும் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று விளையாட்டு அமைச்சர் தெரிவித்தார்.

இவ் வைபவத்தில் சுசந்திகா உரையாற்றுகையில், இவ்வளவு மிகப்பெரிய அளவிலான வரவேற்பை எனக்கு அரசாங்கமும் விளையாட்டு அமைச்சும் இணைந்து வழங்கியதையிட்டு நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன்.

ஆனால், 2003 ஆம் ஆண்டு நான் காலில் ஏற்பட்ட முறிவு காரணமாக நோய்வாய்ப்பட்டு ஒருவருடமாக வீட்டில் இருந்து கஷ்டப்பட்டபோது அரசாங்கமோ அல்லது விளையாட்டு அமைச்சோ ஒரு ரூபா கூட வழங்கி எனக்கு உதவி செய்யவில்லை. வறுமையின் கோரப்பிடி எவ்வாறானது என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். இதனால் விளையாட்டுத்துறையில் இருந்து நான் ஓய்வு பெறலாமா என்று கூட நினைத்ததும் உண்டு.

எனது நாட்டை நான் மிகவும் நேசிப்பவள். எனது நாட்டுக்கு நான் மேலும் மேலும் பெருமை தேடிக்கொடுக்க வேண்டும் என்ற வெறிதான் என்மனதில் வேரூன்றி நிற்கின்றது. எதிர்வரும் ஒலிம்பிக்கில் நான் பதக்கம் பெறுவேன் என்ற நம்பிக்கை என்னிடம் இருக்கின்றது.

நான் அமெரிக்காவில் தான் தற்போது பயிற்சிகளைப் பெற்று வருகின்றேன். அங்கும் எனக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தருவதற்கு ்தங்க மனிதன்ீ ஒருவரைத் தவிர வேறு யாரும் முன்வரவில்லை. அந்த தங்க மனிதன் வேறுயாருமில்லை. ஆசிய விளையாட்டுப் போட்டியில் உயரம் பாய்தலில் இலங்கைக்கு முதன்முதலில் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்த நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தான்.

அந்த மனிதர்தான் அமெரிக்காவில் எனக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து தருவதுடன் பயிற்சி நேரத்தில் மன உறுதி பற்றிய விளக்கத்தையும் வழங்குவதிலும் அவர் தவறுவதில்லை.

நான் விளையாட்டுத் துறையில் இருந்து ஓய்வு பெறும் நோக்கம் தற்போது கிடையாது. 4 அல்லது 5 வருடங்களின் பின்பேதான் அதுபற்றி சிந்திப்பேன். நான் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றும்போது இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான சீருடைகள் ஏதும் இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை. இவ்வாறான சீருடைகளை இனியாவது எனக்கு வழங்கி உதவி செய்யும்படி கனம் விளையாட்டு அமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றேன் என்று சுசந்திகா கூறினார்.

thanks to thinakural.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.