Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடன் மறுசீரமைப்பிற்கான திட்டமிடல்கள் மே மாதத்தில் உருவாக்கப்படும் - ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 5

25 APR, 2023 | 03:12 PM
image

(எம்.மனோசித்ரா)

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டு ஒப்பந்தத்திற்கமைய கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதமாக ஆரம்பிக்க வேண்டியுள்ளது.

அதற்கமைய சர்வதேச நாணய நிதியம் , உலக வங்கி , மத்திய வங்கி , நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினரால் கடன் மறுசீரமைப்பிற்கான திட்டமிடல்கள் மே மாதத்தில் உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (25) இடம்பெற்ற போது அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டில் தற்போதுள்ள பிரதான பிரச்சினை கடன் மறுசீரமைப்பாகும். இதற்கான பேச்சுவார்த்தைகளில் பிரான்ஸின் லசார்ட் நிறுவனம், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கான கிளிபர்ட் ஹான்ஸ் நிறுவனம் , முத்தரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக இந்திய, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நிதி அமைச்சர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றலுடன் மெய்நிகர் ஊடாக பல சுற்று பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய சர்வதேச நாணய நிதியம் , உலக வங்கி , மத்திய வங்கி , நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினரால் மே மாதமளவில் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் முறையான திட்டமிடலொன்று உருவாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அமைச்சரவையில் நம்பிக்கை வெளியிட்டார் என்றார்.

இதே வேளை வரி திருத்தங்கள் அல்லது புதிய வரி அறவீடுகள் தொடர்பில் இது வரை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. இதற்கான யோசனைகள் முன்வைக்கப்படும் பட்சத்தில் அவை குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதன் பின்னர் நாட்டுக்கு அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/153700

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கான ஒருங்கிணைந்த கடன் மறுசீரமைப்புச் செயன்முறைக்கு ஜப்பான் வரவேற்பு

Published By: DIGITAL DESK 5

06 MAY, 2023 | 11:58 AM
image

(நா.தனுஜா)

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவும் நோக்கில்  ஒருங்கிணைக்கப்பட்ட கடன் மறுசீரமைப்புச் செயன்முறையை நடைமுறைப்படுத்துவதற்கு கடன்வழங்குனர்கள் இணங்கியுள்ளமையை  ஜப்பான் வரவேற்றுள்ளது.

கொவிட் - 19 பெருந்தொற்று மற்றும் உக்ரேன் - ரஷ்ய போர் ஆகியவற்றுக்கு மத்தியில் கடன்சார் நெருக்கடிகளின் விளைவாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக ஜப்பான் நிதியமைச்சர் ஷூனிச்சி சுஸூகி சுட்டிக்காட்டியுள்ளார். 

இவ்வாறானதொரு சூழ்நிலையில் நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு உதவும் நோக்கில் அண்மையில் ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டாக அறிவித்துள்ள "ஒருங்கிணைந்த கடன் மறுசீரமைப்புச் செயன்முறையை" பெரிதும் வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

அதேவேளை எதிர்காலக் கடன் நெருக்கடிகளைத் தடுப்பதற்கு கடன்சார் தரவுகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியமான தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவது இன்றியமையாததாகும் என்றும் ஜப்பான் நிதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார். 

இவற்றுக்கு மேலதிகமாக காலநிலை மாற்றம் சார்ந்த சவால்களைக் கையாள்வதற்கு ஆசிய - பசுபிக் பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்கு உதவும் வகையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய செயற்திட்டமொன்றின் ஊடாக 25 மில்லியன் ரூபாவை வழங்கப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதி செயற்திட்டத்தின்கீழ் சுமார் 3 பில்லியன் டொலர் கடனுதவியைப் பெற்றுக்கொள்வதற்கான இறுதிக்கட்ட இணக்கப்பாடு கடந்த மார்ச் மாதம் எட்டப்பட்ட நிலையில், கடன் மறுசீரமைப்பு குறித்த செயற்திட்டத்தை ஏப்ரல்மாத இறுதிக்குள் வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஏற்கனவே அறிவித்திருந்தார். இருப்பினும் அச்செயற்திட்டம் கடந்த மாதம் வெளியிடப்படாத நிலையில், இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/154621

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

இலங்கைக்கான ஒருங்கிணைந்த கடன் மறுசீரமைப்புச் செயன்முறைக்கு ஜப்பான் வரவேற்பு

Published By: DIGITAL DESK 5

06 MAY, 2023 | 11:58 AM
 

(நா.தனுஜா)

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவும் நோக்கில்  ஒருங்கிணைக்கப்பட்ட கடன் மறுசீரமைப்புச் செயன்முறையை நடைமுறைப்படுத்துவதற்கு கடன்வழங்குனர்கள் இணங்கியுள்ளமையை  ஜப்பான் வரவேற்றுள்ளது.

 

இந்த இணக்கப்பாடானது உள்ளூர் கடன் வழங்குநர்களின் தீர்மானத்திலேயே தங்கி உள்ளது. இன்னும் அதட்கான தீர்மானம் எடுக்கவில்லை. அது மக்களின் பணத்தில் கை வைத்தால் பிரச்சினையை உருவாக்கும். மேலும், அரசியல்வாதிகளின் திருட்டுக்களுக்கு , கொள்ளையடிப்புக்கு , நாட்டிடை நாசமாக்கியவர்களுக்கு ஒத்துழைக்க தயாராக இல்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடன் மறுசீரமைப்பு செயன்முறை, பொருளாதார ஒருங்கிணைப்பு தொடர்பில் இந்தியாவுடன் உயர்மட்டக் கலந்துரையாடல்

Published By: DIGITAL DESK 5

06 MAY, 2023 | 10:49 PM
image

(எம்.மனோசித்ரா)

கடன் மறுசீரமைப்பு செயன்முறை, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் இலங்கையில் இந்திய முதலீடுகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து இருதரப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய பிரதமர் அலுவலகத்தின் பிரதம செயலாளர் கலாநிதி பிரமோத் குமார் மிஷ்ரா ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை (05)  டில்லியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போதே இவ்விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சந்திப்பின் போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயன்முறை குறித்து கலந்துரையாடியுள்ள உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட , தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு இந்தியா வழங்கி வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் கடன் மறுசீரமைப்பு செயன்முறை உட்பட பொருளாதாரம் குறித்த தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார். இலங்கையின் பொருளாதார மீட்சியில் இந்தியாவுடனான பொருளாதார ஒருங்கிணைப்பு முக்கிய பங்கை வகிப்பதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மேலும் பொருளாதார ஒருங்கிணைப்பு, இலங்கையில் இந்திய முதலீடுகள் , சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல், இருதரப்பு வர்த்தகத்தை மேலும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், மின்சாரம் மற்றும் வலுசக்தி துறையில் ஒத்துழைப்பு மற்றும் ரூபாய் வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/154662

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே இந்தியாவின் வழமையான பல்லவியைக்காணோம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.