Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கா எதிர்காலத்தில் இலங்கையின் மேலும் பல அதிகாரிகளிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமா? தூதரக பேச்சாளர் பதில் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

28 APR, 2023 | 11:26 AM
image

மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் குறித்து சர்வதேச அளவில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்கா தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் மதிப்பாய்வு செய்துவருகின்றது என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அமெரிக்கா உலகளாவிய ரீதியில் தனது அதிகாரத்தை பயன்படுத்துகின்றது எனவும் தெரிவித்துள்ளது.

வசந்தகரணாகொட போன்று எதிர்காலத்தில்  இலங்கையின் வேறு அதிகாரிகளும் தடைப்பட்டியலில் சேர்க்கப்படுவார்களா என ஊடகமொன்றின் கேள்விக்கு பதிலளிக்கையில் அமெரிக்கதூதரக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு அரசாங்க அதிகாரி மிகமோசமான ஊழல் அல்லது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என நம்பகதன்மை மிக்க தகவல் கிடைத்தால் அந்த அதிகாரியையும் அவரது குடும்பத்தினரையும் பிரிவு 7031 சியின் கீழ் இராஜாங்க செயலாளர் தடைப்பட்டியலில் சேர்ப்பார் என தூதரக பேச்சாளர்தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா பாதிக்கப்பட்;டவர்களிற்கு நீதியையும் மனித உரிமை மீறல்கள் துஸ்பிரயோகங்களிற்கு காரணமானவர்களிற்கு பொறுப்புக்கூறலையும் உறுதி செய்வது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளது என பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/153979

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஏராளன் said:

வெளிநாட்டு அரசாங்க அதிகாரி மிகமோசமான ஊழல் அல்லது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என நம்பகதன்மை மிக்க தகவல் கிடைத்தால் அந்த அதிகாரியையும் அவரது குடும்பத்தினரையும் பிரிவு 7031 சியின் கீழ் இராஜாங்க செயலாளர் தடைப்பட்டியலில் சேர்ப்பார் என தூதரக பேச்சாளர்தெரிவித்துள்ளார்.

 

15 hours ago, ஏராளன் said:

வசந்தகரணாகொட போன்று எதிர்காலத்தில்  இலங்கையின் வேறு அதிகாரிகளும் தடைப்பட்டியலில் சேர்க்கப்படுவார்களா

 

15 hours ago, ஏராளன் said:

மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் குறித்து சர்வதேச அளவில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்கா தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் மதிப்பாய்வு செய்துவருகின்றது

கேட்ட கேள்விக்கு; ஆமா, இல்லையா என்று பதிலிறுக்காமல் போடும் புதிரையும், கொடுக்கும் விளக்கத்தையும் பாத்தால்; அடுத்தது ராஜபக்ஸ குடும்பம் மாட்டும் போல் தெரிகிறதே! தொடர்பில் நேரடியாக இருந்து ஒத்தாசை, உதவி வழங்கியவர்களுக்கு தெரியாதாம் யார் குற்றவாளிகள் என்று, மதிப்பாய்வு செய்கினமாம் என்று அவர்கள், இது பொய்யானது யாரோ செய்தவேலை என்று இவர்கள். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித நிவாரணமோ, நீதியோ இல்லை. அவரவர் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக எங்கள் பிரச்சனையை பாவிக்கிறார்கள்.

போர் முடிந்த கையோடு, இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுத்தூதுவர், உயர் பதவிகள் கொடுத்து அவர்கள் செய்த கொடுமைகளுக்கு வெள்ளை அடிக்கும், தீமையை மூடும் வேலை செய்த கோத்தா; அவர்களுக்கு பொறியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். இப்போ; இவர்கள் தங்கள் தலைவரை, தங்களுக்கு கட்டளையிட்டவரை கையை காட்டிவிட்டு தாம் தப்பிக்க வேண்டியதுதான் ஒரே வழி. செய்வார்களா? அப்படியொரு நிர்ப்பந்தத்தை இவர்களுக்கு ஏற்படுத்துகிறா அமெரிக்கா அல்லது வெறும் மிரட்டல் விட்டு பணிய வைக்கும் வேலையா? இல்லை ..... சொல்பவபர் ஒன்றும் தெரியாமல் விசாரணை செய்து தண்டிக்க வேண்டியதில்லை, அன்று அத்தனை அழிவுகளையும் தடுத்திருக்கலாம், அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

ஓடுமீன் ஓடி உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு! அதுபோலவே தர்மம், பழிவாங்க காத்திருக்கும். மகிந்தா கோஷ்ட்டி அரசியலில் இருக்கும் போது இது சாத்தியமாகி இருக்குமா? மக்களை தூண்டி, கொடிகளை எரித்து, கோஷங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டங்கள் செய்து அதற்குப்பின்னால் ஒழித்திருந்து வீர வசனம் பேசி, சவால் விட்டிருப்பார்கள். இப்போ அது முடியுமா என்பது சந்தேகமே. சில ஊழல் வாதிகள் ஊழையிடலாம், அவர்களின் விபரங்களும் தோண்டப்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

அடுத்தது ராஜபக்ஸ குடும்பம் மாட்டும் போல் தெரிகிறதே

இந்தியாவும் மேற்கும் இலங்கை விடயத்தில் ஓரளவுக்கு இணைந்து தான் செயல்படுகின்றன. இவர்களின் பொது எதிரி சீனா. இலங்கையில் சீனாவுக்கு எல்லா உதவிகளையும் செய்து கொண்டு இருப்பவர்கள் மகிந்த குடும்பத்தினர் மற்றும்  இலங்கையின் வெளிநாட்டு கொள்கை வகுப்பாளர்கள். இவர்களை முற்றாக கட்டுப்படுத்தும் வேலை நடக்கிறது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.