Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள்; அனுப்பி வைத்தார் பழ.நெடுமாறன்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான மருந்து, உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்தப் பொருட்களை நாகப்பட்டனம் கொண்டு சென்று அங்கிருந்து படகு மூலம் தானே யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு செல்லப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

யாழ் தீபகற்பத்தையும், இலங்கையின் இதர பகுதிகளையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையை இலங்கை அரசு மூடி விட்டது. இதனால் யாழ் தீபகற்பத்திற்கு உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவை செல்வது தடைபட்டது.

இதனால் யாழ்ப்பாணத்தில் செயற்கையான உணவுப் பஞ்சம் உருவாக்கப்பட்டது. சரியான முறையில் உணவு, மருந்து கிடைக்காமல், ஏராளமான தமிழர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. கிடைத்த உணவு மற்றும் மருந்துப் பொருட்களும் பயங்கரமான விலையில் விற்கப்பட்டதால் தமிழர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

இதையடுத்து வாடி வரும் தமிழர்களுக்கு உதவ உணவு மற்றும் மருந்துப் பொருட்களை சேகரிக்கும் இயக்கத்தை நெடுமாறன் தொடங்கினார். அதன்படி தமிழகம் முழுவதும் பருப்பு, அரிசி, சர்க்கரை, மருந்துகள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டன.

கிட்டத்தட்ட ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் திரட்டப்பட்ட பின்னர் இவற்றை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக யாழ் தமிழர்களுக்கு வழங்க அனுமதிக்குமாறு கோரி மத்திய அரசை நெடுமாறன் அணுகினார். ஆனால் இதுவரை மத்திய அரசிடமிருந்து ஒரு பதிலும் இல்லை.

நிவாரணப் பொருட்களை அனுப்ப அனுமதி வழங்குமாறு கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் பலமுறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு பெருத்த அமைதி காத்து வருகிறது. தமிழக அரசுத் தரப்பிலும் இதுவரை எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை.

இதையடுத்து படகுகள் மூலம் தானே இப்பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப் போவதாக அறிவித்தார் நெடுமாறன். அதன்படி நேற்று இந்தப் பொருட்களை நாகை துறைமுகத்திற்கு அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.

பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனங்களை நெடுமாறன் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். 11ம் தேதி இந்த வாகனங்கள் நாகை துறைமுகத்தை அடையும்.

பின்னர் அங்கிருந்து படகுகள் மூலம் நெடுமாறன் இவற்றை யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளார். தடைகளை மீறி இதை செய்யப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

நெடுமாறனின் இந்த அதிரடி நடவடிக்கையால் தமிழக அரசுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனங்களைத் தடுத்து நிறுத்த காவல்துறைக்கு அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. அதேசயம் நெடுமாறன் யாழ்ப்பாணம் செல்வதை தமிழக அரசு அனுமதிக்காது என்று கூறப்படுகிறது.

நாகையிலிருந்து அவர் படகு மூலம் யாழ்ப்பாணம் செல்ல முயன்றால் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

கடந்த 1983ம் ஆண்டிலும் இதுபோல யாழ்ப்பாணம் செல்ல முயன்றார் நெடுமாறன். இதற்காக மதுரையிலிருந்து யாத்திரையாக ராமேஸ்வரம் சென்றார். பின்னர் அங்கிருந்து படகு மூலம் யாழ்ப்பாணம் செல்ல முயன்றபோது கடற்படையினர் அவரை தடுத்து நிறுத்தினர் என்பது நினைவிருக்கலாம்.

இதற்கிடையே, தமிழர்களுக்கான நிவாரணப் பொருட்களை அவர்களிடம் சேர்ப்பிப்பது தொடர்பாக மத்திய அரசும், தமிழக அரசும் இப்படி மயான அமைதி காப்பது மிகவும் வருத்தத்திற்குரியது, கண்டனத்துக்குரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பல்வேறு தமிழர் அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.

தமிழர்களுக்காக சேகரிக்கப்பட்ட இந்த நிவாரணப் பொருட்களை அவர்களிடம் சேர்ப்பிக்க முதல்வர் கருணாநிதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

இணைப்பு

கருணாநிதியை நாரயணனன் சந்திப்பார்.

ஈழத்தமிழருக்காக படகுகள் மூலம் யாழ். குடாநாட்டுக்கு உணவுப் பொருட்கள் கொண்டு செல்வது தடுக்கப்பட்டால் எந்தத் தியாகத்தையும் புரிவதற்கு தானும் தனது தொண்டர்களும் தயாராகவிருப்பதாக தமிழர் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் மீண்டும் அறிவித்துள்ள நிலையில் இந்தப் படகுப் பயணத்தை தடுத்து நிறுத்துவதற்காக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே, நாராயணன் தமிழக முதல்வர் கருணாநிதியை எவ்வேளையிலும் சந்திக்கவுளன்ளதாகத் தெரிவிக்கப்டுகிறது.

இதே வேளை, யாழ்.குடாநாட்டுக்கு உணவுப் பொருட்களை கொண்டு செல்வது தொடர்பில் முனைப்புடன் செயற்பட்டு தீவிர பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் பழ.நெடுமாறனினதும் அவரது கட்சியினரினதும் நடவடிக்கைகைள்தாம் தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ள தமிழக பொலிஸ் உயர்ரதிகாரிகள் சட்டத்தை மீறும் வகையில் அவர்கள் நடந்து கொண்டால் உடனடி நடவடிககைகள் எடுக்கப்படுமெனவும் எச்சரித்துள்ளனர்.

பட்டினியால் வாடும் யாழ்.குடாநாட்டு மக்களுக்கு படகுகள் மூலம் உணவுப்பொருட்கள் கொண்டு செல்லும் போராட்டத்தை நெடுமாறன் தலைமையிலான குழுவினர் கடந்து 7 ம் திகதி திருச்சியில் ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ தலைமையில் ஆரம்பித்தனர். இந்தக் குழுவினர் சனிக்கிழமை இரவு தஞ்சை போய்ச் சேர்ந்தனர். அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் பழ.நெடுமாறன் உரையாற்றினார். பின்னர் அங்குள்ள கைலா திருமண மண்டபத்தில் அனைவரும் தங்கினர்.

நேற்று ஞாயிற்றுகிழமை காலை 7:40 மணியளவில் தஞ்சையிலிருந்து புறப்பட்ட போராட்டக் குழுவினர் நாஞ்சிக் கோட்டை, சூரக்கோட்டை, ஓரத்தநாடு, ஒக்கநாடு,வடுவூர்,மன்னார்குடி

நீடாமங்கலம் வழியாக கும்பகோணத்தை சென்றடைந்தனர்.

இரவு அங்கு இடம் பெற்ற பொதுக்கூட்டத்திலும் நெடுமாறன் உரை நிகழ்த்தினார். இக்குழுவினர் இன்று கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு நாளை செவ்வாவய்க்கிழமை நாகபட்டினத்தை சென்றடையவுள்ளனர். இங்கிருந்து யாழ். குடாநாட்டை நோக்கி உணவுப் பொருட்களுடன் தமது படகுப் பயணப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.

இது தொடர்பாக பழ. நெடுமாநன் தெரிவிக்கையில்,

உணவுப் பொருட்களுடன் திடடமிட்டபடி எமது படகுப் பயணப் போராட்டடம் 12ம் திகதி ஆரம்பமாகும். ஒரு கோடி இந்திய ரூபா பெறுமதியனா உணவுப் பொருட்களை நாம் கொண்டு செல்கின்றோம். பாக்கு நீரிணை ஊடாக நாம் செல்லும் போது எமது பயணம் தடுக்கப்பட்டால் நானும் எனது தொண்டர்களும் எந்தத் தியாத்தையும் புரிவதற்கு தயாராகவுள்ளோம். எந்தத் தடைவரினும் அதனை உடைத்துக் கொண்டு எமது படகுப்பயணப் போராட்டம் வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளார்.

நெடுமாறன் இவ்வாறு சூளுரைத்துள்ள நிலையில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் நெடுமாறனின் படகுப் பயணத்தை தடுத்து நிறுத்துவதற்காக தமிழகம் வரவுள்ளார்.

இது பற்றி நாராயணன் கூறுகையில் :

இந்திய சட்டத்தின்படி யாராவது ஒருவர் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்வதானால் வரி செலுத்த வேண்டும். நெடுமாறன் கொண்டு செல்வதென்றாலும் வரி செலுத்த வேண்டும். இந்திய சுங்கப் பிரிவுக்கு வரி செலுத்தாமல் சட்ட விரோதமாக எவர் பொருட்களை எடுத்துச் சென்றாலும் உடனடியாக கைது செய்யாப்படுவார்கள். இதுதான் இந்தியாவின் சட்டம். இதற்கு நெடுமாறன் விலக்கல்ல.

நெடுமாறன் இந்தப் படகுப் பயணம் தொடர்பாக இலங்கையரசு மிவும் கவலையடைந்துள்ளது. இது தொடர்பாக உடனடியாக தமிழகம் சென்று முதலமைச்சர் கருணாநிதியுடன் கலந்துரையாடி நிலைமைகள் மோசமடைவதற்கு முன் தடுத்து நிறுத்த நடவடிக்கையெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், ஈழத்தமிழருக்காக உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை இந்திய அரசு தடுத்து நிறுத்த முயன்றால் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டி வருமென ம.தி.மு.க பொதுச செயலர் வைகோ எச்சரித்துள்ளார்.

இந்நிலையிலான நெடுமாறன் தலைமையிலான குழுவினரின் படகுப்பயணப் போராட்டம் பிரசாரத்திற்கு தமிழக மக்களிடையேயும் கட்சிகளிடையேயும் ஆதரவு பெருகிவருவதையடுத்து தமிழக பொலிஸார் இவ்விடயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனளர்.

இது தொடர்பாக தமிழக பொலிஸ் உயரதிகாரியோருவர் தெரிவிக்கையில் :

ஈழத்தமிழர்களுக்கு படகுமூலம் உணவுப் பொருட்கள் கொண்டு செல்வது தொடர்பாக நெடுமாறன் அறிவித்துள்ள விடயத்தை நாம் தீவிரமாக கண்காணித்து வருகின்றோம். நெடுமாறனினதும் அவரது தொண்டர்களினதும் நடவடிக்கைகள் எம்மால் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றன.

நெடுமாறன் குழுவினர் தீவிரமாக பிரசார நடவடிக்கைகளில், ஈடுபட்டு வருகின்ற போதும் சட்டத்தை மீறும் நடவடிக்கைகளில் இன்னும் இறங்கவில்லை. அவ்வாறு செயற்படுவோர்களேயானால் நாம் அதற்குரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார்.

நன்றி : தினக் குரல்.

கருணாநிதியை நாரயணனன் சந்திப்பார்.

இந்த இரண்டும் தான் இப்ப குறுக்கால நிக்கிறது..

1 வது பயந்த சுயநலவாதி 2 வது கெட்ட மோசமான சதிகாரன்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழருக்கு உதவாத இந்தியாவுக்கு ஐ.நாவில் பேசுவதற்கு தகுதி எதுவும் இல்லை! தமிழக இளைஞர்களின் நெஞ்சங்கள் எரிமலைகளாக உள்ளன

இலங்கைத் தமிழர்களுக்கு உணவுப் பொருள் மற்றும் மருந்து வகைகளை அனுப்புவதற்கு இந்திய அரசு அனுமதி மறுப்பதற்குக் காரணம் என்ன?

ஜெனிவா உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட இந்தியா, இலங்கைத் தமிழர்களுக்கு மனிதாபிமானத்தோடு உதவ மறுக்கிறது. அதனால் ஐ.நா. சபையில் பேசும் தகுதியை இந்தியா இழந்துள்ளது.

இவ்வாறு சொல்கிறார் ம.தி.மு.க. செயலாளர் வைகோ.

யாழ்ப்பாணத்துக்குப் படகுகளில் பொருள்களை அனுப்பி வைப்பதற்கு ஆதரவாக நடைபெற்ற பரப்புரைக் கூட்டம் ஒன்றில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு சொன்னார்.

எதியோப்பியா, ருவாண்டா, வியட்நாம் ஆகிய நாடுகளில் மக்கள் பாதிக்கப்பட்ட போது இந்திய அரசு உணவு மற்றும் மருந்துப் பொருள்களை வழங்கியிருந்தது. ஆனால் இலங்கையில் தமிழருக்கு மட்டும் நாம் சேகரித்த பொருள்களை அனுப்ப மறுக்கிறது.

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து தமிழக இளைஞர்களின் நெஞ்சங்கள் எரி மலையாக இருக்கின்றன. அவர்கள் உணர்ச்சிவசப்படத் தொடங்கினால் யாராலும் தடுக்க முடியாது.

இலங்கையில் கொல்லப்படும் தமிழர்களின் சாவுகளுக்கு இலங்கை அரசோடு இந்திய அரசும் பதில் சொல்ல வேண்டும்.

யாழ்ப்பாணத்துக்கு ஆயுதங்களையோ போராளிகளையோ நாம் அனுப்பவில்லை. அல்லற்படும் மக்களுக்கு உணவையும் மருந்தையுமே அனுப்புகிறோம். இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண் டிய கடமை இந்திய அரசுக்கு இருக்கிறது. இதனை உரிமையோடு கேட்டுப் பெற வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக் கிறது. என்றார்.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.