Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது கடற்படை அதிகாரியால் தொடரப்பட்ட வழக்கு ! கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 5

04 MAY, 2023 | 01:42 PM
image

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி தொடர்ந்த வழக்கானது கடந்த 2019 ம் ஆண்டு முதல்  இடம்பெற்று  வரும் நிலையில்  இன்றையதினம் (04) முல்லைத்தீவு நீதவான் நீதி மன்றில் குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள்  இடம்பெற்றது.

இதன் போது வழக்கு தொடுனரான கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதோடு வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 2023-09-21 க்கு தவணையிடப்பட்டுள்ளது.  

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் கடற்படை புலனாய்வு  அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட ஊடகவியலாளர்  முல்லைத்தீவு பொலிஸாரால் 20.04.2019 கைது  செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டு கடந்த பல வருடங்களாக  வழக்கு இடம்பெற்று வரும் நிலையில்  குறித்த வழக்கானது இன்றைய தினத்துக்கு  தவணையிடப்பட்டிருந்தது.

அதற்கமைய இன்றைய தினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமனற நீதிபதி ரி சரவணராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வி எஸ் எஸ் தஞ்சயன் முன்னிலையாகியிருந்தார் இதன்போது வழக்கு தொடுனரான முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் கடற்படை புலனாய்வு  அதிகாரி வருகைதராத நிலையில் வழக்கு தொடுனரான கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதோடு வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 2023-09-21 க்கு தவணையிடப்பட்டுள்ளது . 

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 07.04.2019 அன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலத்தில் இருந்து வட்டுவாகல் பாலம் வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியிருந்தார்.

இதன் போது செல்வபுரம் பேரூந்து தரிப்பு நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களையும், ஊடகவியலாளர்களையும் இனம் தெரியாத நபர் ஒருவர் போராட்டகாரர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததோடு தனது கைபேசியில் ஒளிப்படம் எடுத்தவேளை அவரை ஆர்ப்பாட்ட காரர்கள் அடையாளப்படுத்த முற்பட்ட வேளை ஊடகவியலாளாரான சண்முகம் தவசீலன்  தலையிட்டு குறித்த நபர் யார் என்று வினவியபோது அதற்கு அவர் யார் என சொல்ல மறுத்து குறித்த இடத்தினை விட்டு தப்பி ஓடிய போது ஆர்ப்பாட்ட காரர்களால் பிடிக்கப்பட்டு மீண்டும் விசாரித்த போது தான் கடற்படை அதிகாரி என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து முல்லைத்தீவு பொலிசாரை சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்தபோது அவர்கள் குறித்த இடத்திற்கு வர தாமதமான நிலையில் குறித்த நபரை வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டபாய கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று அவர் கடற்படையினை சேர்ந்தவரா என அடையாளப்படுத்திய போது கடற்படையினர் அவர் தங்களுடைய நபர் என தெரிவித்த போது அவரை குறித்த இடத்தில் வருகைதந்த பொலிசாரிடம் ஒப்படைத்து திரும்பியுள்ளார்.

cot_case__3_.jpg

இந்நிலையினை தொடர்ந்து குறித்த கடற்படை அதிகாரி ஊடகவியலாளர்களை பழிவாங்கும் நோக்கில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் உண்மைக்கு புறம்பான கருத்தினை தெரிவித்து முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் 20.04.2019 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளரான சண்முகம் தவசீலன் அவர்களை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய  நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு வழக்கு விசாரணைகள் தொடந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/154485

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

டற்படையினர் அவர் தங்களுடைய நபர் என தெரிவித்த போது அவரை குறித்த இடத்தில் வருகைதந்த பொலிசாரிடம் ஒப்படைத்து திரும்பியுள்ளார்.

 

10 hours ago, ஏராளன் said:

சண்முகம் தவசீலன் அவர்களை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய  நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு வழக்கு விசாரணைகள் தொடந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஹி... ஹி.... இலங்கை போலீசு! குற்றவாளியை கைது செய்யாமல் சட்ட முறையை பின்பற்றியவரை கைது செய்து, தன் திறமையை காட்டியுள்ளது. வருடங்கள் கழிய குற்றம் எதுவும்  நிரூபிக்க முடியாமல் விடுதலை என்று அறிவிப்பு வரும். 

10 hours ago, ஏராளன் said:

இனம் தெரியாத நபர் ஒருவர் போராட்டகாரர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததோடு தனது கைபேசியில் ஒளிப்படம் எடுத்தவேளை அவரை ஆர்ப்பாட்ட காரர்கள் அடையாளப்படுத்த முற்பட்ட வேளை ஊடகவியலாளாரான சண்முகம் தவசீலன்  தலையிட்டு குறித்த நபர் யார் என்று வினவியபோது

எங்கே எங்கள் அரச தலைவர்கள்? தங்களுக்கு தேவையென்றால் மக்களை அறைகூவி அழைத்து படம் காட்டுவினம், மக்கள் தேவைகளில் இவர்களை காணமுடியாது. தமிழரின் நிஞாயமான அஹிம்சை போராட்டங்களை  அடித்து விரட்ட சிங்களம் தனது முழுப்பிரயோகத்தையும், நம்ம கூத்தாடிகளையும் பயன்படுத்தி நிஞாயப்படுத்துது. நமது மக்களுக்கு  உறுதுணையாய் இருக்க வேண்டிய தலைவர்கள் இதனோடு தம்மை சம்பந்தபடுத்த விரும்புவதில்லை. நல்லிணக்கம்! எதிர்காலத்தில் இந்த ஆக்கிரமிப்பின் மூலம் இனப்பிரச்சனை இல்லாமல் ஒன்றிணைந்த நாடாக திகழுமென நம்பவைக்கபடும் சில முட்டாள்களில் இவர்களும் அடக்கம். பின் எதற்கு இவர்கள் இன்னும் மக்களை ஏமாற்றுகிறார்கள்? அச்சுறுத்தி அடிமைப்படுத்தி பறித்தெடுப்பதை நல்லிணக்கம் என மொழி பெயர்க்கிறார்கள் அறிவிலிகள், கோழைகள், செயற்றிறன் அற்றவர்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.