Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Manipur On Fire: என்ன நடக்கிறது மணிப்பூரில்? ஏன் தொடங்கியது கலவரம்? முழு களத்தகவல் இதோ!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Manipur On Fire: என்ன நடக்கிறது மணிப்பூரில்? ஏன் தொடங்கியது கலவரம்? முழு களத்தகவல் இதோ!

05 May 2023, 8:34 IST

    • நிலைமை சீராகும் வரை ரயில் இயக்கத்தை நிறுத்துமாறு மணிப்பூர் அரசு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து ரயில் சேவையை வடகிழக்கு ரயில்வே நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மெய்டேய் சமூகத்தை பட்டியலிடப்பட்ட பழங்குடிகள் (எஸ்.டி) பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து மாணவர்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட பழங்குடியினர் ஒற்றுமை ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்தது.

டோர்பாங் பகுதியில் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதோர் இடையே வன்முறை நடந்தது. அதை தொடர்ந்து மணிப்பூரின் எட்டு மாவட்டங்களில் புதன்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மற்றும் முழு வடகிழக்கு மாநிலங்களிலும் மொபைல் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

 

பழங்குடிகள் ஆதிக்கம் இல்லாத இம்பால் மேற்கு, கக்சிங், தவுபால், ஜிரிபாம் மற்றும் பிஷ்ணுபூர் மாவட்டங்களிலும் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் சுராசந்த்பூர், காங்கோக்பி மற்றும் தெங்னௌபால் ஆகிய மாவட்டங்களில்ம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் செல்போன் இணையதள சேவைகள் ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகிய படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 4,000 பேர் பாதுகாப்பு படையினரால் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில், போராட்டக்காரர்களால், மாநிலத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருஅதால் அம்மாநில கவர்னர் அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

கலவரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால், கலவரத்தை கட்டுப்படுத்த போராட்டக்காரர்களை கண்டதும் சுட அம்மாநில கவர்னர் உத்தரவிட்டு உள்ளார். மேலும், 5 நாட்களுக்கு இணைய சேவையை முடக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கலவரம் காரணமாக 9000 பேர் தங்களது சொந்த வாழ்விடங்களைவிட்டு வெளியேறி உள்ளனர். மணிப்பூரில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலைமையை நாகாலாந்து அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, மேலும் மணிப்பூரில் இருந்து வெளியேற வேண்டிய மாநிலத்தின் குடிமக்களுக்கு ஒரு உதவி எண்களை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

நிலைமை சீராகும் வரை ரயில் இயக்கத்தை நிறுத்துமாறு மணிப்பூர் அரசு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து ரயில் சேவையை வடகிழக்கு ரயில்வே நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

https://tamil.hindustantimes.com/amp/nation-and-world/rioters-ordered-to-shoot-on-sight-in-violence-hit-manipur-131683254848031.html

தலைப்பு ; உண்மையான தலையங்கம் மாற்றப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தவறு (எனது தவறு)/ நிர்வாகம் மாற்றியதோ நாம் அறியோம். 

கபித்தான். 🤣

Edited by Kapithan
தலைப்பு திருத்தப்பட்டுள்ளது

  • இணையவன் changed the title to Manipur On Fire: என்ன நடக்கிறது மணிப்பூரில்? ஏன் தொடங்கியது கலவரம்? முழு களத்தகவல் இதோ!
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது தலைப்பு "மணிப்பூர்க் கலவரம் - இந்தியா உடைய ஆரம்பித்துவிட்டதா என்பதாக இருந்தது. 

🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.