Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களுத்துறை 16 வயது யுவதி மரணம்-நீதிமன்றத்தின் உத்தரவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

களுத்துறை 16 வயது யுவதி மரணம்-நீதிமன்றத்தின் உத்தரவு!

களுத்துறை 16 வயது யுவதி மரணம்-நீதிமன்றத்தின் உத்தரவு!

களுத்துறையில் 16 வயது யுவதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய 29 வயதான பிரதான சந்தேகநபரை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்த பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று (புதன்கிழமை) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, உயிரிழந்த யுவதியின் கையடக்க தொலைபேசிக்கு வந்த அழைப்புகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து குறித்த யுவதி தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்ததாக விசாரணைகளை முன்னெடுக்கும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடன் இருந்த போது அவருக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும் அதன் பின்னர் அவர் அந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், சந்தேகநபரின் வாக்குமூலத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், பல கோணங்களில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1331629

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be pop art of text that says 'SRI LANKAN MEDIA #s'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a black-and-white image of sea bird and vulture

 

May be an image of map, floor plan and text

 

No photo description available.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

களுத்துறை யுவதியின் சம்பவம் தொடர்பான வழக்கு குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைப்பு!

களுத்துறை யுவதியின் சம்பவம் தொடர்பான வழக்கு குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைப்பு!

களுத்துறை யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதான சந்தேக நபரை மே மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேவேளை யுவதியின் மரணம் தொடர்பான விசாரணைகளில் அவர் தங்கியிருந்த விடுதி உரிமையாளரின் மனைவியும் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அவர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் விசாரணைகளின் போது, உயிரிழந்த யுவதிக்கு ஆசிரியர் ஒருவரிடமிருந்து கடைசி தொலைபேசி அழைப்பு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி பிரதான சந்தேக நபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யத பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1331721

  • கருத்துக்கள உறவுகள்

களுத்துறை சம்பவம் - பணத்திற்காக யுவதியை பிரதான சந்தேக நபருக்கு விற்ற 22 வயது இளைஞன்?

Published By: RAJEEBAN

13 MAY, 2023 | 10:08 AM
image

களுத்துறையில் யுவதி சடலமாக மீட்கப்பட்டமை குறித்த விசாரணைகளின் போது குறிப்பிட்ட பணத்திற்காக விற்கப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மாணவியுடன் ஹோட்டலில் காணப்பட்ட 22 வயது நபர் பிரதான சந்தேகநபருக்கு யுவதி பணத்திற்காக ( 20,000 ) விற்றதாக தெரிவித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கான பணத்தின் ஒரு பகுதியை பிரதான சந்தேகநபரிடமிருந்து பெற்றுக்கொண்டதை  22வயது நபர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/155182

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

16 வயதுடைய பாடசாலை மாணவி 20000 ரூபாய்க்கு விற்கப்பட்டாரா ??? விசாரணையில் புதிய திருப்பம்!!

16 வயதுடைய பாடசாலை மாணவி 20000 ரூபாய்க்கு விற்கப்பட்டாரா ??? விசாரணையில் புதிய திருப்பம்!!

களுத்துறையில் 16 வயதுடைய பாடசாலை மாணவியை பிரதான சந்தேகநபருக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரிடம் 16 வயதுடைய பாடசாலை மாணவியை 20,000க்கு விற்பனை செய்யுமாறு தனது தோழியுடன் விடுதியில் இருந்த இளைஞன் (22) யோசனை கூறியதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பொலிஸாரின் சந்தேகத்தின்படி, பிரதான சந்தேக நபரிடம் குறித்த மாணவியை விற்பனை செய்தமைக்காக 22 வயதுடைய இளைஞன், இந்தத் தொகையில் ஒரு பகுதியைப் பெற்றுள்ளார்.

மே 06 அன்று, களுத்துறையில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு அருகில் 16 வயது சிறுமியின் நிர்வாண சடலம் கண்டெடுக்கப்பட்டது, அவள் ஐந்து மாடி ஹோட்டலின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து களுத்துறை இசுரு உயன பிரதேசத்தில் வசிக்கும் தனுஷ்க கயான் சஹபந்து என்ற 29 வயதுடைய இளைஞர்  09ஆம் திகதி கைது செய்யப்பட்டார். எவ்வாறாயினும், முதற்கட்ட விசாரணைகளின் போது, சந்தேக நபர் அனைத்து கொலைக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.

மூன்றாவது மாடியில் இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு 06 ஆம் திகதி மற்றுமொரு இளம் ஜோடி (19 வயதுடைய இளம் பெண் மற்றும் 22 வயதுடைய ஆண்) மற்றும் 16 வயது சிறுமியுடன் ஹோட்டலுக்குச் சென்றதாக அவர் தெரிவித்தார். அவர்களுடன் சேர்ந்து மது அருந்தியதையும் ஒப்புக்கொண்டார்.

அந்த நாளில் பாடசாலை மாணவியை முதல் தடவையாக சந்திப்பதற்கு முன்னர் தனக்கு அறிமுகம் இல்லை என்றும் 22 வயதுடைய இளைஞனால் தான் தனக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கைது செய்யப்பட்ட உடனேயே, களுத்துறை நீதவான் நீதிமன்றம், 10 அன்று, மேலதிக விசாரணைகளுக்காக அவரை 48 மணிநேரம் காவலில் வைக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கியது.

தடுப்புக் காலத்தையடுத்து, களுத்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டபட்டது.

நேற்றைய நீதிமன்ற நடவடிக்கைகளின் போது, சிறுமியின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என பிரதிவாதி சட்டத்தரணி நீதவானிடம் தெரிவித்தார்.

பொலிஸாரிடம் வழங்கிய முதற்கட்ட வாக்குமூலத்தில், ஒருவருடன் ஒருவர் நெருக்கமாக இருந்த போதிலும் தாங்கள் உடலுறவு கொள்ளவில்லை என சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவரது கூற்றுப்படி, அந்த இளம்பெணுக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் அவர் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி கத்தினார் என்றும் அழைப்பு முடிந்ததும், அவள் ஜன்னல் அருகே இருந்த நாற்காலியில் ஏறி, கட்டிடத்திலிருந்து குதித்துவிட்டாள் என்றும் கூறியுள்ளார்.

இளைஞருக்கு இந்த தொலைபேசி அழைப்பை யார் செய்தார்கள் என்பதை பொலிஸார் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று பாதுகாப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, உயிரிழந்தவரின் உடலில் காணப்படும் கடித்த தடயங்கள் பிரதான சந்தேக நபருடையதா என்பதைக் கண்டறிய 29 வயதுடைய நபரை சட்ட வைத்திய நிபுணரிடம் ஒப்படைக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரிக்கைக்கு அனுமதி வழங்கிய நீதவான், சந்தேக நபரை 16 ஆம் திகதி சட்ட வைத்திய நிபுணர் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறும், அவரை 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

குறித்த இளம் தம்பதியினர் மற்றும் குழு ஹோட்டலுக்கு வந்த காரின் சாரதியும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், ஹோட்டல் உரிமையாளரின் மனைவி வியாழக்கிழமை (மே 11) இறந்தவரின் தேசிய அடையாள அட்டையை சரியாக பதிவிட தவறியமைக்காக கைது செய்யப்பட்டார்.

ஹோட்டலில் அறையை வாடகைக்கு எடுப்பதற்காக 16 வயது சிறுமி தயாரித்த என்ஐசி அவரது நண்பர் ஒருவருக்குச் சொந்தமானது என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வியாழக்கிழமை, பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையில், காவலில் வைக்கப்பட்டிருந்த 22 வயது இளைஞரால் களு ஆற்றில் வீசப்பட்டதாகக் கூறப்படும் பதின்ம வயதுப் பெண் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசியைக் கண்டறிய பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

https://athavannews.com/2023/1331806

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a doodle of text

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.