Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'மொக்கா' புயல்: வங்கதேசத்தை தாக்கும் சக்தி வாய்ந்த புயலால் பல லட்சம் ரோஹிஞ்சா அகதிகள் நடுக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
mocca

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஜினி வைத்தியநாதன்
  • பதவி,பிபிசி நியூஸ்
  • இருந்துகாக்ஸ் பஜார், வங்கதேசம்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மொக்கா புயல் அதிதீவிர புயலாக மாறி தற்போது வங்கதேசம் மற்றும் மியான்மரின் கடலோரப் பகுதிகளை தாக்கி வருகிறது.

மொக்கா புயல் அச்சுறுத்தலால் தென்கிழக்கு வங்கதேசத்தில் சுமார் 5 லட்சம் பேர் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியுள்ளனர். இந்த புயலின் தாக்கம் மிக மோசமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மொக்கா புயல் கரையைக் கடக்கும் போது 170 கி.மீ. வேகத்தல் பலத்த காற்று வீசும், வங்கக்கடலில் 12 அடி உயரம் வரை அலை எழும்பக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமான காக்ஸ் பஜார் பகுதியை இந்த புயல் தாக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த முகாமில், தற்காலிக வீடுகளில் லட்சக்கணக்கானோர் வசிக்கின்றனர்.

முகாமில் ஏற்கனவே பலத்த மழை பெய்கிறது. சிவப்பு நிற எச்சரிக்கைக் கொடிகள் ஏற்றப்பட்டுவிட்டன.

 

வங்கதேசம் கடந்த இருபதாண்டுகளில் கண்ட மிக மோசமான புயலாக மொக்கா இருக்கக் கூடும்.

வங்கதேசம் - மியான்மர் கடற்கரையில் புயலின் தாக்கம் வலுவாக இருப்பதால் அருகில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. தாழ்வான இடங்களில் வசித்த மக்களுக்காக சுமார் 1,500 தங்குமிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

"நாங்கள் எத்தகைய தாக்கத்தையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். ஒரு உயிர் கூட பறிபோக விட மாட்டோம்" என்று பிபிசியிடம் பேசிய காக்ஸ் பஜார் கூடுதல் உதவி ஆணையர் விபூஷன் காந்தி தாஸ் கூறினார்.

புயல் எதிரொலியாக உருவாக்கப்பட்டுள்ள தங்குமிடங்களுக்கு நேற்றைய நாள் முழுவதும் மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். காக்ஸ் பஜாரில் உள்ள பள்ளியின் வகுப்பறைகளில் நூற்றுக்கணக்கானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சிலர் தங்களது உடைமைகளை பிளாஸ்டிக் பைகளில் கட்டி எடுத்து வந்தனர். சிலர் தங்களது வாழ்வாதாரமான கால்நடைகள் மற்றும் கோழிகளையும் உடன் கொண்டு வந்தனர்.

17 வயது ஜன்னத் என்ற பெண் பிறந்து இரண்டு மாதமேயான குழந்தையுடன் வகுப்பறை மேஜை ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ளார். சில ஆடைகளைத் தவிர வேறு எதையும் அவர் எடுத்து வரவில்லை. ஜன்னத்தை முதலில் அனுப்பிவிட்ட அவரது கணவர், தங்களது கடற்கரை வீட்டில் பொருட்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து பின்னரே முகாமுக்கு வந்து சேர்ந்தார்.

'மோக்கா' புயல் அச்சுறுத்தல்
 
படக்குறிப்பு,

ஜன்னத்

கடந்த ஆண்டு தாக்கிய சிட்ரங் புயலால் தங்களது வீடு சேதமடைந்ததாக கூறிய ஜன்னத், தற்போதைய புயல் பெரும் அச்சத்தை தருவதாக தெரிவித்தார்.

பிபிசியிடம் பேசிய அவர், "அடுத்து என்ன நடக்கும் என்று கவலையாக இருக்கிறது. எனது வீடு மீண்டும் மூழ்கிவிடுமோ என்று பயமாக இருக்கிறது" என்று கூறினார்.

மியான்மரில் இருந்து வெளியேறி இங்கு வந்து தங்கியுள்ள சுமார் 10 லட்சம் ரோஹிஞ்சா அகதிகளும் இன்னும் ஆபத்தின் பிடியில்தான் உள்ளனர். அவர்கள் தங்கியுள்ள பகுதிகளை பாதுகாக்க தங்களால் ஆன அனைத்தையும் செய்து வருவதாக ஐ.நா. கூறுகிறது.

முகாம்களை விட்டு ரோஹிஞ்சா முஸ்லிம்கள் வெளியே செல்ல வங்கதேச அரசு அனுமதிப்பதில்லை. ஆகவே, முகாம்களை புயல் தாக்கினால் என்ன நடக்குமோ என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.

40 வயதான முகமது ரஃபீக்கும் அவரது குடும்பத்தினரும் அகதிகளுக்காக கட்டப்பட்ட சிறிய மூங்கில் வீடுகளில் வசிக்கின்றனர்.

தார்பாலினை கூரையாகக் கொண்ட இந்த வீடுகள், புயலின் போது பெய்யும் கனமழைக்கும், வீசும் பலத்த காற்றுக்கும் எதிராக தாக்குப்பிடிப்பது கடினம்.

'மோக்கா' புயல் அச்சுறுத்தல்
 
படக்குறிப்பு,

முகமது ரஃபீக்கும் அவரது குடும்பமும்

"எங்களால் செய்ய முடிந்தது ஒன்றே ஒன்றுதான். கடவுளே எங்களை காப்பாற்றுங்கள் என்பதே அது. பாதுகாப்பு தேடி எங்களால் எங்கும் செல்ல முடியாது. உதவி செய்யவும் யாரும் இல்லை." என்கிறார் முகமது ரஃபீக்.

அவர் மேலும் கூறுகையில், "இதற்கு முன்னரும் பல கஷ்டங்களை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். கடந்த காலத்திலும் எங்களது வீடுகள் அழிந்து போயுள்ளன. அதேபோன்று இந்த முறை நடக்காது என்று நம்புகிறோம்" என்று குறிப்பிட்டார்.

புயலால் பெய்யும் கனமழை நிலச்சரிவுக்கும் வழிவகுக்கும். இது மலைப்பாங்கான இடங்களில் உள்ள முகாம்களுக்கு ஆபத்தானது. ஏனெனில், அங்கே நிலச்சரிவு என்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

அகதிகள் மற்றும் முகாம்களை மேற்பார்வையிடும் வங்கதேச அரசு அலுவலகத்தைச் சேர்ந்த ஷம்சுல் டௌஸா, "புயலை எதிர்கொள்ளும் வகையில் முகாம்களை முடிந்த அளவுக்கு தயார்படுத்த என்.ஜி.ஓ.க்களுடன் இணைந்து செயல்பட்டோம்" என்று பிபிசியிடம் கூறினார்.

அகதிகளை முகாம்களை விட்டு வெளியே அழைத்துச் செல்வது அவ்வளவு எளிதான காரியமல்ல.

"பல லட்சம் அகதிகளை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு அழைத்துச் செல்வது மிகவும் கடினமான காரியம். அதனை செயல்படுத்துவது கடினம். நாம் நடைமுறையில் சாத்தியமானதை சிந்திக்க வேண்டும். உயிர்களைக் காப்பதே எங்களது நோக்கம். புயலுக்குப் பின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் நாங்கள் கணக்கில் கொண்டுள்ளோம். அங்கே பலத்த மழையும், அதனால் பெருவெள்ளமும், நிலச்சரிவும் ஏற்படலாம். அதனால், முகாம்களுக்கு ஆபத்து வரலாம்" என்று அவர் கூறினார்.

மொக்கா புயலால் இந்தியாவிலும் பாதிப்பு

மொக்கா புயல் தென்கிழக்கு வங்கதேசம், மியான்மரை நோக்கிச் செல்வதாக கணிக்கப்பட்டாலும் கூட அதன் தாக்கம் இந்தியாவில் இல்லாமல் இல்லை. வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மிசோரம், மணிப்பூர், அசாம் மாநிலங்களில் கனமழையும் பலத்த காற்றும் இருக்கும். மற்ற இடங்களில் உள்ள காற்றில் இருந்து ஈரப்பதத்தை மொக்கா புயல் உறிஞ்சிவிடும் என்பதால் இந்தியாவின் மற்ற பிராந்தியங்கள் வெப்ப அலையில் உழல நேரிடும்.

மிக தீவிர புயலாக மொக்கா புயல் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது மேலும் வலுப்பெற்று சூப்பர் புயலாக உருவாகவும் வாய்ப்புள்ளதாக சில வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்போதைய நிலையில், மொக்கா புயலால் 210 முதல் 220 கி,மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. சில நேரம் 240 கி.மீ. வேகத்தையும் தொடுகிறது. ஆனால், காற்றின் வேகம் 221 கி.மீ. வேகத்தை தாண்டி நிலையாக இருக்குமானால் அது சூப்பர் புயலாக உருவெடுக்கும்.

புயல்கள் அடிக்கடி எழுவது காலநிலை மாற்றத்தின் தாக்கமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், கடலின் மேற்பரப்பில் வெப்பநிலை உயரும் போது, அதற்கு மேலே உள்ள காற்றை அது சூடாக்கும்; புயல்கள், சூறாவளிகளை உருவாகத் தேவையான கூடுதல் ஆற்றல் அங்கே உருவாகும் என்பது நமக்குத் தெரியும்.

அதன் விளைவாக, அந்த புயல்களும், சூறாவளிகளும் அதீத மழைப்பொழிவை உண்டாக்குகின்றன.

தொழிற்புரட்சிக்குப் பிறகு பூமியின் வெப்பநிலை ஏற்கனவே 1.1. செல்சியஸ் அளவுக்கு அதிகரித்து விட்டது. கார்பன் உமிழ்வை குறைக்க அனைத்து நாடுகளின் அரசுகளும் நடவடிக்கை எடுக்கத் தவறினால் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும்.

https://www.bbc.com/tamil/articles/c25pg581dewo

  • கருத்துக்கள உறவுகள்

மொக்காப் புயல் பெயரிற்கேற்ற மாதிரி மொக்குத்தனமான புயல் போலக் கிடக்கு!👀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வங்கக்கடலில் உருவான மோக்கா புயல் வங்கதேசம் மற்றும் மியான்மர் இடையே கரையைக் கடக்கும்போது பதிவு செய்யப்பட்ட காட்சிகள்தான் இவை…

 

Mocha Cyclone: 210 Km வேகத்தில் வீசிய காற்று; முறிந்து விழுந்த Cell Phone Tower- தாண்டவம் ஆடிய புயல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மியன்மாரின் ராக்கைனில் சூறாவளியினால் 41 பேர் பலி! நூற்றுக்கும் அதிகமானோரை காணவில்லை 

Published By: SETHU

16 MAY, 2023 | 12:52 PM
image

மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் மோச்சா சூறாவளியினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.

மோச்சா சூறாவளி நேற்றுமுன்தினம் மணித்தியாலத்துக்கு சுமார் 195 கிலோமீற்றர் வேகத்தில் ராக்கைன் கரையைக் கடந்தது.

இதனால், 'பு மா' எனும் கிராமத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என உள்ளூர் அதிகாரியான கார்லோ தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும், நூற்றுக்கும் அதிகமானோரை காணவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். 

காவுங் தோக் கார் கிராமத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர் என அக்கிராமத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Sittwe-Rakhine-State-Myanmar---Mocha--2-

இந்நிலையில்,  ராக்கைனில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அங்கு பணியில் ஈடுபட்டுள்ள, நிவாரண மற்றும் அபிவிரு;தியின் பங்காளர் தொண்டர் அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

மோதல்களால் பாதிக்கப்பட்ட ராக்கைன் பிராந்தியமானது அந்நாட்டு இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இல்லை அப்பிராந்தியத்தை பேரழிவுப் பிராந்தியமாக இராணுவ ஆட்சியாளர்கள் நேற்று பிரகடனப்படுத்தினர். 

2017 ஆம் ஆண்டு வன்முறைகள், அடக்குமுறைகள் காரணமாக ராக்கைன் பிராந்தியத்திலிருந்து இலட்சக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிடியோடியமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/155399

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.