Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவை நோக்கி ஓடும் சிங்களத் தலைவர்கள்

Featured Replies

சிறிலங்கா அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க இன்று செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

மேலும் வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

அம்மையாரின் வருகைக்காக விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரித்திருந்த போதும், காத்திருந்த செய்தியாளர்களை சந்திக்காமலே வெளியேறிவிட்டார்.

இந்தப் பருபருப்புக்களெல்லாம் மகிந்த அய்யேவிடம் வேகாது. இராஜதந்திரம் தெரியாதவனிடம் இராஜதந்திர நகர்வுகளைச் செய்து என்ன பயன். சந்திரிகாவுக்கும் இனிக் கஷ்டகாலந்தான். இன்று பயணம், என்று தலைப்பு. இறுதிப் பயணம் என்று போட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை நோக்கி ஓடும் சிங்களத் தலைவர்கள்.

Written by Seran - Sep 14, 2007 at 12:57 PM

விடுதலைப்புலிகளைப் பலவீனப்படுத்தி விட்டுத் தான் இனப்பிரச்சினைக்கு அதிகாரத்தீர்வினை வழங்குவேன் எனச் சொல்வதற்காக மகிந்த ராஜபக்ச கோத்தபாய குழுவை புதுடில்லிக்கு அனுப்பினார்.

இப்போது முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் 05 நாள் விஜயமாக புதுடில்லி சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரம சிங்க புதுடில்லி புறப்பட்டுள்ளார்.

இந்தச் சூடு தணிய முன் மங்கள சமரவீர, சிறீபதி சூரியாராட்சி ஆகியோரும் புதுடில்லி புறப்படவுள்ளனர்.

எல்லோருமே புதுடில்லி புறப்படுகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர்கள் சிறிலங்காவின் அரசியல் வாதிகள். இந்தியாவிற்குப் பறப்பதும் அங்குள்ள அரசியற் தலைவர்களைச் சந்திப்பது ஒரு வாடிக்கையான நிகழ்வாகியுள்ளன.

இவர்கள் இந்தியா செல்லும் போதெல்லாம் இந்திய அரசுத் தலைவர்கள் பேசுவதை இனப்பிரச்சினையைப் பற்றித்தான். ஆனால் இவர்கள் அதற்காகவா போகிறார்கள். இனப்பிரச்சினை என்றதும் சிங்களத் தலைவர்களுக்கு வேம்பாகக் கசக்கிறது.

ஆனால் இந்திய அரசுத் தலைவர்கள் இனப்பிரச்சினையைத் தீர்க்க ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுக்குமாறு கோரும்போதெல்லாம் இந்தியா செல்லும் சிங்களத் தலைவர்கள் ஆமாப்போட்டு விட்டுக் கொழும்பு திரும்பியவுடன் இனவாதத்தை கக்குகிறார்கள். தமிழர் விரோதப்போக்கைக் கடைப்பிடிக்கிறார்கள். இதனைச் சுமார் மூன்று தசாப்த காலமாக சிங்களத் தலைவர்கள் தயவு தாட்சணியம் இன்றிக் கடைப்பிடிக்கிறார்கள்.

அவர்கள் இந்தியா செல்வது ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே என்பது இலகுவில் புரிந்துகொள்ளக் கூடியதே.இப்போது சந்திரிகா, ரணில், மங்கள கூட்டு மகிந்தவை வீழ்த்த வேண்டும் என்ற வெறியோடு நிகழ்ந்தவையே. இவர்கள் இப்போது இந்தியாவை நம்பியுள்ளனர். அவர்களது உதவியோடு மகிந்தவை தோற்கடிக்க முயலுமென எண்ணுகின்றனர்.

அவர்களிடம் மகிந்தவை வீழ்த்த இருக்கும் ஆயுதம் இனப்பிரச்சினை தான். அதனைக் கையில் வைத்தே இந்தியாவை வழிக்குக் கொண்டுவர முடியுமென ரணில் மங்கள கூட்டு முயல்கிறது.

இனப்பிரச்சினைக்கு விரைந்து அரசியற் தீர்வு காண வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு அதற்கு மகிந்த அரசாங்கம் இருக்கும் வரை சாத்தியப் படாது. எனவே மகிந்த அரசாங்கத்தைக் கலைக்க இந்தியா உதவ வேண்டும் என்பதே இவர்களின் வாதமாக முன்வைக்கப்படுகிறது.

ரணில்-மங்கள கூட்டு இந்தியாவிற்கு விசுவாசமாகச் செயற்படும் என்ற உறுதிமொழி முன்வைக்கப்படுகிறது. அத்தோடு தாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்ற உத்தரவாதமும் வழங்கப்பட்டுள்ள இந்த அடிப்படையிலேயே இவர்களது இந்தியப் பயணத்திற்கான நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப் பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.

மிக இரகசியமாக வைக்கப்பட்டிருந்த சந்திரிக்காவின் இந்தியப் பயணம் இப்போது வெளிவந்துள்ளது. இலங்கை தொடர்பான முக்கிய பேச்சு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரச்சாரத்துடன் நிகழ்ந்துள்ளது. இன்றைய அரசியல் நிலவரம், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பேச்சு நடந்ததாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

புதுடில்லி செல்லும் சந்திரிக்கா வெளியுறவுச் செயலர் சிவ்சங்கமேனன், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அ.ம நாராயணன், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரைச் சந்தித்துப்பார் என தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகசிங் சந்திப்பிற்கான ஏற்பாடும் நடைபெறுகிறது.

பொதுவாக சந்திரிக்காவின் அரசியல் உறுதிப்பாடு கேள்விக்குரியவையே. அரசியலில் தொடர்ந்து நிலைத்து நிற்க விரும்புகிறாரா? அல்லது தனது சுதந்திரக்கட்சியின் அதிருப்தியாளர்களுக்காகஅரசி

ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவும் இணைந்து தமது எதிர்கால நடவடிக்கைகளை இந்தியத் தலைவர்களுக்கு தெளிவுபடுத்த திட்டமிட்டுள்ளன.

மேலும் வாசிக்க

எதோ சதித்திட்டம் செய்ய போகின்றார்கள் போல இருக்கின்றது.

ரணில் விக்கரமசிங்க அவர்கள் ஏன் இந்தியாவுக்கு அடிக்கடி போய் வருகின்றார். இவரும் இந்திய புலனாய்வு அமைப்பான றோவின் ஒரு முகவராக இருக்கக்கூடுமோ?

இந்தியாவுக்கு சிறிலங்கா தலைவர்கள் ஒவ்வொருவராக இந்தியா சென்று வருவதன் பின்னணி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் வாசிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.