Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பயங்கரவாதத்தை முறியடிக்கும் சட்டங்கள் சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடையதாக அமைய வேண்டும் - சர்வதேச மன்னிப்புச்சபை நீதியமைச்சருக்குக் கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

02 JUN, 2023 | 02:27 PM
image
 

(நா.தனுஜா)

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்களை உள்ளடக்கிய கடிதமொன்றை நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, பயங்கரவாதத்தை முறியடிக்கும் நோக்கில் புதிதாகக் கொண்டுவரப்படக்கூடிய எந்தவொரு சட்டமும் சர்வதேச சட்ட நியமங்களுக்கு அமைவாகக் காணப்படுவதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் கடும் எதிர்ப்புக்களும் விமர்சனங்களும் எழுந்த நிலையில், அதுபற்றிய கரிசனைகள் மற்றும் திருத்த முன்மொழிவுகளைத் தமக்கு அனுப்பிவைக்குமாறு நிதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பொதுமக்கள், அரசியல் கட்சிகள், சிவில் சமூகத்தினர் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரிடமும் கோரிக்கைவிடுத்திருந்தார்.

அதற்கமைய உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பான தமது கரிசனைகளை உள்ளடக்கி சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்தியப் பிரதிப்பணிப்பாளர் ஸ்மிரிதி சிங்கினால் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,

அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் மிகுந்த கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளது.

இச்சட்டமூலமானது கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், பாதுகாப்பு பெறுவதற்கான உரிமை என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு மனித உரிமைகளின்மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகக் காணப்படுகின்றது.

அதுமாத்திரமன்றி இச்சட்டமூலம் இலங்கை அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு முரணானதாகவும் காணப்படுகின்றது.

மேலும் இச்சட்டத்தின்கீழ் பயங்கரவாதக்குற்றமாகக் கருதப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் உரியவாறானதும் தெளிவானதுமான வரைவிலக்கணம் உள்ளடக்கப்படவில்லை என்பதுடன் அரச பாதுகாப்பு அதிகாரிகள்வசம் மட்டுமீறிய அதிகாரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. 

அதேபோன்று இச்சட்டவரைபைத் தயாரித்தவர்கள் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிபுணர்களால் முன்வைக்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கும் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு அமைவாகவும் இதனைத் தயாரிக்கவில்லை. 

எனவே சர்வதேச சட்டத்தின்கீழ் இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யவேண்டுமெனில் இச்சட்டமூலத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றே நாம் கருதுகின்றோம்.

அதன்படி குறிப்பாக உத்தேச பயங்கரவாதச்சட்டமூலத்தில் பயங்கரவாதம் என்ற பதத்துக்கு விரிவான வரைவிலக்கணம் வழங்கப்பட்டிருப்பதுடன் அதன்கீழ் பல்வேறு குற்றங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று சந்தேகநபரை குற்றச்சாட்டுக்களின்றி ஒரு வருடகாலம் வரை தடுப்புக்காவலில் வைக்கமுடியும் என்பதுடன் சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாக மேல்நீதிமன்றத்தினால் தடுப்புக்காவல் காலத்தை நீடிக்கமுடியும் என்ற சரத்து இச்சட்டமூலத்தில் உள்ளடங்கியுள்ளது.

மேலும் இப்புதிய சட்டமூலத்தின் ஊடாக இராணுவத்தினருக்கு மட்டுமீறிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதுமாத்திரமன்றி எந்தவொரு நபருக்கோ அல்லது அமைப்புக்கோ எதிராகத் தடைவிதிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவை உள்ளடங்கலாக பல்வேறு தரப்பினராலும் வெளிப்படுத்தப்பட்ட கரிசனைகளைக் கருத்திற்கொள்ளுமாறு வலியுறுத்துவதுடன், பயங்கரவாதத்தை முறியடிக்கும் நோக்கில் புதிதாகக் கொண்டுவரப்படக்கூடிய எந்தவொரு சட்டமும் சர்வதேச சட்ட நியமங்களுக்கு அமைவாகக் காணப்படுவதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துமாறும் வலியுறுத்துகின்றோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/156791

  • கருத்துக்கள உறவுகள்

இது சிங்கள பவுத்த நாடு. எங்களுக்கு யாருடைய ஆலோசனையும் தேவை  இல்லை. எமது உள்நாடு விடயங்களில் தலையிட வேண்டாம். இது இறைமை உள்ள நாடு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல விவகாரம் : பாதிக்கப்பட்ட தரப்பினருடனான கலந்துரையாடல் அவசியம் - மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்

Published By: DIGITAL DESK 5

04 JUN, 2023 | 09:36 AM
image
 

(நா.தனுஜா)

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தைத் திருத்தியமைப்பதற்கு நேர்மையாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் ஏற்கனவே பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மூலம் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுடனான கலந்துரையாடல்களை உள்ளடக்கியிருக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தை முழுமையாக வாபஸ்பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் கடும் எதிர்ப்புக்களும் விமர்சனங்களும் எழுந்த நிலையில், அதுபற்றிய கரிசனைகள் மற்றும் திருத்த முன்மொழிவுகளைத் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பொதுமக்கள், அரசியல் கட்சிகள், சிவில் சமூகத்தினர் உள்ளிட்ட சகல தரப்பினரிடமும் கோரிக்கைவிடுத்திருந்தார்.

அதற்கமைய உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் தமது கரிசனைகளையும், அதில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்களையும் உள்ளடக்கி மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தைப் பொறுத்தமட்டில் 'பயங்கரவாதம்' என்ற பதத்துக்கு மிக விரிவான வரைவிலக்கணம் வழங்கப்பட்டுள்ளமை, குற்றச்சாட்டுக்களின்றித் தடுப்புக்காவலில் வைத்திருப்பதற்கும் தடுப்புக்காவல் காலத்தை நீடிப்பதற்குமான வாய்ப்பு காணப்படல், ஜனாதிபதிக்கு மிதமிஞ்சிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளமை, அதிகரித்த இராணுவமயமாக்கல் என்பன மிகுந்த கரிசனைகளைத் தோற்றுவித்திருக்கும் நிலையில், அச்சட்டமூலத்தை முழுமையாக வாபஸ்பெறவேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். 

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தைத் திருத்தியமைப்பதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தாமதமானதும், அவசரமானதுமான நடவடிக்கைகள், அச்சட்டமூலம் தொடர்பில் நிலவும் முக்கிய கரிசனைகள் நிவர்த்திசெய்யப்படாமல் இருப்பதற்கும் பிரச்சினைக்குரிய செயன்முறையின் மூலம் தயாரிக்கப்பட்ட சட்டவரைபாக அமைவதற்குமே வழிவகுக்கும். 

எனவே பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தைத் திருத்தியமைப்பதற்கு நேர்மையாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் ஏற்கனவே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுடனான கலந்துரையாடல்களை உள்ளடக்கியிருக்கவேண்டும். 

அதனூடாகவே பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் உண்மையான தாக்கங்கள் மற்றும் அதன்விளைவாக மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய தாக்கங்கள், சித்திரவதைகள், மீறல்கள் என்பவற்றைப் புரிந்துகொள்ளமுடியும். அதன்படி அனைத்துத்தரப்பினருடனான கலந்துரையாடலுடன், வெளிப்படைத்தன்மைவாய்ந்த முறையில் முன்னெடுக்கப்படக்கூடிய எதிர்கால சட்டமறுசீரமைப்புச் செயன்முறைகளுக்கு அவசியமான சகல ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. 

அதுமாத்திரமன்றி தற்போதைய உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தில் காணப்படும் கரிசனைக்குரிய விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டிருக்கும் மாற்றுக்கொள்கைளுக்கான நிலையம், எதிர்வருங்காலங்களில் தயாரிக்கப்படும் சட்டவரைபுகளில் இவ்விடயங்கள் திருத்தியமைக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/156836

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.