Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு முதலாவது சர்வதேச பயணிகள் கப்பல் இன்று மாலை புறப்படுகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கான இந்தியாவின் முதலாவது சர்வதேச பயணிகள் கப்பலை இன்று மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால், கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார். இலங்கைக்கான முதல் சர்வதேச பயணக் கப்பலின் பயணத்தை ஆரம்பிப்பதற்காக அவர் இன்று தமிழகம் வரவுள்ளார் மாலை 5 மணியளவில், சர்பானந்தா சோனோவால், சென்னை கப்பல் முனையத்தில் இடம்பெறும் நிகழ்வின்போது கார்டில்லியா குரூஸ், என்ற இலங்கைக்கான முதலாவது சர்வதேச கப்பலை அவர் கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வரும்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதனை வரவேற்பார் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, சென்னையின் கிழக்கு கடற்கரையை, கப்பல் சுற்றுலா மையமாக மாற்ற இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சோனோவால் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/256946

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வருகிறது ‘கார்டிலியா குரூஸ்’

06 JUN, 2023 | 07:02 AM
image
 

இலங்கைக்கான இந்தியாவின் சர்வதேச பயணிகள் கப்பல் சேவை, இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் திங்கட்கிழமை (05) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ‘கார்டிலியா குரூஸ்’  ( cordelia cruises )கப்பல், இலங்கையின் துறைமுகங்களில் தரித்து நின்று, சுற்றுலா தலங்களுக்கு பிரயாணிகள் செல்லும் வகையில் பக்கேஜ்களையும் அறிமுகம் செய்துள்ளது.

சுற்றுலா பயணிகள் சென்னை திரும்புவதற்கு முன், இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய துறைமுகங்களுக்கு விஜயம் செய்து சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிடவுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகள் யால அல்லது உடவளவை தேசிய பூங்காவில் உள்ள வனவிலங்குகளை பார்வையிடவும் ஆமை குஞ்சு பொரிக்கும் பண்ணைக்கும் செல்வதற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் காலி, டச்சு கோட்டை மற்றும் தியலும நீர்வீழ்ச்சிக்கு செல்லமுடியும் என்றும் அந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலையில், திமிங்கலத்தைப் பார்ப்பது, டொல்பின்களைப் பார்ப்பது, புறா தீவுக்கு செல்வது ஆகியவற்றையும் இறுதியாக, யாழ்ப்பாணத்தில், சுற்றுலாப் பயணிகள் அமைதியான கடற்கரையில் ஓய்வெடுக்கலாம் என்பதுடன், இலங்கையின் புனிதமான கோவில்களை பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/157020

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் MS Empress கப்பல் முதல் பயணமாக இலங்கை வந்துள்ளது !

Empress of the Seas - Wikipedia
இந்திய பயணிகள் கப்பலான MS Empress தனது முதல் பயணத்தை ஆரம்பித்து 1600 பயணிகளுடன் ஹம்பாந்தோட்டையை வந்தடைந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி கப்பல் நிறுவனமான Cordelia Cruises உடன் ஏற்படுத்தப்பட்ட புதிய கூட்டிணைவின்படி, இந்த கப்பல் நேற்று (05) பிற்பகல் சென்னையில் இருந்து இலங்கைக்கு தனது பயணத்தை ஆரம்பித்தது.

MS Empress ஐந்து வெவ்வேறு பிரிவுகளின் கீழ் 796 அறைகளைக் கொண்டுள்ளது.

நவீன வசதிகள் நிறைந்த இந்தக் கப்பல் மூலம் முதல் 4 மாதங்களில் மட்டும் 80,000 சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://thinakkural.lk/article/257116

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.