Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புக்கள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீவிர கரிசனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

15 JUN, 2023 | 10:13 PM
image
 

(நா.தனுஜா)

அண்மையகாலங்களில் நாட்டின் பல்வேறு பாகங்களில் பதிவாகிவரும் பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புச்சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

அதுமாத்திரமன்றி தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்கின்ற, தமது பணியை உரியவாறு நிறைவேற்றுவதற்குத் தவறுகின்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக வலுவான சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறும், கடுமையான தண்டனைகளை வழங்குமாறும் அச்சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

சட்டத்தின் ஆட்சியின்கீழ் இயங்கும் சமூகமொன்றில் நிகழக்கூடிய குற்றச்செயல்களில் மிகமோசமானதாகக் கருதப்படக்கூடிய பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புச்சம்பவங்கள் மீளநிகழாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான வழிகாட்டல்களைத் தயாரிக்குமாறும், மக்கள் பாதுகாப்பை முன்னிறுத்தி குற்றச்செயல்களைத் தடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிக்கையொன்றின் ஊடாக சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.

'இலங்கையின் சட்ட முறைமையானது விசாரணை, வழக்குத்தொடுப்பு, தண்டனை வழங்கல் ஆகியவற்றை முன்னெடுப்பதற்கு உரியவாறான அதிகாரங்களை வழங்கியிருக்கின்றது. அதுவே ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியின் அடிப்படை என்பதுடன் அச்செயன்முறை மீதான நம்பகத்தன்மையும் வெளிப்படைத்தன்மையும் பாதுகாக்கப்படவேண்டியது மிகவும் அவசியமாகும்.

அரசியலமைப்பின் பிரகாரம் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிக்குக்கூட உயிர்வாழ்வதற்கான உரிமை உண்டு.  பொலிஸ்காவலின் கீழான சந்தேகநபரின் உயிரிழப்பு அல்லது சட்டவிரோத படுகொலை என்பன உயிர்வாழ்வதற்கான உரிமையை மீறுகின்றது என்ற நிலைப்பாட்டை இலங்கையின் நீதிமன்றங்கள் தொடர்ச்சியாகப் பேணியிருக்கின்றன' என்று சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இலங்கையில் பொலிஸ்காவலின்கீழ் இடம்பெறும் உயிரிழப்புக்கள் மற்றும் சித்திரவதைகள் என்பன கரிசனைக்குரிய மட்டத்தில் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாகத் தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் சங்கம், 'மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மாத்திரம் அரசின் கடமையல்ல. மாறாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான இழப்பீட்டை வழங்குவதும், சட்டத்தை மீறுபவர்களைத் தண்டிப்பதும் அரசின் கடமையாகும்' என்று வலியுறுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/157807

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.