Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு-கிழக்கில் சைவ- தமிழ் வரலாற்று எச்சங்களை அழித்தலும் பௌத்த எச்சங்களாக திரித்தலும்  !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு-கிழக்கில் சைவ- தமிழ் வரலாற்று எச்சங்களை அழித்தலும் பௌத்த எச்சங்களாக திரித்தலும்  !

Digital News Team 
கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன்
++++++++++++++++++++++++++++++++++++++
“தேர்தலை நடத்துவதன் ஊடாக இலங்கை மக்களின் இறையாண்மை அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அதிகரித்த ஈடுபாட்டின் அவசியத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்”-இது இன்றைய பத்திரிகை செய்தி. இலங்கை மக்களின் (சிங்கள மக்களின்) இறையாண்மையை பாதுகாக்க ஐ.நா.தலையீடு வேண்டுமென சஜித் கேட்கலாம். அதனால், இந்த நாட்டின் இறைமைக்கு பங்கம் ஏற்படாது.ஜே.வி.பிக்கெதிரான இராணுவ நடவடிக்கையில் சிங்கள மக்கள் கொல்லப்படுவதற்கெதிராக மனித உரிமையை நிலை நாட்டக்கோரி மகிந்த ஐ.நா.செல்லலாம்.  அதனால் இலங்கையின் இறைமை,கீர்த்தி? பாதிக்கப்படாது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நேர்மையான நீதி விசாரணை வேண்டுமென கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஐ.நா.வுக்கும் வத்திக்கானுக்கும் சென்றால் இலங்கையின் காவல்துறை, நீதித்துறையின் கீர்த்தியும் இறைமையும் பாதிக்காது. தலைப்பிற்கும் இவற்றுக்கும் என்ன சம்பந்தம்? இலங்கையின் தேசிய கட்சித்தலைவர்கள்,சிங்கள மத தலைவர்கள் எல்லோரும் இலங்கையின் இறையாண்மையை பாதுகாக்க ,மனித உரிமைகளை பாதுகாக்க, நீதித்துறை, காவல்துறையின் நேர்மையான சேவையினை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டுமென்பதை காலத்துக்கு காலம் வலியுறுத்திக்கொண்டே வந்துள்ளனர்.

 

 
இங்கு அவர்கள் இலங்கை மக்கள் என்பதை மறைமுகமாக சிங்கள மக்கள் என்ற அர்த்தத்தையே வெளிப்படுத்தி வருகிறார்கள்.ஏனெனில் அவர்கள் விருப்பத்தில் இலங்கை ஓர் சிங்கள-பௌத்த நாடு. மேலும் இத்திட்டத்தை முழுமைப்படுத்த தடையாக இருக்கும் தமிழர்களையும் அவர்களது தொன்மையையும் அழிப்பதற்கெதிராக அவர்கள் ஐக்கிய நாடுகள் சபை,அதன் உறுப்பு நாடுகளுக்கு சென்றால் அது இறைமைக்கு அச்சுறுத்தல், நாட்டின் கீர்த்திக்கு பாதகம், ஆட்சியாளருக்கு அவமானம், தேசத்துரோகம் .எனவே அவர்கள் கைது செய்யப்படவேண்டுமென கூக்குரல்கள்.
FVDVJ-vXEAAEu4C-1024x683.jpg
இந்தப் பின்னணியின் புரிதலிலிருந்தே நிறுவனமயப்படுத்தப்பட்ட சிங்கள-பௌத்த ஆட்சியாளரின்  தமிழருக்கெதிரான கலாசார அழிப்பு நோக்கப்படவும் அதனை முற்றாக நிறுத்துவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவும் வேண்டும்.

 

ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு பிரிவுகளில் கலாசார படுகொலைக்கெதிரான ஆட்சியாளரின் செயற்பாடுகளை எடுத்து செல்லமுடியும்.1.யூனெஸ்கோ 2.மனித உரிமைகள் பேரவையில் மனித உரிமைகள் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள கலாசார உரிமைகள் தலைப்பின் கீழ் தனியாக கையாள முயற்சிக்கலாம்.அரசாங்கம் தனது படைகளையும் பிக்குகளையும் அகழ்வாராய்ச்சி திணைக்களத்தையும் பயன்படுத்தி அதீத அதிகாரத்தை வழங்கி வேகமாகவும் தொடர்ச்சியாகவும் இக்கலாசார அழிப்பை செயற்படுத்தும் போது தமிழ் தலைமைகள் ஒவ்வொன்றும் அவ்வப்போது சிறு குரல் எழுப்பிவிட்டு அடங்கிவிடுவதே வரலாறாக உள்ளது.

 

இலங்கையில் 83 பேருக்கு ஒரு படையினரும் வடக்கில் மட்டும் 5 பேருக்கு ஒரு படையினரும் என உலகில் மிக அதிகமான படையினரை கொண்ட நாடாக இலங்கை உள்ளது.இதற்கு உலகெங்கும் சொல்லப்படும் பொய்யான காரணம் தேசிய பாதுகாப்பு என்பதாகும். 2009 இல் புலிகள் மௌனிக்கப்பட்ட பின் வடக்கு கிழக்கில் ஒரு பட்டாசு கடை வெடித்ததில்லை.மாறாக ஒருபுறம் இராணுவத்தினரின் வன்குற்றங்களும் மறுபுறம் தென்னிலங்கையில் மாபியாக்களின் குற்றங்கள்,துப்பாக்கி சூடுகளுமே பதிவாகி வருகின்றன.
DWKjj-_UMAA4-7v.jpg
வடக்கு,கிழக்கில் தமிழர் நிலங்களை சிங்களவர்கள் கபளீகரம் செய்வதற்கு பாதுகாப்பு வழங்கல் ,சிங்கள மீனவர்கள் வடக்கு-கிழக்கு கடலில் தமிழர்களை அடக்கி மீன்பிடிக்க பாதுகாப்பு அளித்தல்,தமிழர்களின் புராதன சின்னங்களை அழித்து,மறைத்து புத்த கோவில்கள் கட்டுதல் ,விரும்பிய இடமெங்கும் புத்தர் சிலைகளை வைத்து பாதுகாப்பளித்தல் என வடக்கு-கிழக்கை சிங்கள பௌத்த மயமாக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் அவற்றுக்கு பாதுகாப்பளிப்பதற்குமே தேசிய பாதுகாப்பு என பெயரிடப்பட்டுள்ளது.

 

இதுபோன்றே இலங்கையின் அகழ்வாராய்ச்சி திணைக்களமானது தனது வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர்ந்து மக்களுக்கு அறிவுறுத்தி அவற்றை அவ்வாறே பாதுகாப்பது என்கிற கடமைக்கு மாறாக ரகசியமான முறையில் பிக்குகளையும் படையினரையும் பயன்படுத்தி சைவ-தமிழ் கலாசார மறப்புரிமைகளை மறைத்தும் திரிவுபடுத்தியும் பௌத்த மயமாக்கல் என்னும் வேலையே கீழ்த்தரமாக செய்துவருகிறது.

 

இவை இன அழிப்புடன் பின்னிப்பிணைந்த செயற்பாடுகளாகும்.தனியான தொடர்ச்சியான நிலப்பரப்பினை கொண்ட தனியான மொழி,கலாசார பண்பாடுகளை கொண்ட தமிழ் தேசிய இனத்தின் தொன்மைமிக்க வாழ்வியல் வரலாற்றை அழிப்பதனூடாக அவர்களின் தனித்துவம்,அடையாளத்தை அழித்து சிங்கள-பௌத்தத்திற்குள் கலந்து விடுவதன் மூலம் கலாசார படுகொலையீனூடாக இன அழிப்பு செய்யும் செயற்பாடே முன்னெடுக்கப்படுகிறது.

 

இவற்றை முழுமையாக தடுத்து நிறுத்தி தமிழர் தாயகத்தையும் தமிழ் மக்களின் தொன்மையையும் தனித்துவத்தையும் நிலைபேறாக பாதுகாக்க வேண்டியது அவசியமும் அவசரமுமான தேவையாகிறது.”வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடம்”என்பது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வொப்பந்தம் ஓர் சர்வதேச ஆவணமாகும்.இதனை இலங்கை அரசு ஒருதலைப்பட்சமாக மீறுதல் என்பது சர்வதேச ஒப்பந்தத்தை மீறும் செயலாகும்.இவ்விடயத்தில் இந்தியா தலையிடுவதற்கான சட்ட உரித்தும் தமிழ் மக்கள் சார்பில் இந்தியா கையெழுத்திட்டிருப்பதால் அதனை பாதுகாக்கும் தார்மீக பொறுப்பையும் இந்தியா கொண்டுள்ளது.

 

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் வடக்கு-கிழக்கை நிரந்தரமாக இணைப்பதை உத்தரவாதம் செய்யவேண்டிய பொறுப்பும் சட்ட உரித்தும் இந்தியாவுக்குண்டு.இந்தியா இதனை நிறைவேற்ற செய்யும் கடமை தமிழ் தலைமகளுக்குரியது.இந் நகர்வானது வடக்கு கிழக்கில் குறைந்தபட்ச அதிகாரமேனும் உள்ள ஆட்சிக்கு வழிவகுக்கும்.

 

கலாசார அழிப்பினூடாக இன அழிப்புத்திட்டம் தொடர்பில் தமிழ் தலைமைகள் நுண்ணறிவுடனும் ராஜதந்திர ரீதியிலும் சர்வதேச சமூகத்தின் ஆதரவை திரட்ட தொடர்ச்சியான முன்முயற்சிகள் எடுக்கவேண்டும்.தமிழ் தலைமை எப்போதுமே அரசின் அடக்குமுறைக்கு எதிர்ப்பை பதிவு செய்யும் (REACTIVE)அணுகுமுறையே மேற்கொள்கின்றனர்.மாறாக இவ் அடக்குமுறைகள் தொடர்பில் இலங்கை அரசின் கைகளை கட்டிப்போடும் வகையில் முன்னெடுப்புகள் (PROACTIVE) அணுகுமுறை கையாளப்படவேண்டும்.

 

சர்வதேச சமூகத்தை கையாளுதல் என்பது அவர்கள் இலங்கைக்கு வரும்போது சந்தித்து கதை சொல்லிவிட்டு வருவதாக அன்றி அனைத்து ஆதாரங்களும் திரட்டப்பட்டு வகைப்படுத்தப்பட்டு கலாசார உரிமைகளை பாதுகாக்க உலக அளவில் இயங்கும் ஐ.நா.மற்றும் அதனோடிணைந்த நிறுவனங்களுக்கு சமர்ப்பிப்பதும் சர்வதேச நடவடிக்கை நோக்கி நகர்த்துவதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டு செயற்படுத்தப்படவேண்டும்.
ஆதாரங்களை திரட்டுவதற்கும் வகைப்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் பொருத்தமான சர்வதேச தளங்களில் அவற்றை சமர்ப்பித்து நிலைபேறான தீர்வு காண செயற்படும் வகையில் ஓர் சர்வதேச தலைமையகம் செயற்படவேண்டும்.அது ஓர் உயர்ஸ்தானிகரகத்துக்குரிய தரத்துடன் செயற்படும் வகையில் அமைய வேண்டும்.

 

இவற்றுக்கு சமாந்தரமாகவும் விரைவாகவும் இந்திய-இலங்கை ஒப்பந்த அடிப்படையில் வட-கிழக்கு இணைப்பை உத்தரவாதப்படுத்துவதற்கு உரிய நகர்வுகளும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் நகர்வுகளும் மேற்கொள்ளப்படவேண்டும்.தேவை அறிவுபூர்வமான,சாமர்த்தியமான ராஜதந்திர நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதே.

Thinakkural.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.