Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலியாடுகள் ஆகும் மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலியாடுகள் ஆகும் மக்கள்

Published By: VISHNU

02 JUL, 2023 | 06:32 PM
image
 

(கார்வண்ணன்)

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அரசாங்கம், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் செலுத்துகின்ற கவனத்தில் ஒரு சிறு பகுதியைக் கூட, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் செலுத்தவில்லை.

கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், பசுமை காடுகள் பாதுகாப்புக்கும், இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என்று, பாரிஸில் நடந்த காலநிலை மாநாட்டில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உறுதியளித்திருந்தார்.

ஆனால், அவரது அரசாங்கம் வடக்கு, கிழக்கின் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் ஆபத்து குறித்து கவனத்தில் கொள்ளவேயில்லை.

வவுனியா மாவட்டத்தில் உள்ள நயினாமடுவில்,  சீனி தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்கு, தாய்லாந்தின் சூரெக் சுகர் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு, 200 ஹெக்டெயர் காணிகளை வழங்குவதற்கு, அமைச்சரவையில் அங்கீகாரம் பெற்றுக் கொடுத்திருக்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

வனப்பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமான சிறு பற்றைக்காடுகளைக் கொண்ட நிலத்தை, குறித்த தாய்லாந்து நிறுவனத்துக்கு நீண்டகால அடிப்படையில் குத்தகைக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்திருக்கிறது.

இங்கு 400 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்படவுள்ளது. இலங்கைக்கு ஆண்டு தோறும், ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மெற்றிக் தொன் சீனி தேவைப்படுகிறது. அதில் 20 சதவீதத்தை, நயினாமடு சீனித் தொழிற்சாலை மூலம் பெற்றுக் கொள்வது தான் அரசாங்கத்தின் திட்டம்.

400 மில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடு வரப் போகிறது, சீனி இறக்குமதிக்காக செலவிடப்படும், டொலரின் ஐந்தில் ஒரு பங்கு குறையப் போகிறது, உள்நாட்டில் தொழிலாளர்களுக் வேலை வாய்ப்புக் கிடைக்கப் போகிறது- இது அரசாங்கம் கூறப் போகின்ற ஆதாயப் பட்டியல்.

வயல்களாக இருந்த நிலங்கள், போருக்குப் பின்னர் பற்றைகளாக மாறிய போது, அவற்றையெல்லாம் பாதுகாக்கப்பட்ட வனங்களாக அறிவித்து காணிகளை அபகரித்தது வனவளத் திணைக்களம்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்றும், காடுகளை பாதுகாக்க வேண்டும் என்றும், தமிழர்களின் நிலங்களை அபகரித்த இந்த திணைக்களம் இப்போது, 200 ஹெக்டெயர் காடுகளை தாய்லாந்து நிறுவனத்துக்கு வழங்க இணங்கியிருக்கிறது.

இது சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லையா? கிட்டத்தட்ட 2 சதுர கிலோ மீற்றர் வரையான பற்றைக் காடுகள் இதனால் அழிக்கப்படும்.

இத்தோடு மட்டும் நிற்கப் போவதில்லை, இந்த திட்டம்.

இந்த சீனித் தொழிற்சாலைக்குத் தேவையான கரும்பு இங்கே தான் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் 30 ஆயிரம் ஹெக்டெயரில் கரும்பு பயிரிட்டு, சீனித் தொழிற்சாலையின் உற்பத்திக்கான மூலப்பொருளாக பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதில் விவசாயிகளை கூட்டுறவுச் சங்கங்களாக ஒருங்கிணைத்து 15 ஆயிரம் ஹெக்டெயரில் கரும்பு பயிரிடுவதற்கும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. எஞ்சிய 15 ஆயிரம் ஹெக்டெயர் கரும்பு உற்பத்தி தாய்லாந்து நிறுவனமே மேற்கொள்ளும்.

30 ஆயிரம் ஹெக்டெயர் நிலப்பரப்பு என்பது, கிட்டத்தட்ட 300 சதுர கிலோ மீற்றர் ஆகும்.

வவுனியா மாவட்டத்தின் மொத்த தரை நிலப்பரப்பே, 1861சதுர கிலோ மீற்றர்கள் தான்.

அவ்வாறாயின், மாவட்டத்தின் பரப்பளவில் ஆறில் ஒரு பங்கு, கரும்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்படும்.

கரும்பு, அதிகளவு நீர் தேவைப்படும் ஒரு பயிர். நீரை அதிகளவில் உறிஞ்சும் கரும்பை பெருமளவில் உற்பத்தி செய்வது வடக்கின் சுற்றுச் சூழல் பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சூழலியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பேராறுகள் ஓடாத வடக்கில் கரும்பை பயிரிடுவதால், வடக்கில் நீர் ஆதாரம் வரண்டு, பாலைவனமாக மாறும் ஆபத்து இருப்பதாக, எச்சரித்திருக்கிறார் சூழலியலாளரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன்.

இது மாத்திரம் பிரச்சினையாக இருக்கப் போவதில்லை, கரும்பு உற்பத்திக்காக காடுகள் அழிக்கப்படும். அல்லது ஏற்கனவே, நெல் பயிரிடப்படும் நிலங்கள் பயன்படுத்தப்படும்.

இந்த இரண்டுமே ஆபத்தானது தான். 

காடுகள் அழிக்கப்படுவதால், சுற்றாடல் பாதிப்புகள் ஏற்படும். நெல் பயிரிடும் பரப்பி்ன் அளவு குறையும் போது, மக்களின் உணவுக்காக பயன்படுத்தப்படும் அரிசியின் உற்பத்தி குறையும்.

வவுனியா வடக்கிலும் ,முல்லைத்தீவிலும் இன்னமும் பல தமிழர் பிரதேசங்கள் மீளக் குடியேறுவதற்காக விடுவிக்கப்படவில்லை.

அண்மையில் கூட தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் பகுதிகளில் மக்கள் மீளக் குடியேற அனுமதிக்கப்பட வேண்டும் என்று போராட்டம் நடததப்பட்டிருந்தது.

சிங்களக் குடியேற்றங்களாலும், இராணுவ அச்சுறுத்தல்களாவும், 1980களின் தொடக்கத்தில் துரத்தியடிக்கப்பட்ட தமிழ் மக்கள் இன்னமும் சொந்த இடங்களுக்குத் திரும்பவில்லை.

இவ்வாறான நிலையில், குறித்த பிரதேசங்களை அண்டிய காணிகள், கரும்புச் செய்கைக்காக வழங்கப்படுவது தமிழ் மக்களை பீதிக்குள்ளாக்கியிருக்கிறது.

இந்த திட்டத்தை தமிழ் அரசுக் கட்சி கடுமையாக எதிர்ப்பதாக கூறியிருக்கிறது. ஆனால் ரெலோ இதற்கு பின்கதவால், இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

வெளிநாட்டு முதலீடுகள் அவசியமானவை என்ற போதும்- அவை இங்குள்ள மக்களின் வாழ்வியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற ஆய்வுகள் எதுவும் இல்லாமல், வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிப்பது ஆபத்தானது.

அரசாங்கம் இந்த விடயங்களில் கண்மூடித்தனமாகச் செயற்படுகிறது அல்லது தமிழர்களின் நலன்களை பலியிடுகிறது.

இந்த விடயங்களில் தமிழ் அரசியல் தரப்புகளும் மக்களின் உண்மையான நலன்கள் விடயத்தில் அக்கறை செலுத்துவதாகத் தெரியவில்லை.

கடலட்டை விவகாரத்திலும் இதே சிக்கல் காணப்படுகிறது.

சீனாவின் பின்னணியில், கடலட்டை வளர்ப்புப் பண்ணைகளை உருவாக்கத் தொடங்கிய போது, அதற்கு எதிர்ப்புக் கிளம்பியது.

ஆனால், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உதவியுடன் எதிர்ப்புத் தெரிவித்த மீனவர்கள் பலரின் வாய் அடைக்கப்பட்டு அந்த திட்டம் மிக வேகமாக முன்னெடுக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் புற்றீசல்கள் போல கடலட்டைப் பண்ணைகள் பெருகி வருகின்றன.

கடலட்டையை இங்குள்ள மக்கள் உண்பதில்லை. ஆனால் அந்நிய செலாவணிக்காக அவற்றை இனப்பெருக்கம் செய்து வளர்ப்பதற்கு அதிகளவு ஊக்கம் அளிக்கப்படுகிறது.

யாழ்.குடாநாட்டைச் சுற்றியுள்ள கடற்கரைகள் எங்கும் கடலட்டைப் பண்ணைகள் முளைத்திருக்கின்றன. குறிப்பாக யாழ். குடாக்கடல் கடலட்டைப் பண்ணைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 

இதனால் கடநீரேரிப் பகுதியில் நீரோட்டங்கள் தடைப்பட்டு, ஏனைய மீன் இனங்களின் இனப்பெருக்கமும், நடமாட்டங்களும் குறைந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் பத்து ஆண்டுகளில் யாழ்ப்பாண குடாக்கடல் சேற்றுக்கடலாக மாறும் ஆபத்து இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் எச்சரித்திருக்கிறார் செயற்பாட்டாளரான இரேனியஸ் செல்வின்.

பாரம்பரிய முறையில் மீன்பிடிக்கும் மீனவர்கள் மாத்திரம் இதனால் பாதிக்கப்படமாட்டார்கள். அவர்களிடம் இருந்து உணவுக்காக மீனை பெற்றுக் கொள்ளும் மக்களுக்கும் போதிய மீன் கிடைக்காத நிலை ஏற்படும்.

அண்மையில் கடற்றொழிலாளர் அமைப்பு ஒன்றின் பிரதிநிதிகள், மீன் பெருக்கம் குறைந்ததே மீன்களின் விலை அதிகரிப்புக்குக் காரணம் என்று கூறியிருந்தனர்.

பல்வேறு சுற்றுச்சூழல் காரணிகளால் மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது. இது மக்களின் நாளாந்த வாழ்க்கையில் தாக்கம் செலுத்துகிறது.

வெளிநாட்டு நாணயத்தை உழைக்கும் நோக்கில் மீன்பிடி, விவசாய தொழில்துறைகளில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

இது உள்நாட்டு மக்களின் உணவுப் பழக்க வழக்கம் அவர்களின் போசாக்கு போன்றவற்றை பாதிக்கிறது.

இப்போது, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்காக அதிகளவு மீன்கள் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதால் சாதாரண மக்களுக்கு அவை கிடைப்பதில்லை. கழிவு மீன்கள் மட்டும் தான் உள்ளூர் சந்தைக்கு வருகிறது.

கடலட்டை ஏற்றுமதி திடீரென இடைநிறுத்தப்பட்டால், பண்ணைகளின் நிலை என்ன- சூழலில் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்ற கேள்விக்கு பதில் இல்லை.

கொரோனா காலத்தில் ஏற்றுமதிகள் முடங்கிய வரலாற்றுப் பாடம் கண் முன் இருக்கிறது.

மக்களால் உண்ண முடியாத கடலட்டையை வைத்துக் கொண்டு எதையும் செய்ய முடியாமல் போகும்.

கரும்புச் செய்கைக்கு அதிகளவு நீரை செலவிடும் போது நெற்செய்கை பாதிக்கப்படும். உள்ளூரில் அரிசிக்கான தட்டுப்பாட்டை தோன்றுவிக்கும்.

 

ஆக வடக்கு, கிழக்கில் மாத்திரமன்றி ஏனைய பகுதிகளிலும் கூட ஏற்றுமதியை நோக்கிய பொருளாதார முதலீடுகளுக்கு திட்டமிடப்படும் போது தனியே டொலர் வருவாய் மட்டும் கணக்கிடப்படுகிறதே தவிர, உள்ளூரில் மக்களின் வாழ்வியலில் ஏற்படக் கூடிய பாதிப்பு கருத்தில் கொள்ளப்படுவதில்லை. அரசாங்கத்தின் இந்த பொறுப்பின்மைக்கு மக்களே பலியாடுகள் ஆக்கப்படுகின்றனர்.

பலியாடுகள் ஆகும் மக்கள் | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.