Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘தமிழக பல்கலைக்கழகங்கள் மிக மோசமான நிலையில் உள்ளன’ – ஆளுநர் சொல்வது சரியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
‘தமிழக பல்கலைக்கழகங்கள் மிக மோசமான நிலையில் உள்ளன’ – ஆளுநர் சொல்வது சரியா?

பட மூலாதாரம்,TNDIPR

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 6 ஜூலை 2023, 03:07 GMT

தமிழக பல்கலைக்கழங்களில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும் பல பல்கலைக்கழங்களுக்கு துணை வேந்தர்களும் பதிவாளர்களும் நியமிக்கப்படாமல் இருப்பதாகவும் ஆளுநர் ஆர்.வி. நடத்திய துணைவேந்தர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின் நிலை உண்மையில் எப்படியிருக்கிறது?

ஜூலை 4ஆம் தேதியன்று தமிழக பல்கலைக்கழகங்களில் உள்ள ஆட்சி மன்றக் குழு, கல்வி மன்றக் குழுவின் உறுப்பினர்களுடன், குறிப்பாக இந்தக் குழுக்களில் ஆளுநர்களால் நியமிக்கப்பட்டவர்களுடன் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழக பல்கலைக்கழகங்கள் மிக மோசமான நிலையில் இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.

பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி தன்மை மெல்லமெல்ல அழிந்துவருவதாக இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்ததாக அந்த செய்திக் குறிப்பு கூறுகிறது.

 

ஆளுநர் மாளிகை அறிக்கை சொல்லும் குற்றச்சாட்டுகள் என்ன?

"ஆட்சி மன்றக் குழு, கல்வி மன்றக் குழுக் கூட்டங்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உரிய காலகட்டத்தில் நடக்க வேண்டும். அப்போதுதான், உறுப்பினர்கள் தங்கள் ஆலோசனைகளை முன்வைக்க முடியும். ஆனால், அரசுச் செயலர் அங்கு வரமுடியாத காரணத்தால், இந்தக் கூட்டங்கள் அங்கு நடப்பதில்லை. பல தருணங்களில் பல்கலைக்கழகங்களுக்குப் பதிலாக, தலைமைச் செயலகத்தில் இந்தக் கூட்டங்கள் நடக்கின்றன.

 

பல பல்கலைக்கழகங்களில் பதிவாளர்களோ, தேர்வுக் கட்டுப்பாட்டாளர்களோ நிரந்தரமாக நியமிக்கப்படாமல், தற்காலிகமாக அந்தப் பொறுப்பு யாருக்காவது வழங்கப்பட்டு, பணிகள் நடக்கின்றன.

பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் பல காலியாகக் கிடக்கின்றன. வெளிப்படைத் தன்மையுடன் தகுதியானவர்களை இந்தப் பணியிடங்களில் அமர்த்த வேண்டும்.

பல பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் இல்லாதது அவற்றின் பணிகளைப் பாதிக்கிறது. விரைவிலேயே தேடுதல் கமிட்டியை அமைக்க வேண்டுமென மாநில அரசிடம் சொல்லப்பட்டிருக்கிறது" ஆகிய குறைகளும் ஆளுநர் மாளிகை வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் உண்மையான நிலவரம் என்ன?

துணை வேந்தர்கள்

பட மூலாதாரம்,RAJ BHAVAN

 
படக்குறிப்பு,

இதற்குமுன்னும் ஆளுநர் நடத்திய துணைவேந்தர்கள் கூட்டம் சர்ச்சைக்கு உள்ளானது

தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பெண்கள் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் என 13 பல்கலைக்கழகங்கள் உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கிவருகின்றன.

இது தவிர விவசாயப் பல்கலைக்கழகங்கள், மருத்துவப் பல்கலைக்கழங்கள், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகங்கள், இசை பல்கலைக்கழகம், விளையாட்டிற்கான பல்கலைக்கழகம் என 21 பல்கலைக்கழங்கள் தமிழ்நாட்டில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவருகின்றன.

இந்த 21 பல்கலைக்கழங்களில் உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கிவரும் பல்கலைக்கழங்கள் பலவற்றிலும் ஆளுநர் சொல்வதைப் போலவே முக்கிய பதவிகள் தற்காலிகமாகவே நிரப்பப்பட்டு, நிர்வாகம் நடந்து வருகிறது.

ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலும் உள்ள தகவல்களின்படி பார்த்தால், பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பதவிகள் தற்காலிகமாகவே நிரப்பப்பட்டுள்ளன.

சென்னை பல்கலைக்கழகத்திலும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திலும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பொறுப்புகளுக்கு தற்காலிகமாக ஒரு பேராசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல அண்ணா பல்கலைக்கழத்திற்கு பதிவாளர், கூடுதல் பதிவாளர் ஆகிய பதவிகளில் 'பொறுப்பு' என்ற பெயரில் தற்காலிகமாகவே ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் இல்லாமல், துணைவேந்தர் கமிட்டி அமைக்கப்பட்டு உயர் கல்வித் துறை செயலர் உள்ளிட்டோர் அந்த வேலையைச் செய்து வருகின்றனர். இங்கேயும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர், பதிவாளர் ஆகிய பொறுப்புகளில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர்களே செயல்பட்டு வருகின்றனர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பொறுப்புப் பதிவாளரே நியமிக்கப்பட்டுள்ளனர். அழகப்பா பல்கலைக்கழகத்திலும் பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பொறுப்புகளில் தற்காலிகமாகவே ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் பொறுப்பு தேர்வு கட்டுப்பாட்டாளர்களே இயங்கி வருகின்றனர்.

 

"Inchargeஆக நியமிக்கப்படுபவர்கள் முழுமனதுடன் செயல்பட முடியாது"

தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறையில் பல பிரச்சனைகள் இருப்பதாகச் சொல்கிறார் உயர்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில அமைப்பாளரான இரா. முரளி.

"தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையைப் பற்றி யாரும் கவலையேபடுவதில்லை. இதில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையில் எங்களைப் பொறுத்தவரை வித்தியாசமே இல்லை. இப்போதுதான் இந்தப் பிரச்சனை இருப்பது எல்லோருக்கும் தெரிகிறதா?

பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டாளர் பதவிகளுக்கு ஆட்களை தேர்வுசெய்து நியமிக்காததால், பல பிரச்சனைகள் ஏற்படும். அவர்கள் ஏற்கனவே ஒரு துறையில் ஆசிரியராகப் பணியாற்றிவருவார்கள் என்பதால், அந்த வேலைப் பளுவோடு இந்த வேலையையும் சேர்ந்து பார்க்க வேண்டியிருக்கும். தவிர, தற்காலிகப் பதவி என்பதால் முழுமனதோடு ஒரு வேலையைச் செய்ய மாட்டார்கள். தேர்வு செய்து 3 ஆண்டுகளுக்கு நியமித்தால் அவர்களுக்கு என பொறுப்பு இருக்கும்.

தவிர, இப்படி incharge என நியமிக்கும்போது முறைப்படி தேர்வு செய்து நியமிப்பதில்லை. தங்களுக்கு வேண்டியவர்களை அந்தப் பொறுப்பில் inchargeஆக நியமித்துவிடுவார்கள். அதனால், அவர் தன்னை நியமித்தவருக்கே விசுவாசமாக இருப்பார்கள். 3 வருடங்களுக்கெல்லாம் incharge பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டாளரை நியமிக்கிறார்கள். இது எப்படி சரியாக இருக்கும்? அரசு நினைத்தால் ஒரு வாரத்திற்குள் இதையெல்லாம் சரிசெய்ய முடியும்" என்கிறார் உயர்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில அமைப்பாளரான இரா. முரளி.

மாநிலம் முழுவதும் காலியாக உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரந்தரமாக நிரப்ப வேண்டுமென்கிறார் அவர். ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமித்து, மிகக் குறைவான சம்பளம் வழங்கப்படுவது சரியல்ல என்கிறார் இரா. முரளி. "தற்காலிக ஆசிரியர்கள் 25,000 ரூபாய் சம்பளமாக பெறும்போது, நிரந்தர ஆசிரியர்கள் ஒன்றரை லட்சம் சம்பளமாக பெறுகிறார்கள். இந்த ஏற்றத்தாழ்வை சரிசெய்ய வேண்டும்" என்கிறார் அவர்.

கடந்த பல ஆண்டுகளாக கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்கள் நியமனம் நடப்பது முறையாக இல்லை என்று சொல்லும் அவர், அதில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். கடந்த பத்தாண்டுகளாக நடந்த நியமனங்கள் அனைத்தையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்கிறார் முரளி.

"தமிழக உயர்கல்வி நிலையங்கள் சிறப்பாகவே செயல்படுகின்றன"

ராமசாமி

பட மூலாதாரம்,TNAU

 
படக்குறிப்பு,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும் கற்பகம் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ராமசாமி

இத்தனை பிரச்னைகளைச் சுட்டிக்காட்டும் ஆளுநர், அவரே அவற்றைச் சரிசெய்யலாமே என்கிறார் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும் கற்பகம் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ராமசாமி.

"செனட், சிண்டிகேட் ஆகியவற்றில் ஆளுநரால் நியமிக்கப்பட்டவர்கள் ஆறு பேர் இருப்பார்கள். இந்தக் கூட்டங்கள் சரியாக நடக்கவில்லையென நினைத்தால், வேந்தர் என்ற அடிப்படையில் அவரே அவற்றை நடத்தலாமே. யார் தடுத்தது? அவர் நடத்தினால் செயலர்கள் வரமாட்டோம் என்று சொல்லிவிடுவார்களா?

தவிர, துணை வேந்தர் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்; இல்லாவிட்டால் எல்லாம் மோசமாகிவிடும் என்ற கருத்தை ஏற்க முடியாது. ஏனென்றால், துணைவேந்தர் மட்டும்தானே புதிதாக வருகிறார். மற்ற பேராசிரியர்கள், டீன், ஆசிரியரல்லாத பணியாளர்கள் எல்லாம் ஏற்கனவே அங்கேயே இருப்பவர்கள்தானே? ஒரு மோசமான துணைவேந்தர் வந்தால், ஏற்கனவே உள்ள நல்ல நிலையை மோசமாக்கிவிட மற்றவர்கள் ஒப்புக்கொள்வார்களா?" என்று கேள்வி எழுப்புகிறார் ராமசாமி.

மேலும், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டாளர் போன்ற பதவிகளை நிரந்தரமாக நிரப்பாததற்கு வேறு சில காரணங்களும் இருக்கலாம் என்கிறார் ராமசாமி.

"இது போன்ற பதவிகளை நிரந்தரமாக நிரப்புவது தொடர்பாக வழக்குகள் இருக்கலாம். பத்தாண்டுகளுக்கும் மேலாக அந்த வழக்கு நடந்துகொண்டிருக்கும். பல பல்கலைக்கழகங்கள் இதுபோன்ற வழக்குகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அப்படியான சூழலில்தான் பொறுப்புப் பதிவாளர் நியமிக்கப்படுகிறார்.

இப்படி பொறுப்பு பதிவாளரை நியமிப்பதால் எந்த கெட்டுவிட்டது? தேர்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. பட்டங்கள் வழங்கப்பட்டுக்கொண்டுதானே இருக்கின்றன? தரம் மோசமடைந்துவிட்டது என்று சொல்வதை ஏற்க முடியாது. எப்போதுமே தரம் என்பதை, மற்றொன்றுடன் ஒப்பிட்டுத்தான் சொல்ல வேண்டும். அப்படிப் பார்த்தால், தமிழ்நாடு சிறப்பாகவே செயல்படுகிறது.

இத்தனைக்கும் மத்திய அரசு பல்கலைக்கழகங்களுக்கான நிதியைப் பெரிய அளவில் குறைத்துவிட்டது. கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் எந்த பல்கலைக்கழகத்திற்கும் Center of Excellence கொடுக்கவில்லை. மத்திய அரசின் எந்தக் கமிட்டியிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர்கள் இல்லை.

இவ்வளவையும் மீறி, தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரிகளும் பல்கலைக்கழங்களும் சிறப்பாக செயல்படுகின்றன. தேசிய தரப்பட்டியலில் 100ல் 33 கல்வி நிலையங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவை. அப்படியானால், உயர்கல்வி மோசம் என எப்படிச் சொல்வீர்கள்?" என்கிறார் ராமசாமி.

தமிழ்நாட்டில் அரசுக்குச் சொந்தமான பல்கலைக்கழகங்கள் தவிர, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் 30 தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் இயங்கிவருகின்றன. இதுதவிர, திருவாரூர் பல்கலைக்கழகம் போன்ற மத்திய அரசின் பல்கலைக்கழகங்களும் இயங்கி வருகின்றன.

https://www.bbc.com/tamil/articles/cnk1k1v5n92o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.