Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெண் இல்லை என்றால்……

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG-4207.jpg

நீதிமன்றம் அமைதியாக இருந்தது. கமராக்களின் கிளிக் கிளிக் சத்தங்களுடன் காலில் மாட்டப்பட்டிருந்த சங்கிலியின் சத்தம் மட்டும் இப்போது மன்றில் கேட்கத் தொடங்கியது. தனது முகத்தை நீல நிறக் கோப்பினால் மூடியபடி, குற்றவாளி என்று கருதப்பட்டவன் தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்தான். சிவப்பு நிற உடை அணிந்திருந்த சிறிய தோற்றம் கொண்ட அந்த இளைஞனை புகைப்படம் எடுப்பவர்கள் சூழ்ந்திருந்தனர். அவனருகே அவனது சட்டத்தரணி அமர்ந்திருந்தார். நீதிமன்றத்தின் இருக்கைகள் நிரம்பி

இருந்தன. அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் நிருபர்களாக இருந்தார்கள் என்பதைச் சொல்லும் விதமாக பலரது கைகளில் கணினிகள் இருந்தன. யேர்மனி இல்லர்கியார்ஸ் நகரில் நடந்த கொலையின் தீர்ப்பை அறிந்து கொள்ளவே அவர்கள் வந்திருந்தார்கள்.

ஒருமாத காலமாக நடந்த வழக்கின் முடிவு  அறிவிக்கப்பட இருப்பதால் பல யேர்மனியர்களின் கவனம் இந்த வழக்கின் மேலே இருந்தது. எரித்திரியா நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து யேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரிய 27 வயதான இளைஞன் 2022ந் திகதி மார்கழி மாதம்  5ந் திகதி பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த மாணவிகள் இருவரை கத்தியால் தாக்கி அதில் ஏஸ் என்ற மாணவியைக் கொலை செய்ததுதான் வழக்கு

எழுந்து நின்ற பார்வையாளர்கள் மத்தியில்  நீதிபதி வொல்ப்கங் தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர் தனது நாட்டுக்குச் சென்று ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய விரும்பி இருந்தார். ஆனால் அவருக்கான அனுமதியை வெளிநாட்டவர்களுக்கான அலுவலகம் வழங்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் விரக்தியினால் கார்த்திகை 2022இல் இருந்து வேலைக்குச் செல்லவில்லை. அவர் மற்றவர்களுடன் உரையாடியது மற்றும் அவரது தனது அறையில் சுவர்களில் அவர் எழுதிய வாசகங்களான, “ பெண் இல்லை எனில் வாழ்வு இல்லை”, “யேர்மனியர்கள் ஊத்தையானவர்கள்”,

தண்டனைபோன்ற வாசகங்கள் பழிவாங்கும் அவரது எண்ணத்தை வெளிப்படுத்துகின்றன. சம்பவம் நடந்த அன்று, வெளிநாட்டவர் அலுவலகத்துக்குச் சென்று அங்குள்ள ஊழியர்களை கத்தியால் குத்துவதுதான் அவரது எண்ணம் என்றும் வழியில் இரண்டு மாணவிகளை கண்டதும் தனது முடிவை மாற்றி  அவர்களைத் தாக்கியதாகவும் விசாரணைகளில் தெளிவாகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் மாணவிகளை இடைமறித்து அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு கத்தியை எடுத்து தாக்கியிருக்கிறார். முதலில் தாக்குதலுக்குள்ளான மாணவி(13)ஓட ஆரம்பிக்க, திகைத்து நின்ற ஏஸின்(14) மேல் அவர் தாக்குதலை ஆரம்பித்திருக்கிறார்.குறைந்தது 19 தடவைகள் அவர் ஏஸை கத்தியால் குத்தி இருக்கிறார்கத்தியால் குத்தப்பபட்ட ஏஸ் இறந்திருக்கிறார். கொலையையும் கொலைக்கான முயற்சியையும் தற்செயலானதாகக் கருத இங்கு இடமில்லை. ஒரு பழிவாங்கும் நிலையும் கொலைக்கான திட்டமிடலும் உறுதி செய்யப் பட்டிருப்பதால் குற்றம் செய்தவருக்கு இடை நிறுத்தம் செய்ய முடியாத ஆயுள் தண்டனை வழங்கப் படுகிறது

நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை யேர்மனியர் பலர் வரவேற்று இருக்கிறார்கள்.

யேர்மனியில் ஆயுள் தண்டனை என்பது 15 வருடங்கள் அளவில் வரும். தீர்ப்பின்படி எந்தக் காரணம் கொண்டும் இடையில் அவன் விடுதலை செய்யப்படுவது சாத்தியமில்லை. தண்டனைக் காலம் முடிந்த பின்னும் அவனுக்கான மருத்துவச் சான்றிதழ் வழங்கப் பட்டால் மட்டுமே அவனால் வெளியே வரமுடியும். ஆனால் அப்படி விடுதலையானால் அவன் நாடு கடத்தப் படுவானா என்பது பற்றிய தெளிவும் இல்லை.

“பெண் இல்லை எனில் வாழ்வு இல்லைஎன்றவன் எப்படி 15 வருடங்களை சிறையில் கழிக்கப் போகிறான் என்பது கேள்வி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.