Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சென்னை- யாழ்ப்பாணத்திற்கு தினசரி விமான சேவைகளை முன்னெடுக்க தீர்மானம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 

alliance-air-jaffna-to-chennai.jpg

 

தமிழகத்தின் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தினசரி நேரடி விமான சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் தினத்தந்தி நாளிதழ் செய்தி வௌியிட்டுள்ளது.

இந்தியாவின் அலையன்ஸ் எயார் (Alliance Air) நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கான நேரடி விமான சேவைகளை ஆரம்பித்திருந்தது.

எனினும், கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்னை – யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் விமான சேவைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கமைய, 2022 டிசம்பர் 12 ஆம் திகதி முதல் சென்னை – யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவைகளை இந்தியாவின் அலையன்ஸ் எயார் நிறுவனம் மீள ஆரம்பித்தது. திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய நான்கு நாட்கள் மாத்திரம் இந்த விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த விமான சேவைக்கு இந்தியாவில் பெருமளவில் வரவேற்பு கிடைத்த நிலையில், சென்னை – யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவைகளை தினசரி முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கமைய, எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் சென்னை – யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவைகளை தினசரி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் தினத்தந்தி நாளிதழ் செய்தி வௌியிட்டுள்ளது.

அதன்படி, குறித்த விமான சேவை தினமும் காலை 9.35 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தை சென்றடையும். பின்னர் பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1.25க்கு சென்னை சென்று சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/261964

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரிதான்.

இந்த புலம்பெயர் தமில்ஸ், புலம்பாம வரனும் எண்டால், லக்கேய் அலவண்ஸ் கூட்டோணும்.

இல்லாட்டி, நிமால் சீறிபால கட்டநாயக்காவில் இருந்து, பலாலிக்கு பிளேன் விட்டுடுவார், வலுகெதியா!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை – யாழ் விமான சேவையை தினமும் முன்னெடுக்க நடவடிக்கை ; இந்திய உயர்ஸ்தானிகர்

08 JUL, 2023 | 10:45 AM
image
 

(எம்.மனோசித்ரா)

இலங்கையின் அபிவிருத்தியில் சகல வழிகளிலும் இந்தியா முக்கிய பங்காளியாக இருக்கும். அந்த வகையில் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான விமான சேவையை தினமும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

இந்தியாவின் பிரபல பயண முகவர் நிறுவனமான இந்திய பயண முகவர் சங்கத்தின் 67ஆவது மாநாடு வியாழக்கிழமை (06) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

இலங்கையின் அபிவிருத்தியில் இந்தியாவும் , இந்திய மக்களும் சகல வழிகளிலும் பங்காளிகளாக இருப்பர். இந்திய பயண முகவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடானது இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாக அமையும் என்று நம்புகின்றேன். 

மதம் , கலாசாரம் , ஜனநாயகம் , மொழி என பல்வேறு துறைகளில் இலங்கை மற்றும் இந்தியா ஒருமித்த பண்புகளைக் கொண்ட நாடுகளாகக் காணப்படுகின்றன.

இவ்வாறான மாநாடுகள் , சுற்றுலாக்களின் மூலம் பெருமளவான இந்தியர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதன் ஊடாக மேற்கூறப்பட்ட காரணிகளின் முக்கியத்துவத்தை உணர முடியும் என்பதோடு , அவற்றை மேலும் மேம்படுத்திக் கொள்ளவும் முடியும்.

இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை வலுப்படுத்த இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகள் பாராட்டத்தக்கன.

கடந்த 5 மாதங்களாக யாழ்ப்பாணம் மற்றும் சென்னைக்கிடையில் வாரத்துக்கு 4 விமானங்கள் இருவழி பயண சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

குறித்த விமான சேவையை எதிர்வரும் 16ஆம் திகதி முதல் தினமும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு இந்தியா அதிகளவான ஒத்துழைப்புக்களை வழங்குவதன் ஊடாக , ஏனைய நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்கான வாய்ப்பும் ஏற்படும்.

அது மாத்திரமின்றி இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்புக்கள் டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக மேம்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் இந்திய பயண முகவர் சங்கத்தினால் இவ்வாறானதொரு மாநாட்டை ஒருங்கமைத்தமைக்கு மீண்டும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

https://www.virakesari.lk/article/159492

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிற்றுக்கிழமை முதல் யாழிலிருந்து சென்னைக்கு தினமும் விமான சேவைகள் - இந்திய மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்

Published By: VISHNU

10 JUL, 2023 | 12:17 PM
image
 

(எம்.மனோசித்ரா)

யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைகள் எதிர்வரும் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் தினமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக இந்திய மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற இந்திய பயண முகவர் சங்கத்தின் 67ஆவது மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் வெளியிட்டிருந்த செய்திலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சென்னைக்கும் இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவை வாரத்திற்கு நான்கு முறையிலிருந்து தினசரி சேவைகளாக ஜூலை 16 முதல் அதிகரிக்கப்படவுள்ளன. இந்த தினசரி விமான சேவைகளை முன்னெடுப்பதானது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகளை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது உரையில், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான கலாச்சார மற்றும் வர்த்தக உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.

வர்த்தகம், உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்களால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான கலாச்சார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் எடுத்துக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையுடனான எமது கூட்டாண்மையானது, இத்துறையில் குறுகிய கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பல சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும், உலகளாவிய விமான போக்குவரத்து சுற்றுச்சூழலில் அதிகாரம் மற்றும் செல்வாக்கின் முக்கிய அணுகலாக மாறுவதற்கும் ஒரு அரிய வாய்ப்பை வழங்குவதாக  நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்தியாவிலிருந்து கொழும்புக்கு 16 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்திய பயண முகவர் சங்கத்தின் மாநாடு, 18 வருட இடைவெளிக்குப் பின், இலங்கையின் தலைநகர் கொழும்பில் ஜூலை 6 முதல் 9 வரை, இந்தியாவில் இருந்து முதன்மையாக 700 பங்கேற்பாளர்களுடன் நடைபெற்றுள்ளது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று தொடர்பு, இந்த மாநாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது.  இம்மாநாட்டை முதலில் கொழும்பில் ஏப்ரல் 19 முதல் 22 வரை நடத்த திட்டமிடப்பட்டது. எனினும் இலங்கையில் நிலவிய பதற்றமான சூழல் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால் இன்று, இலங்கை அதன் மறுமலர்ச்சிப் பாதையில் இருப்பதால், பிராந்திய சுற்றுலா வலையமைப்பை மேம்படுத்துவதற்காக மாநாடு கடந்த வருடம் திட்டமிட்டபடி இவ்வருடம் இடம்பெற்றுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://www.virakesari.lk/article/159646

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.