Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களவாடிய நாட்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG-4219.jpg
பழைய திரைப்படங்கள்
அதுவும் குறிப்பாக எம்ஜிஆரின் திரைப்படங்களைப் பார்த்தால், நாயகன் 100 வீதம் நல்லவனாக இருப்பான். வில்லன் செய்த சதியால் வீண்பழி சுமந்து அவன் சிறைக்குப் போவான். படத்தில், “ஓடி வந்து மீட்பதற்கு உண்மைக்கோ கால்கள் இல்லை ஓய்ந்திருந்து கேட்பதற்கு நீதிக்கோ நேரம் இல்லை பார்த்த நிலை சொல்வதற்கு பரமனுக்கோ உருவம் இல்லை பழி சுமந்து செல்வதன்றி இவனுக்கோ பாதை இல்லை..” போன்ற சீர்காழியார் பாடும்கணீர்பாடல்களும் இருக்கும். பின்னர் நாயகன் சுற்றவாளி என நிரூபணமாகி, விடுதலையாகி, “தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும்என்று கதை முடியும்.

யேர்மனியில், கடந்த வெள்ளிக்கிழமை(07.07.2023) ஒரு வழக்கில் கிடைத்த தீர்ப்பு எனக்கு இப்படியான பழைய திரைப்படங்களை நினைவூட்டியது.

காலை பத்துமணி, யேர்மனி மூனிச் நகரத்தில்  A-101ம் இலக்க நீதிமன்ற மண்டபத்தில் பெண் நீதிபதி எலிசபெத் ஏர்ல் அவர்களின் தீர்ப்புக்காக, பார்வையாளர்கள் காத்திருந்தார்கள்

2008இல்விதவையான  87 வயதான லீசலொற்றே கோர்ரூமை குளியலறைத் தொட்டித் தண்ணிக்குள் அமுக்கி கொலை செய்ததற்காக மன்பிரட் ஹென்டிற்ஸ்கிக்கு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை கிடைத்திருந்தது. மன்பிரட் ஹென்டிற்ஸ்கி குடியிருப்புகளின் மேற்பார்வையாளராக வேலை செய்து கொண்டிருந்தவர். தனித்து வாழ்ந்து கொண்டிருந்த லீசலொற்றே கோர்ரூமை பராமரிக்கும் பகுதி நேர வேலையையும் தனிப்பட்ட முறையில் அவர் செய்து கொண்டிருந்தார்

 28.10.2008 அன்று மருத்துவப் பரிசோதனை முடிந்த பின்னர் லீசலொற்றே கோர்ரூமை வீட்டுக்கு அழைத்து வந்த மன்பிரட்ஹென்டிற்ஸ்கி, அவரது பணத்தைக் கையாட முயன்றிருக்கிறார். இதனால் ஏற்பட்ட தகராறில்  லீசலொற்றே கோர்ரூமை தண்ணீர்த் தொட்டிக்குள் அமுக்கி கொன்றிருக்கிறார். இப்படி அப்பொழுதுகுளியலறைத் தொட்டிக் கொலைஎன பிரபலமாக பேசப்பட்ட வழக்கில் மன்பிரட் ஹென்டிற்ஸ்கிக்கு ஆயுள் தண்டனை கிடைத்ததுதீர்ப்புக் கிடைத்த நாள் முதலாக மன்பிரட் ஹென்டிற்ஸ்கி, தான் கொலை செய்யவில்லை தன்னை விடுதலை செய்ய வேண்டும்  என தனது சட்டத்தரணி மூலம் நீதிமன்றத்துக்கு கோரிக்கை விடுத்து வந்திருந்தார்.

மன்பிரட் ஹென்டிற்ஸ்கியின் பல வருட கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், கொலை பற்றி ஆய்வு செய்ய வல்லுனர்களைக் கேட்டுக் கொண்டது.

மருத்துவமனையில் இருந்து லீசலொற்றே கோர்ரூமை அழைத்து வந்து வீட்டில் சேர்த்து விட்டு மன்பிரட் ஹென்டிற்ஸ்கி போய்விட்டார். அதன் பின்னர் லீசலொற்றே கோர்ரூம் குளியலறைக்குள் போயிருக்கிறார் அவர் பல தடவைகள் நிலை தவறி வீழ்ந்திருக்கிறார் என்பது அவரது மருத்துவ அறிக்கையில் இருக்கிறது. அன்று தண்ணீர் நிரம்பிய தொட்டியில் ஆடையை  கழுவ குனியும் போது அடிக்கடி அவருக்கு வரும் நிலை தடுமாற்றம் அப்பொழுது அவருக்கு வந்திருக்கிறது. தலை தண்ணீருக்குள் முதலில் விழும் வகையில் அவர் தொட்டிக்குள் சரிந்திருக்கிறார். அவரால் எழுந்து கொள்ளக் கூடிய அளவுக்கு பிடிமானங்களோ அவரிடம் பலமோ இல்லாததால் தண்ணீருக்குள் மூழ்கி அவர் இறந்திருக்கிறார்மன்பிரட் ஹென்டிற்ஸ்கி, லீசலொற்றே கோர்ரூமை வீட்டில் விட்டுப் போன இரண்டு மணித்தியாலங்கள் கழித்தே அவர் இறந்துள்ளதாக தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்ட வெப்பநிலையில் இருந்து நிரூபணமாகி இருக்கிறதுஎன வல்லுனர்கள் தங்கள் முடிவை நீதிமன்றத்தில் சமர்பித்தார்கள்

மன்பிரட் கேட்டுக் கொண்ட கோரிக்கையின் அடிப்படையில் நடந்த விசாரணையின் முடிவை  07.07.2023 வெள்ளிக்கிழமை நீதிபதி  காலை10.02க்கு அறிவிக்கத் தொடங்கினார்.

“மன்பிரட் ஹென்டிற்ஸ்கி இந்தக் கொலையைச் செய்யவில்ல என்பது உறுதியாகிறது. எனவே அவர் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளித்து விடுவிக்கப்படுகிறார்

மன்பிரட் ஹென்டிற்ஸ்கியின் 13 வருடங்கள் களவாடப் பட்டிருக்கின்றன. அந்த வருடங்கள் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டிருக்கின்றன. அவர் தனது குடும்பத்தைக் காண வாய்ப்பிருக்கவில்லை. சிறுவர்களாயிருந்த தனது குழந்தைகளைப் பராமரித்து வளர்க்கவோ, தனது வேலையைச் செய்யவோ, உறவினர் நண்பர்களைச் சந்திக்கவோ . அவரால் முடியாதிருந்திருக்கிறது. அவரது இந்த இழப்புக்கள் எதுவுமே ஈடு செய்ய முடியாதவை

ஆனாலும் அவருக்கு இழப்பீடாக நாளொன்றுக்கு 75 யூரோப்படி 4915 நாட்களுக்கு 370,000 யூரோக்கள் நீதி மன்றத்தால் வழங்கப்பட வேண்டும்

நீதி மன்றத்தின் வெளியே, நண்பர்கள் உறவினர்கள் அவர் நலன் விரும்பிகள் எனப் பலர் மத்தியில் கண்கள் கலங்கிய நிலையில்  மன்பிரட் ஹென்டிற்ஸ்கி நின்றிருந்தார். பெரிய பூங்கொத்தோடு தன்னைக் காண வந்த தனது மனைவி மரியாவை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டார்.

“தேடியும் கிடைக்காது நீதி தெருவினில் இருக்காது

சாட்டைக்கு அடங்காது நீதி சட்டத்தில் மயங்காது

காலத்தில் தோன்றி கைகளை நீட்டிக் காக்கவும் தயங்காது…”

 

 

Edited by Kavi arunasalam
எழுத்துப் பிழை

  • கருத்துக்கள உறவுகள்

 பாசம் நெஞ்சில் மோதும்

அந்த பாதையை பேதங்கள் மூடும்
உறவை எண்ணி சிரிக்கின்றேன்
உரிமையில்லாமல் அழுகின்றேன்.....!

 

எனக்கு இந்தப் பாடல்தான் நினைவுக்கு வந்தது......!  😁

 

  • கருத்துக்கள உறவுகள்

இதனை வானொலியிற் செவிமடுத்தபோது யேர்மனியிலே இவளவு தொழில்நுட்பவாய்ப்புகளிருந்தும் இப்படியா, மூன்றாம் மண்டல நாடுகள்போல் நடந்துள்ளார்களே என்று எண்ணியவாறு யாழில் பகிரவேண்டும் என்று எண்ணினேன். சிறப்பாக அதனைச் செய்துள்ள கவி.அருணாசலம் அவர்களுக்கு நன்றி. 

990_0008_806451_dcb1305f_a47c_4616_83a0_98eb4c75a9e2-scaled.jpg

படஉதவி: ovb-heimatzeitungen.de      
நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, Kavi arunasalam said:

“தேடியும் கிடைக்காது நீதி தெருவினில் இருக்காது

சாட்டைக்கு அடங்காது நீதி சட்டத்தில் மயங்காது

காலத்தில் தோன்றி கைகளை நீட்டிக் காக்கவும் தயங்காது…”

இதைத்தான் விதி என்பது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.