Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வீணடிக்கப்படும் இரணைமடுக் குளத்தின் நீர் : அதிகாரிகள் அசமந்தம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீணடிக்கப்படும் இரணைமடுக் குளத்தின் நீர் : அதிகாரிகள் அசமந்தம்!

வீணடிக்கப்படும் இரணைமடுக் குளத்தின் நீர் : அதிகாரிகள் அசமந்தம்!

கிளிநொச்சி, இரணைமடு குளத்தின் நீர் விவசாயப் பண்பாட்டுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், குறித்த நீரினை விவசாயிகள் வீண் விரயம் செய்து வருகின்றமையை அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இரணைமடுக் குளத்தின் கீழ் விவசாயத்தை மேற்கொள்ளும் பன்னங்கண்டி காமக்கார அமைப்பிற்கு உட்பட்ட பரந்தன் முல்லை வீதியின் நான்காவது மைல்கலலை; அண்மித்த பகுதியில் உள்ள நெல் வயல்களுக்கு பாய்ச்சப்படுகின்ற நீரையே சிலர் வீண் விரயம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விவசாயம் மேற்கோள்ளாத வயல்களுக்கும் அநாவசியமாக நீரினை பாய்ச்ச்சி விரயமாக்குவதும் அவதானிக்க முடிகின்றது.

இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் சடுதியாக குறைந்து வருகின்றமையால் நெல் அறுவடை காலம் வரைக்கும் விவசாயிகளுக்கு குளத்தின் நீர் போதியளவுக்கு வழங்க முடியாமல் போய்விடும் என்று விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

இவ்வாறான செயற்பாடுகளை உரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என அப்பிரதேச விவாசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

https://athavannews.com/2023/1338031

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தண்ணீரின் அருமை தெரியாதவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அரச அதிகாரிகளுக்கு மாதம் முடிய சம்பளம், வாகனம், வீடு வசதி , சில வேளைகளில் கிம்பளமும் கிடைக்கிறது. எதுக்கு கவலை படுவான். பின்னர் காணி பிடிக்கலாம் , விவசாயமும் செய்யலாம்.

சுயநல அதிகாரிகள் இருக்கும்வரைக்கும் நிலைமையை மாற்ற முடியாது. அரச அதிகாரிகளை, திணைக்களன்களை விசாரணை செய்யும் COPA குழுவின் விசாரணைகளை பார்க்கும் போது இது நன்றாக விளங்கும்.

அங்கு முன்னிலையாகும் அதிகாரிகளுக்கு எதுவுமே தெரியாது. இருந்தாலும் அரசாங்கம் அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதுதான் நாட்டின் நிலைமை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Cruso said:

அரச அதிகாரிகளுக்கு மாதம் முடிய சம்பளம், வாகனம், வீடு வசதி , சில வேளைகளில் கிம்பளமும் கிடைக்கிறது. எதுக்கு கவலை படுவான். பின்னர் காணி பிடிக்கலாம் , விவசாயமும் செய்யலாம்.

சுயநல அதிகாரிகள் இருக்கும்வரைக்கும் நிலைமையை மாற்ற முடியாது. அரச அதிகாரிகளை, திணைக்களன்களை விசாரணை செய்யும் COPA குழுவின் விசாரணைகளை பார்க்கும் போது இது நன்றாக விளங்கும்.

அங்கு முன்னிலையாகும் அதிகாரிகளுக்கு எதுவுமே தெரியாது. இருந்தாலும் அரசாங்கம் அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதுதான் நாட்டின் நிலைமை. 

குரூசோ….  COPA குழு என்பது என்ன?
இது எப்ப இருந்து இயங்குகின்றது? ஏன்…. ஆரம்பிக்கப் பட்டது?
இந்தக் குழுவில் தமிழர் உள்ளார்களா?
இதன் அறிக்கைகள் பாரபட்சம் இல்லாததா?
இது வெளியிடும் குறைபாடுகளை…. அரசாங்கம் இன, மத, மொழி, அரசியல் தலையீடு இன்றி நிவர்த்தி செய்யப் படுமா?….
போன்ற கேள்விகளுக்கு…. உங்களுக்கு நேரம் இருக்கும் போது பதில் தாருங்களேன். பலரும் அறியக் கூடியதாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

குரூசோ….  COPA குழு என்பது என்ன?
இது எப்ப இருந்து இயங்குகின்றது? ஏன்…. ஆரம்பிக்கப் பட்டது?
இந்தக் குழுவில் தமிழர் உள்ளார்களா?
இதன் அறிக்கைகள் பாரபட்சம் இல்லாததா?
இது வெளியிடும் குறைபாடுகளை…. அரசாங்கம் இன, மத, மொழி, அரசியல் தலையீடு இன்றி நிவர்த்தி செய்யப் படுமா?….
போன்ற கேள்விகளுக்கு…. உங்களுக்கு நேரம் இருக்கும் போது பதில் தாருங்களேன். பலரும் அறியக் கூடியதாக இருக்கும்.

இலங்கை பாராளுமன்றத்தில் பல பாராளுமன்ற தெரிவு குழுக்கலிருக்கின்றது. இதில் ஆளும், எதிர்கட்சிகளைக்கொண்ட எல்லா இனத்தவரும் அங்கத்தவராக இருப்பார்கள்.

இந்த குழுக்கள் பல இருந்தாலும் COPA , COPE , COPF போன்றவைதான் முக்கியத்துவம் பெறுகின்றது. 
இங்கு COPF முக்கியமாக நிதி ஒதுக்கீட்டுக்கான அங்கீகாரத்தை வழங்குவதால் முக்கிடத்துவம் பெறுவதுடன், COPA , COPE ஆகிய இரண்டும் கணக்காய்வாளர் நாயகத்தின் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றது.

COPA - Committee on Public Accounts 
COPE - Committee on Public Enterprises 
COPF - Committee on Public Finance 

கணக்காய்வாளர் நாயகத்தின் (Auditor General ) அறிக்கையை பொறுத்து அரசு சார்பான(Government and Semi Government ) நிறுவனங்கள் , திணைக்களங்கள் விசாரணைக்கு அழைக்கப்படும். இவை முன்னர் செயல்படடாலும் இப்போதுதான் விசாரணைகளை ஊடக நிறுவனங்கள் முன்பாக நடைபெறுகின்றது. இதன் மூலம் அங்கு என்ன நடைபெறுகின்றதை பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

அரச அதிகாரிகள் அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க தடுமாறுவதை பார்க்கும்போது, உண்மையாகவே ஏன் அந்த திணைக்களங்கள் இப்படியான அதிகாரிகளை வைத்து நடத்தப்படுகின்றது என்ற கேள்விகள் ஏட்படும். இருந்தாலும் அந்த அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக இப்போதைக்கு தெரியவில்லை.


பார்க்கும்பொழுது இங்கு பாராபட்ச்சம் காடடபடுவதாக தெரியவில்லை. கூடுதலாக பெரும்பான்மை இனத்தவரே விசாரணைக்கு அழைக்கப்படுகிறார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Cruso said:

இலங்கை பாராளுமன்றத்தில் பல பாராளுமன்ற தெரிவு குழுக்கலிருக்கின்றது. இதில் ஆளும், எதிர்கட்சிகளைக்கொண்ட எல்லா இனத்தவரும் அங்கத்தவராக இருப்பார்கள்.

இந்த குழுக்கள் பல இருந்தாலும் COPA , COPE , COPF போன்றவைதான் முக்கியத்துவம் பெறுகின்றது. 
இங்கு COPF முக்கியமாக நிதி ஒதுக்கீட்டுக்கான அங்கீகாரத்தை வழங்குவதால் முக்கிடத்துவம் பெறுவதுடன், COPA , COPE ஆகிய இரண்டும் கணக்காய்வாளர் நாயகத்தின் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றது.

COPA - Committee on Public Accounts 
COPE - Committee on Public Enterprises 
COPF - Committee on Public Finance 

கணக்காய்வாளர் நாயகத்தின் (Auditor General ) அறிக்கையை பொறுத்து அரசு சார்பான(Government and Semi Government ) நிறுவனங்கள் , திணைக்களங்கள் விசாரணைக்கு அழைக்கப்படும். இவை முன்னர் செயல்படடாலும் இப்போதுதான் விசாரணைகளை ஊடக நிறுவனங்கள் முன்பாக நடைபெறுகின்றது. இதன் மூலம் அங்கு என்ன நடைபெறுகின்றதை பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

அரச அதிகாரிகள் அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க தடுமாறுவதை பார்க்கும்போது, உண்மையாகவே ஏன் அந்த திணைக்களங்கள் இப்படியான அதிகாரிகளை வைத்து நடத்தப்படுகின்றது என்ற கேள்விகள் ஏட்படும். இருந்தாலும் அந்த அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக இப்போதைக்கு தெரியவில்லை.


பார்க்கும்பொழுது இங்கு பாராபட்ச்சம் காடடபடுவதாக தெரியவில்லை. கூடுதலாக பெரும்பான்மை இனத்தவரே விசாரணைக்கு அழைக்கப்படுகிறார்கள். 

பல தகவல்களை… அறியக் கூடியதாக இருந்தது.
மிக்க நன்றி, குரூசோ. 👍🏽 🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.